search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus Stand"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீஸ் அவுட் போஸ்ட், நேர காப்பாளர் அறை ஆகியன அமையவுள்ளது.
    • அனைத்து வளாகங்களிலும் கழிப்பறைகள், குளியல் அறை வசதி அமைக்கப்படவுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் கோவில்வழியில் புதிய பஸ் நிலையம் கட்டப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 3- வது பஸ் நிலையமாக அமையும் இந்த பஸ் நிலையம் 26 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. திருப்பூருக்கு தாராபுரம் வழியாக வந்து செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் வந்து திரும்பும் வகையில் பிரதான வளாகம், தெற்கு, மேற்கு மற்றும் மத்திய வளாகம் ஆகிய பிரிவுகளாக கட்டப்படுகிறது. இதில் மேற்கு வளாகத்தில், 8 பஸ் ரேக்குகள், 15 கடைகள், காத்திருப்பு அறை, போலீஸ் அவுட் போஸ்ட், நேர காப்பாளர் அறை ஆகியன அமையவுள்ளது.

    முதல் தளத்தில் பொருள் பாதுகாப்பு அறை, அறிவிப்பு மையம், கேமரா பதிவு கண்காணிப்பு அறை, நிர்வாக அலுவலகம், ஊழியர் அறை ஆகியன அமையவுள்ளது. தெற்கு வளாகத்தில் 15 பஸ்கள் நிற்கும் வகையிலான ரேக்குகள் மற்றும் 11 கடைகள் அத்துடன் பயணிகள் காத்திருப்பு அறை, ஏ.டி.எம்., அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்டவை அமைகிறது. மேற்கு பகுதியில் அமையும் வளாகம் 5 பஸ் ரேக்குகள் , ஊழியர்கள் அறை மற்றும் சுகாதார பிரிவு அலுவலகம் ஆகியவற்றுடன் கட்டப்படுகிறது. மைய வளாகம் 14 பஸ் ரேக்குகள், 10 கடைகள், நேரக்காப்பாளர் அறை ஆகியவற்றுடன் அமைகிறது.

    மேலும் அனைத்து வளாகங்களிலும் கழிப்பறைகள், குளியல் அறை வசதி அமைக்கப்படவுள்ளது. இவற்றுடன் இரு சக்கர வாகன பார்க்கிங் வளாகமும் இங்கு அமையவுள்ளது. இதையடுத்து பூமி பூஜை நடத்தி பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது. தற்போது இதில் முதல் கட்டமாக மத்திய வளாகம் கட்டுமானம் பெருமளவு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள பஸ் நிலையம் செயல்பாடு பாதிக்காத வகையில், ஒவ்வொரு கட்டமாக பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பூர் மாவட்டம் காங்கயம் மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்ககான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்
    • பஸ் நிலையம் வரும் பயணிகள் இருசக்கர வாகனத்தில் எப்படி நுழைந்து செல்வது என்று மனக்குமறலுடன் சென்று வருகிறார்கள்.

    காங்கயம்:

    ருப்பூர் மாவட்டம் காங்கயம் மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்ககான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் காங்கயம் பஸ் நிலையத்தின் இருபுறமும் சென்னிலை மெயின் ரோடு பிரிவு உள்ளது.

    இதில் தினமும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஏனோ, தானோ என்று நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் இருசக்கர வாகனத்தில் எப்படி நுழைந்து செல்வது என்று மனக்குமறலுடன் சென்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இதனால் சில நேரம் பஸ்சிற்கு வரும் பயணிகள் அவச அவசரமாக ஓடி வரும்போது அங்கு நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் மீது மோதி கீழே விழும் பரிதாப நிலைமை நீடித்து வருகிறது.

    எனவே பயணிகளுக்கு இடையூறாக உள்ள இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் உடனடியாக ஓழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஙகயம் பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காங்கயம் நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர்.
    • கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டு அவற்றின் மூலம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் வெளியூர், உள்ளூர் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையத்துக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும் மழையிலும், வெயிலிலும் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடையை மறைத்து நின்றால் வியாபாரம் பாதிக்கிறது என்று கூறுகிறார்கள். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை நிரந்தமாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை,பெரியகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்வதில்லை.
    • பஸ் நிலையம் முன்பே பயணிகளை நிறுத்தி இறக்கி விட்டு செல்கிறார்கள். இவ்வாறு செல்வதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பஸ் நிலையம் நிலக்கோட்டை மையப் பகுதியான இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழமையான தாலுகாவில் நிலக்கோட்டையும் ஒன்று. கோட்டை பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமப் பகுதிகளில் இருந்து நிலக்கோட்டைக்கு பூ மார்க்கெட் பூ விற்பதற்கும்,

    அன்றாட வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். நிலக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.

    இவ்வாறு வரும் பஸ்களில் திண்டுக்கல் பஸ் மட்டுமே நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்கிறது.மதுரை,பெரியகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்வதில்லை.

    பஸ் நிலையம் முன்பே பயணிகளை நிறுத்தி இறக்கி விட்டு செல்கிறார்கள். இவ்வாறு செல்வதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பஸ்நிலையம் தெரியாமல் அலையும் சூழல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் நிலக்கோட்டை பஸ்நிலையத்தினுள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் நிழற்குடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • பயணிகள் அமரும் இடத்தில் ஒருசிலர் சோம்பேறித்தனமாக அமர்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை டவுன்ஹாலில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வரிசையாக பஸ் நிறுத்த நிழற்குடைகள் உள்ளன. அங்கு ஏராள மான பயணிகள் காத்திருந்து பஸ்ஏறி செல்வது வழக்கம். அதுவும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ -மாணவிகளின் கூட்டம் அலைமோதும்.

    ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், இந்த பகுதிகளில் உள்ள நிழற்குடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    கோவை உக்கடம், ஆத்துப்பாலம், கோவைப்புதூர், மதுக்கரை, குனியமுத்தூர், குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர், சாய்பாபாகாலனி, கணுவாய், துடியலூர், கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம், காந்தி பூங்கா , ஆர் எஸ் புரம் ,காந்திபுரம் காரமடை மற்றும் கோவையின் சுற்றுவட்டார பகுதி அனைத்திற்கும் மேற்கண்ட பஸ் நிறுத்தங்களில் இருந்து வாகன போக்குவரத்து உள்ளது. எனவே அங்கு 24 மணி நேரமும் பயணிகளை பார்க்க முடியும்.

    ஒவ்வொரு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் குறிப்பிட்ட இடத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி 7-ம் நம்பர் பஸ் நிற்கும் இடத்தில் ஒரு நிழற்குடை உள்ளது.

    அது எந்தநேரமும் சோம்பேறிகளின் புகலிட மாக உள்ளது மற்றும் போதை கும்பல் இங்கு வந்து உட்கார்ந்து கொண்டு பீடி-கஞ்சா புகைத்து கொண்டு அங்கேயே படுத்து தூங்குவதை பார்க்க முடிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இது அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பயணிகள் அமரும் இடத்தில் ஒருசிலர் சோம்பேறித்தனமாக அமர்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசி பொழுதை போக்கி வருகின்றனர்.

    போலீசார் ரோந்து வரும்போது அந்த கும்பலை எச்சரிக்கை செய்து அனுப்பி வைப்பர். அதன்பிறகு அவர்கள் மீண்டும் நிழற்குடைக்கு வந்திருந்து ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தைகளை பேசி பொழுதை கழித்து வருகின்றனர். இது பயணிகளுக்கு

    மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாநகரின் மைய பகுதியாக விளங்கும் டவுன்ஹால் பகுதியில் மேற்கண்ட அத்துமீறலுக்கு போலீசார் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படி செய்தால்மட்டுமே பயணிகள் கூச்சமின்றி பேருந்து நிறுத்தத்தில் நிம்மதியாக காத்திருந்து பஸ் ஏறி செல்ல முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.
    • புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சி பொள்ளாச்சி- பழனிச்சாலையில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தினசரி இங்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.நகரப்பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் பேருந்துகள், வெளி மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கோவை- பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாண மாணவ, மாணவிகள் தினசரி இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் செல்கின்றனர்.

    இது தவிர வேலைக்கு செல்பவர்கள், வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், சுற்றுலா பயணிகள் பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அருகில் உள்ள வி.பி.புரத்தில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் வி.பி.புரத்தில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.அனைத்து பணிகளையும் உடனடியாக முடித்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இதன் மூலம் மத்திய பேருந்து நிலையத்தில் நெருக்கடி குறையும். மேலும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கே.என். நேரு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
    • தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் ஸ்டீம் பார்க்கை திறந்து வைக்கின்றனர்.

    தூத்துக்குடி:

    அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் நேரு-கனிமொழி எம்.பி.

    தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு, தி.மு.க. துணைப் பொதுச்செயலளாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

    அந்த வகையில் அன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டான் என். பெரியசாமி திடலில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கே.என். நேரு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    பஸ் நிலையம் திறப்பு

    தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் ஸ்டீம் பார்க்கை திறந்து வைக்கின்றனர். பின்னர் காலை 9 மணிக்கு தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் பள்ளிக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
    • திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வாகனங்கள் வருவதால் நகரப் பகுதியில் குறிப்பாக பஸ் நிலையத்தில் இருந்து மலை அடிவாரம் வரை நெரிசல் ஏற்படுகிறது.

    இதனை தடுக்க திருப்பதி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.650 கோடி செலவில் ஸ்ரீனிவாச சேது என்ற பெயரில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஆட்சி மாறியதும் மறு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது.

    தற்போது ரூ.650 கோடி செலவில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது. இதனை ஆந்திர முதல்- அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

    நாளை முதல் பொதுமக்கள் மேம்பாலத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர். திருப்பதி பஸ் நிலையத்தில் தொடங்கும் இந்த மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    இதன் மூலம் பக்தர்கள் எளிதில் கோவிலுக்கு சென்று வரலாம் இது குறித்து திருப்பதி மாநகராட்சி மேயர் சிரிஷா கூறுகையில்

    தினமும் ஒரு லட்சம் பக்தர்களும் உள்ளூர்வாசிகளும் இந்த மேம்பாலத்தை பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.

    இந்த மேம்பாலம் திருப்பதி நகருக்கே பெருமையை தேடி தரப் போகிறது என்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.
    • பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும். இந்த நிலையில் திங்கட்கிழமை பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin