search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில்  பொங்கல் பரிசு தொகுப்புகள் வினியோகம்
    X

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய போது எடுத்த படம்

    சிவகிரியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வினியோகம்

    • சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
    • சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    முதல்-அமைச்சரின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின்படி சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. சங்க தலைவர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவரும் மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவருமான திருஞானம், சிவகிரி நகர தி.மு.க. செயலாளரும் சங்க இயக்குநருமான டாக்டர் செண்பகவிநாயகம், சங்க இயக்குநர்கள் மாரித்துரை, விநாயகர், திருமூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் முத்துராமலிங்கம், நிர்வாகி செல்லப்பா ஆகியோர் வரவேற்று பேசினர்.

    தென்காசி மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் சிவகிரி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் லட்சுமி ராமன், தி.மு.க. மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் மருதப்பன், மருத்துவர் அணி டாக்டர் சுமதி, நெசவாளர் அணி சி.எஸ்.மணி, மாணவர் அணி சுந்தர வடிவேலு, சங்க முன்னாள் தலைவர் பூமிநாதன், சிவகிரி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, ரத்தின ராஜ், முத்துலட்சுமி தங்கராஜ் மற்றும் நகர தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி செல்வக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×