search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Expansion"

    • ெசன்னிமலை ரோடு-சாஸ்திரி நகர் ரவுண்டானா விரிவாக்கம் செய்ய ரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது
    • நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தகவல் தெரிவித்தார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கிய ரோடுகளில் ஈரோடு-சென்னிமலை ரோடு ஒன்று. ஈரோடு மாநகர் ரெயில் நிலையத்தில் இருந்து ரங்–கம்–பா–ளை–யம், சுற்–று–வட்டச்–சாலை, வெள்ளோடு, பெருந்துறை ரெயில் நிலையம் வழி–யாக இந்த ரோடு செல்கிறது.

    இது எப்போதும் பரப ரப்பும், போக்–கு–வ–ரத்து நெரி சல் மிகுந்–தும் காணப்படும். இந்த ரோட்டில் ஈரோடு மாநகராட்சி பகு–தியிலேயே சாஸ்திரிநகர் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்–ளது. இந்த பாலத்–தின் இணைப்பு சாலை சரி–யாக இல்லை.

    எனவே ஈரோட்டில் இருந்து சாஸ்திரி நகர் செல்–லும் வாகன ஓட்–டி–கள் மிக–வும் சிர–மப்–ப–டு–கின்–ற–னர்.

    குறிப்பாக பாலத்தை யொட்டியே தமிழ்–நாடு அரசு போக்குவ ரத்து க்கழக பணிமனை உள்–ளது. 3 பணி–மனைகள் ஒரே இடத்தில் இயங்கி வருவ தால் தினமும் பணிம னைக்கு வரும் அனைத்து பஸ்களும் இங்கு நிறுத்த ப்படுவதால் போக்குவர த்து நெரிசலும் ஏற்படுகிறது.

    இந்த காரண ங்களால், சாஸ்–திரி நகர் ரெயில்வே மேம்பால த்தில் இருந்து ஈரோடு சாலையை இணை க்கும் வகை–யில் இணைப்பு பாலம் அமைக்க வேண்–டும் என்று பொதும க்களும், வாகன ஓட்–டி–களும் கோரி க்கை விடுத்து வந்தார்கள். இது–தொ–டர்–பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்–டர் ராஜகோ–பால் சுன்–கரா நெடுஞ்–சா–லைத்–துறை அதிகா–ரி–க–ளுக்கு உத்தரவி ட்டார்.

    அதன்–பேரில் நெடுஞ்–சாலைத்–துறை கட்டுமா–னம் மற்–றும் பராமரிப்பு பிரிவு கோட்ட ப்பொறியா–ளர் மாதேஸ்–வ–ரன் ஒரு விளக்க அறிக்–கையை மாவட்ட கலெக்–ட–ருக்–கும், சென்னை கிண்–டி–யில் உள்ள நெடுஞ்சா–லைத்–துறை கட்டுமா–னம் மற்–றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியா–ள–ருக்–கும் அனுப்பி உள்–ளார். அதில் கூறப்பட்டு இருப்–ப–தா–வது:- ஈரோடு மாவட்ட த்தின் முக்–கிய சாலையாக ஈரோடு-சென்னி–மலை ரோடு உள்ளது.

    இங்கு ஒருங்கி ணைந்த சாலை உள்கட்–ட–மைப்பு மேம்பாட்டு திட்டத்–தின் மூலம் சாலை சந்–திப்பு மேம்–பாட்டுப ணிக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்–கப்–பட்டு உள்–ளது. இதற்–கான ஒப்–பந்–தம் முடிவு பெற்று பணிகள் தொடங்கி உள்–ளன. மேலும் சாலை சந்–திப்பு மேம்–பாட்டு பணி க்காக ரோடு அகலப்படுத்–த–வும், மழை –நீர் வடி–கால் அமைக்–க–வும் ஆக்கி–ர–மிப்–பு–கள் அகற்றப்பட்டு வரு–கின்–றன.

    மேம்பாலத்தின் அணுகு சாலை–யில் வாக–னங்–கள் குழப்பமின்–றி–யும், பாதுகாப்பா–க–வும் செல்ல சாலை சந்திப்பு வடிவமைப்பு (ரவுண்டானா) நெடுஞ்–சா–லைத்–துறையின் சாலை பாதுகாப்பு அலகு அதி–கா–ரி–க–ளால் பரி–சீ–லனை செய்யப்பட்டு ஒப்–பு–தல் பெறப்பட்டு இருக்கிறது. இங்கு பரீட்–சார்த்த முறை யில் தற்காலிக தடுப்புகள் மூலம் வாக னங்கள் அனுமதிக்கப்படு–கின்–றன. இங்கு நிரந்தர கட்–ட–மைப்பு மேற்–கொள்–ளப்–படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் பரீட்சார்த்த முறை–யில் தற்கா–லிக ரவு ண்டானா அமைக்–கப்–பட்ட பிறகும், இங்கு போக்கு வரத்து நெரிசல், விபத்–து–கள் ஏற்படுவதை தடுக்கவே ஈரோடு சாலை–யில் இருந்து மேம்–பாலத்–துக்கு இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று பொது–மக்–கள் மற்றும் வாகன ஓட்–டி–கள் கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பி டத்தக்–கது.

    • பஸ் நிலையம் விரிவாக்கப்பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் தொடங்கியது.
    • பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் தொடங்கியதால், 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது. இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் கூறியதாவது:-

    நான் ராமநாதபுரம் மையப்பகுதியில் அமைந் துள்ள புதிய பஸ் நிலையம் கட்டிடங்கள், கடைகள் மற்றும் வளாக பகுதியி லுள்ள சந்தைக்கடை ஆகி யவை சேதமடைந்து காணப் பட்டது. தி.மு.க. அரசு வந்ததும் புதிய பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகளுக்கு அரசானை வெளியிடப்பட்டு, முதற் கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இதில் புதிதாக ஒருங் கிணைந்த பஸ் நிலையம் மற்றும் கடைகள், சந்தை கடைகள், அடிப்படை வசதி கள் அடங்கிய உள்கட்ட மைப்பு வசதிகள் அமைக்கப் பட உள்ளன. இந்நிலையில் சேதமடைந்த பழைய கட்டிடங்கள், 50-க்கும் மேற் பட்ட கடைகள், சந்தைகடை கட்டிடங்கள், கழிப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட வைகளை அகற் றும் பணி உள்ளிட்ட சீர மைப்பு பணிகள் தொடங்கி யுள்ளது. இந்த பணிகள் முழுமை யாக நிறைவடையும் வரை, தற்காலிக பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் சிரம மின்றி சென்று வர போக்கு வரத்து ஏற்பாடு செய்யும்படி கலெக் டர் விஷ்ணுசந்திரன், காதர்பாட்ஷா எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகி யோரிடம் நகராட்சி நிர்வா கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதனையடுத்து நகராட்சி சார்பில் தற்போது ரெயில் வே நிலையம் அருகிலுள்ள பழைய பஸ் நிலையம், மதுரை ரோட்டில் உள்ள மூலக்கொத்தலம் பகுதியி லுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பஸ் கள் வந்து செல்ல மற்றும் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகளை சுறுக்கி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
    • பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணிகள் வரும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்கள், குடியிருப்புகள் கட்டடங்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    சீர்காழி புறவழிச் சாலையில் எருக்கூர் ,கோயில் பத்து, செங்கமேடு, பனமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கப்பணியில் பாலங்கள் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகள் குறுக்கி கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது.

    ஆனால் கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்து போதிய எச்சரிக்கை பலகை திசை மாறி செல்லும் அறிவிப்புபலகை, இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை ஆகியவை முறையாக அமைக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சட்டி வருகின்றனர்.

    இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.

    தொடரும் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு கட்டைகள், எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் ஆகியவற்றை போதிய அளவு அமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சாலை விரிவாக்க பணி முடிந்தும் அந்த இடத்தில் விளக்கு பொருத்தப்படாமல் இருக்கிறது.
    • சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, 11 வது வார்டு கவுன்சிலர், மகாலட்சுமி சதீஷ்குமார் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது, பேராவூரணி மெயின்ரோடு, ஆவணம் ரோடு இணைப்பில் தந்தை பெரியார் சிலை எதிரே ஆவணம் சாலையில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக எரிந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி காரணமாக உயர் மின் கோபுர விளக்கு அகற்றப்பட்டது.

    சாலை விரிவாக்க பணி முடிந்து 8 மாத காலங்கள் ஆகியும் அந்த விளக்கு அவ்விடத்தில் பொருத்தப்படாமல் இருக்கிறது.

    இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவ - மாணவியர்கள், பெண்கள் என அனைவரும் அந்த இடத்தை கடக்கும் பொழுது விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.

    ஆகவே பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த உயர் மின் கோபுர விளக்கை அதே இடத்தில் போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனவும், சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.

    • சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
    • காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.

    இதனால் தஞ்சை தொகுப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தோப்புகுளம், ராமகிருஷ்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, விக்டோரியா நகர், முனிசிபல் காலனி, முத்தமிழ் நகர், சிலப்பதிகார வீதி , பெரியார் நகர், ரெயில் நகர், தமிழ் நகர், ரெட்டிபாளையம் ரோடு, மானோஜிப்பட்டி ரோடு, ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை 3-வது கேட் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தனியார் செல்போன் கடை வரை மெயின் சாலையில் உள்ள வணிக வளாகங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
    • இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    சங்ககிரி:

    சங்ககிரி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின்போது கோட்டப் பொறியாளர் சசிகுமார் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சாலைப்பணியின் ஒப்பந்த–தாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது.

    சங்ககிரி:

    மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதேபோல், மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது. மேலும், ஆலத்தூர்ரெட்டி பாளை யத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில் ரூ.71 லட்சத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை நேற்று, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, சேலம் கண்கா ணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சாலையோரம் இடையூறாக உள்ள மரங்களை உடனே அகற்றி பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, இடைப்பாடி நெடுஞ்சா

    லைத்துறை கோட்டப்பொ றியாளர் சண்முகசுந்தரம், சங்ககிரி உதவி கோட்டப்பொறியாளர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சங்கரன்கோவிலில் புதியபஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
    • இதனால் இன்று முதல் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் மூடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் புதியபஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது செயல்பட்டு வரும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து அதில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளது. இதனால் இன்று முதல் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் மூடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் திருவேங்கடம் சாலையில் நகராட்சி கிழக்குப் பகுதியில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையம் தற்காலிக பஸ் நிலையமாக இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    தற்காலிகபஸ் நிலையத்தில் கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில் பஸ் நிலைய விரிவாக்க பணி முடியும் வரை தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இளையான்குடி நகருக்குள் இருக்கும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது.
    • புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் மனுக் கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

    இளையான்குடியில் ஊருக்கு வெளியே யாருக்கும் பயன் தராத வகையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இளையாங்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும், மக்கள் நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமத்துவபுரத்தை திறந்து வைக்க வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டா லினிடம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் நலக் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சைபுல்லாஹ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில், இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து தற்போதுள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என மக்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கர்நாடகத்தில் வருகிற 12-ந்தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி உறுதிபட கூறியுள்ளார். #Karnataka #CabinetExpansion #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு:

    காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதை கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் வருகிற 10-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது எப்போது? என்பது குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் காங்கிரஸ் சார்பில் 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ஒரு இடங்களும் இருக்கிறது. மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களையும் நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், கர்நாடக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நான் கூட, காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேசி வருகிறேன். மந்திரிசபை விரிவாக்கம் செய்ய கூட்டணி கட்சி தலைவர்களால் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதி. ஒரே நேரத்தில் மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களும் நிரப்பப்படும்.

    கடந்த மாதம் (செப்டம்பர்) மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா வெளிநாட்டு பயணத்தால் அப்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடியாமல் போனது. மாநகராட்சி மேயர் தேர்தல் முடிந்திருப்பதுடன், மேல்-சபைக்கு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதுபோன்ற எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்திருப்பதால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 30 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.  #Karnataka #CabinetExpansion #ChiefMinister #Kumaraswamy 
    புதுவை கோரிமேட்டில் ரூ.100 கோடி செலவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவுபடுத்தப்பட உள்ளது. அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்காக ஆஸ்பத்திரி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை இ.எஸ்.ஐ. நிர்வாகம் கேட்டுள்ளது.

    இந்த நிலையில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் இன்று கோரிமேடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆஸ்பத்திரி முழுவதும் பார்வையிட்ட அவர்கள் பின்னர் ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவைப்படும் நிலத்தையும் பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவையான அரசுக்கு சொந்தமான நிலத்தை கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்றார்.

    கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #KarnatakaCabinet
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைந்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

    இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகா தொடர்பாக இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 என (முதல்வர், துணை முதல்வர் உள்பட) பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இலாகா பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆனது.

    பின்னர் முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேலிடப் பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், வேணுகோபால் ஆகியோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அமைச்சரவை விரிவாக்கம் இறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர்கள் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.



    இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களும், மஜதவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்காத நிலையில், 7 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.#KarnatakaCabinet
    ×