search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traders association meeting"

    • தண்டுபத்து கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாநில அமைப்பாளர் சசிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உடன்குடி ஒன்றிய தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கணேச ஆதித்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் சசிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    உடன்குடி பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி அனல் மின் நிலைய பணிகளில் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வழங்க வேண்டும். உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து நீர் பிடிப்பு குளங்கள் மற்றும் குட்டைகள், ஆறு ஆகிவற்றிற்கு வருடம் தோறும் தண்ணீர் கொண்டு வந்து முழுமையாக நிரப்பி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உடன்குடி நகர தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.

    • நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாக குழு கூட்டம் டவுனில் நடைபெற்றது
    • தென்காசி, நெல்லை நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாக குழு கூட்டம் டவுனில் நடைபெற்றது. தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் முகமது ஹனிபா, கான்முகமது, நாராயணன், பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சந்தி பிள்ளையார் கோவில், காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் சாலை அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பது, வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி, நெல்லை நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×