search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நிலைய விரிவாக்கம்
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மக்கள் நல கூட்டமைப்பினர் மனு கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தியபோது எடுத்த படம்.

    பஸ் நிலைய விரிவாக்கம்

    • இளையான்குடி நகருக்குள் இருக்கும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது.
    • புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் மனுக் கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

    இளையான்குடியில் ஊருக்கு வெளியே யாருக்கும் பயன் தராத வகையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இளையாங்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும், மக்கள் நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமத்துவபுரத்தை திறந்து வைக்க வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டா லினிடம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் நலக் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சைபுல்லாஹ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில், இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து தற்போதுள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என மக்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×