search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new ministers"

    • அமைச்சர்களையும், இலாக்காக்களையும் முடிவு செய்வது முதலமைச்சரின் பொறுப்பு.
    • கலை பண்பாட்டுத் துறையை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு கூடுதலாக ஒதுக்கும் வாய்ப்பும் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கப்பட்டார்.

    புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகன் நியமிக்கப்பட உள்ளார். அவர் விரைவில் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நீக்கப்பட்ட அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன், வீட்டு வசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை பண்பாட்டுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தது.

    மரபாக ஆதிதிராவிடர் நலத்துறை அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு வழங்கப்படும்.

    தற்போது ஆதிதிராவிட சமூகத்தை சேராத திருமுருகன் புதிய அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதனால் ஆதி திராவிடர் நலத்துறையை அவருக்கு ஒதுக்காமல், அதே சமூகத்தை சேர்ந்த பா.ஜனதா அமைச்சர் சாய்.சரவணக்குமாருக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அமைச்சர்களையும், இலாக்காக்களையும் முடிவு செய்வது முதலமைச்சரின் பொறுப்பு. இருப்பினும் கூட்டணி அமைச்சரவை என்பதால் பா.ஜனதா தலைமையிடம் தெரிவித்து, இலாக்காக்களை மாற்றம் செய்ய வேண்டும். அப்படி மாற்றம் செய்யும் பட்சத்தில் சாய்.ஜெ.சரவணன் குமாரிடம் உள்ள ஒரு துறையை புதிய அமைச்சருக்கு ஒதுக்க வேண்டும்.

    இல்லாதபட்சத்தில் முதலமைச்சர் தன்வசமே ஆதிதிராவிடர் நலத்துறையை வைத்துக் கொள்ளலாம்.

    இதுமட்டுமின்றி, சுற்றுலாத்துறை என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் லட்சுமிநாராயணன் வசம் உள்ளது. சுற்றுலாவுடன் கலை பண்பாட்டுத்துறையும் இருந்தால் சுற்றுலா வளர்ச்சி மேம்பாடுகளை செய்வது எளிதாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.

    இதனால் கலை பண்பாட்டுத் துறையை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு கூடுதலாக ஒதுக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்களின் ஒரு சில துறைகளை மாற்றி அமைக்கவும் முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த இலாக்கா மாற்றம் புதிய அமைச்சர் பதவியேற்ற நாளில்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் 13 கேபினட் மந்திரிகள் மற்றும் 10 இணைமந்திரிகள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். #AshokGehlot #Sachinpilot
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக அசோக் கெலாட், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட் பதவி ஏற்றனர்.

    இதையடுத்து ராஜஸ்தானில் புதிய மந்திரிசபை அமைப்பதற்கான ஆலோசனைகள் நடந்தன. 200 சட்டசபை தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் 15 சதவீதம் கணக்குபடி 30 எம்.எல்.ஏ.க்களை மந்திரிகளாக நியமனம் செய்ய முடியும்.

    அந்த அடிப்படையில் புதிய மந்திரிகள் நியமனத்திற்கான பட்டியலை முதல்-மந்திரி அசோக் கெலாட் தயாரித்தார். அந்த பட்டியலில் 40 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.

    அந்த பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது முதல் கட்டமாக மந்திரிசபையில் 23 பேருக்கு இடம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.



    அதில் 22 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். ஒருவர் ராஷ்டீரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர்களது பெயர் பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் நேற்று இரவு டெல்லியில் இருந்து ராஜஸ்தான் திரும்பினார்கள்.

    இன்று மதியம் 12 மணியளவில் தலைநகர் ஜெய்ப்பூரில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. 23 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    23 மந்திரிகளில் 13 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள் ஆவார்கள். 10 பேர் ராஜாங்க மந்திரிகள் ஆவார்கள்.

    புதிதாக பதவி ஏற்ற 23 மந்திரிகளும் இன்றே தங்களது அலுவலகம் சென்று பணிகளை தொடங்கினார்கள். ராஜஸ்தானில் 2-ம் கட்டமாக மேலும் ஒரு சில மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் மந்திரிசபையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் சச்சின் பைலட் மிகவும் தீவிரமாக இருந்தார். 50 சதவீத மந்திரி பதவிகளை கேட்டார். ஆனால் அசோக் கெலாட் அனுபவம் வாய்ந்தவர்களையே மந்திரிகளாக நியமிக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்று உள்ளார்.

    இதனால் ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    காங்கிரஸ் வெற்றி பெற்ற மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை புதிய மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர். #AshokGehlot #Sachinpilot
    ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று தனது மந்திரி சபையை விரிவுபடுத்தினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். #ChandrababuNaidu #Minister #AndhraPradesh
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. அதனை தொடர்ந்து, மாநில ஆட்சியில் கூட்டணி வகித்து வந்த பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறியது.

    இதன் காரணமாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மந்திரி சபையில் பதவி வகித்து வந்த பா.ஜ.க. மந்திரிகள் 2 பேர் கடந்த மார்ச் மாதம் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்த நிலையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று தனது மந்திரி சபையை விரிவுபடுத்தினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பரூக் மற்றும் கிடாரி ஷ்ரவன் குமார் ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

    பரூக், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி. ராமாராவ் மற்றும் தற்போதைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகிய 2 பேரின் மந்திரி சபையிலும் ஏற்கனவே மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார். அதோடு ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் சட்டசபையில் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

    28 வயது என்ஜினீயரான கிடாரி ஷ்ரவன் குமார், கடந்த செப்டம்பர் மாதம் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவின் மகன் ஆவார். இவர் ஆந்திர சட்டசபையில் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #KarnatakaCabinet
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைந்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

    இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகா தொடர்பாக இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 என (முதல்வர், துணை முதல்வர் உள்பட) பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இலாகா பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆனது.

    பின்னர் முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேலிடப் பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், வேணுகோபால் ஆகியோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அமைச்சரவை விரிவாக்கம் இறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர்கள் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.



    இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களும், மஜதவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்காத நிலையில், 7 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.#KarnatakaCabinet
    சவுதி அரேபியா நாட்டின் மந்திரிசபையை விரிவாக்கம் செய்து மன்னர் சல்மான் இன்று உத்தரவிட்டுள்ளார். #Saudiking #Saudinewministers
    ரியாத்: 

    சவுதி அரேபியா நாட்டில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள மன்னர் சல்மான் தீர்மானித்தார். அதேபோல், பழமைவாதத்தில் இருந்து சற்று விலகி, முற்போக்கு பாதையில் நாட்டை முன்னெடுத்து செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, சினிமா திரையரங்கங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கலையரங்கங்கள் உருவாக தொடங்கியுள்ளன. எனவே, இவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, நிர்வகிக்க கலாசாரத்துறை என்ற அமைப்பு  புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.



    இந்த கலாசாரத்துறையின் மந்திரியாக இளவரசர் பதெர் பின் அப்துல்லா பின் முஹம்மத் பின் முஹம்மது பின் பர்ஹான் அல் சவுத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி அலி பின் நாசெர் அல்-காபிஸ் நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் அஹமெத் பின் சுலெய்மான் அல்-ராஹ்ஜி என்பவரை நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளதாக சவுதி மன்னர் மாளிகை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Saudiking #Saudinewministers

    ×