சாலை விரிவாக்க பணியை தலைமை பொறியாளர் ஆய்வு

50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சங்ககிரி அருகே நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை சென்னை- – கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமை பொறியாளர் செல்வன் ஆய்வு  செய்த காட்சி.
சங்ககிரி அருகே நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை சென்னை- – கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமை பொறியாளர் செல்வன் ஆய்வு செய்த காட்சி.
Published on

சங்ககிரி:

சங்ககிரி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின்போது கோட்டப் பொறியாளர் சசிகுமார் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சாலைப்பணியின் ஒப்பந்த–தாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com