search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயற்சி- வாலிபர் கைது
    X

    பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயற்சி- வாலிபர் கைது

    • மாரியப்பன் தனது நண்பர் பெருமாள் என்பவருடன் வண்ணார்பேட்டை பஸ்நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக காத்து நின்றார்.
    • பேராட்சி செல்வம் என்பவர் அவர்களிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.

    நெல்லை:

    பாளை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் தனது நண்பர் பெருமாள் என்பவருடன் வண்ணார்பேட்டை பஸ்நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த வண்ணார்பேட்டை கம்பராமாயணம் தெருவை சேர்ந்த பேராட்சி செல்வம் (26) என்பவர் அவர்களிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.

    இதுதொடர்பாக மாரியப்பன் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் வழக்குப்பதிவு செய்து பேராட்சி செல்வத்தை கைது செய்தார்.

    Next Story
    ×