search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subsidized price"

    • திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இறால் உற்பத்தியாளர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கான"ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்"கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்பிடா), தேசிய நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் 100 மேற்பட்ட இறால் வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

    நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கு ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்" பாதிப்புகள் மற்றும் இந்திய கடல் உணவு ஏற்றுமதியில் அதன் தாக்கம் குறித்து வல்லுனர்களைக் கொண்டு காணொளி வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட இறால் வளர்க்கும் விவசாயிகள் தமிழ்நாட்டில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் தங்களுக்கு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் வழங்குவது போல் இறால் உற்பத்தியாளர்களுக்கும் டீசல் மற்றும் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும்.

    இயற்கை பேரிடரில் இறால் உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் இணைக்க வேண்டும்.

    இறால் உற்பத்தியாளர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் எம்பிடா மண்டல துணை இயக்குநர் நரேஷ் விஷ்ணு தம்படா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்,

    அதனை தொடர்ந்து சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகண்ணன்,

    நாகை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், நாகை மாவட்ட இறால் வளர்ப்போர் கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம் மற்றும் செயலாளர் சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இச்சத்து குறைபாடு காரணமாக மகசூல் பல மடங்கு குறைவதுடன் விளைபொருட்களின் தரமும் குறைந்து காணப்படும்.
    • மானிய விலையில் விவசாயிகள் இச்சத்து கலவையினை பயன்படுத்தி சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடித்து, கூடுதல் மகசூல் பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நெல் 10 ஆயிரத்து 557 ஹெக்டேர், தானியம் 56 ஆயிரத்து 932 ஹெக்டேர், பயிறு வகைகள் 18 ஆயிரத்து 792 ஹெக்டேர், எண்ணை வித்துக்கள் 8 ஆயிரத்து 252 ஹெக்டேர், பருத்தி ஆயிரத்து 135 ஹெக்டேர், கரும்பு 2 ஆயிரத்து 960 ஹெக்டேர் என சராசரியாக 98 ஆயிரத்து 628 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பயிர்கள் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும் நுண்ணூட்டங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் பெருவாரியான பகுதிகள் கரிசல் மண் பூமியாகவும், ஓடைக்கல் பூமியாகவும் இருப்பதனால் சுண்ணாம்புச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இதனால் பயிர்களுக்கு அளிக்கப்படும் உரங்கள் முழுமையாக கிடைக்காமல் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும், ஊதா நிற இலைகளுடனும், வளர்ச்சி குன்றி குறைபாட்டுடன் காணப்படுகின்றன. இச்சத்து குறைபாடு காரணமாக மகசூல் பல மடங்கு குறைவதுடன் விளைபொருட்களின் தரமும் குறைந்து காணப்படும்.

    நுண்ணூட்டங்கள் பயிருக்கு குறைந்தளவே தேவைப்பட்டாலும், பயிரின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. நுண்ணூட்டக்கலவை என்பது கால்சியம், மாங்னீசியம், போரான், துத்தநாகம், இரும்பு, மாலிப்டீனியம் போன்ற நுண்ணூட்டங்களை உள்ளடக்கிய கலவை ஆகும்.விதைப்பு செய்தவுடன் பயிறுக்கு தேவையான அளவு உரிய இக்கலவையினை இடும் பொழுது, நுண்ணூட்ட சத்து குறைபாடுகள் நீங்கி பயிரின் மகசூல் பலமடங்கு அதிகரிப்பதுடன் விளைபொருட்களின் தரமும் அதிகரிக்கிறது.

    இந்நுண்ணூட்டங்கள் பயிரின் வகைக்கு ஏற்ப பயிறு நுண்ணூட்ட கலவை, சிறுதானிய நுண்ணூட்டம் வகைப்படுத்தப்படுகின்றன. பயிறு வகை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் 20 கிலோ மணலுடன், நிலக்கடலை மற்றும் தானியப்பயிர்களுக்கு, அதற்குரிய நுண்ணூட்டச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதம் 50 கிலோ மணலுடன் கலந்து, மேலாக தூவ வேண்டும்.

    நுண்ணூட்ட கலவையை இடும்போது மணலுடனோ அல்லது குப்பையுடனோ கலந்து சீராக இடவேண்டும். இத்தகைய கூடுதல் மகசூல் தரும் நுண்ணூட்டங்கள், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள், பயிறுவகை மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் அல்லது ஹெக்டேருக்கு, ரூ.500 மானியத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது. மானிய விலையில் விவசாயிகள் இச்சத்து கலவையினை பயன்படுத்தி சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடித்து, கூடுதல் மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • வீட்டு தோட்டத்தில் வளர்த்து பயிர் செய்வது அனைவருக்கும் விருப்பமான விஷயம்.
    • ஒரு தொகுப்பில் மா ஒட்டு செடி, கொய்யா பதியன், நெல்லி ஒட்டுச்செடி, எலுமிச்சை ஒட்டுச்செடி மற்றும் சீதா செடி உள்ளது.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவருக்கும் பழச்செடிகளை தங்களது வீட்டு தோட்டத்தில் வளர்த்து பயிர் செய்வது ஒரு விருப்பமான விஷயம். குறிப்பாக ஒட்டு செடிகளை வாங்கி நடவு செய்வது அனைவராலும் முடியாத காரியம். ஒட்டுச்செடியின் விலை கூடுதலாகவும் அனைவராலும் எளிதில் வாங்கக்கூடிய விலையில் இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசால் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பழ தொகுப்பு தளை அரசு நிர்ணயித்த மானிய விலையில் வழங்குதல் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு 547 பழச்செடி தொகுப்பு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 5 வகையான பழச்செடிகள் அடங்கிய ஒரு தொகுப்பில் ஒரு மா ஒட்டு செடி, கொய்யா பதியன், நெல்லி ஒட்டுச்செடி, எலுமிச்சை ஒட்டுச்செடி மற்றும் சீதா அடங்கிய தொகுப்பின் முழு விலை ரூ.200 ஆகும்.

    இதில் மானிய விலை ரூபாய் 150 நீங்களாக ரூ. 50-ஐ ஒரு ஆதார் கார்டு நகலுடன் செலுத்தி முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அல்லது tnhorticulture.gov.in என்ற இணையத்தின் வாயிலாகவும் பதிவு செய்து மானியம் பெற்று பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்
    • விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை, மூலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.4,.6 லட்சம் அரசு மான்யத்தில் ரூ.1,70 ஆயிரம் மதிப்புள்ள பவர் டில்லர்கள் இரண்டு விவசாய் பயனாளிகளுக்கு திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து பேசினார்.

    வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ரா.ஆனந்தன் வரவேற்றார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர். வளர்மதி, மாவட்ட, வேளாண்மை துணை இயக்குநர்.பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை).ராமச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டிராக்டர், ரோட்டோவேட்டர், விசைத் தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
    • தார்பாலின், விசைத்தெளிப்பான் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

    திருப்பூர்:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டிராக்டர், ரோட்டோவேட்டர், விசைத் தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவை விவசாயிகளுக்கு பயன் தருகிறதா, திட்டத்தை வரும் ஆண்டுகளிலும் தொடரலாமா என்பது தொடர்பாக கள ஆய்வு மூலம் அறிந்து அறிக்கை சமர்பிக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தலைமையில், பொங்கலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொம்முராஜூ, வேளாண்மை அலுவலர் தனவேந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரஞ்சித்குமார், மஹேந்திர பிரியா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அவ்வகையில், பொங்கலூர் வட்டாரம், கேத்தனூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவருக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட சுழல் கலப்பை, வாலிபாளையம் மற்றும் வி.சுள்ளிபாளையம் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்கப்பட்ட தார்பாலின், விசைத்தெளிப்பான் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

    பண்ணை கருவிகள் பலனளிக்கிறது. வரும் ஆண்டுகளிலும் மானிய விலையில் பண்ணைக்கருவிகள் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர் என உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தெரிவித்தார். 

    • ரூ.85 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக் டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு அரசு வேளாண் மைப்பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி 2021-22 திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங் களில் பவர் டில்லர் (விசை உழுவை எந்திரம்) மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    சிறு, குறு, மகளிர், ஆதிதிரா விடர், பழங்குடியினர் விவசா யிகளுக்கு 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

    மேலும், ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானிய தொகை ஒதுக்கீடு பெற்று அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

    மேற்படி மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், திருப்பத்தூர் சிவ சக்தி நகரில் புதுப்பேட்டை சாலையில் உள்ள வேளாண் மைப் பொறியியல் துறை அலு வலகத்தை அணுகி விண்ணப்பத்துடன் சிட்டா அடங்கல் சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆவ ணங்களை இணைத்து சமர்ப் பிக்க வேண்டும். மேற்படி மானியம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது
    • 200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ருட்டி வட்டார விவசாயிகளுக்கு கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்தி, பாண்டுசட்டி போன்ற உபகரண ங்களுடன் வரப்பில் சாகுபடி செய்ய உளுந்து விதைகள், ஜிப்சம், ஜிங்க்சல்பேட், தார்ப்பாய்கள் போன்ற வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது என பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ளநடப்பு வருடத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண்மை இடுபொருட்கள் மானியத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பண்ருட்டி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் கடப்பாரை, மண்வெட்டி, களைக் கொத்தி மற்றும் பாண்டு சட்டி உள்ளிட்ட வேளாண் கருவிகள் கொண்ட தொகுப்புகள் 357 விவசாய குடும்பங்களுக்கு ஒரு தொகுப்பு ரூ.1500 மானியத்தில் வழங்கப்படுகிறது. 

    மேலும் 622 ஏக்கர் நிலத்தில் வரப்பில் சாகுபடி செய்யக்கூடிய வகையில் உளுந்து விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஜிப்சம் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 374 ஏக்கர் நிலப்பரப்பில் இடக்கூடிய வகையில் ஏக்கர் ஒன்றுக்கு பத்து கிலோ ஜிங்சல்பேட் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. 104 தார்பாய்கள் ஒரு தார்ப்பாய் ரூ.830 மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து பராமரிக்க கூடிய வகையில் பண்ருட்டி வட்டத்தில் 30,000 மரக்கன்றுகள் ஒரு மரக்கன்று ரூ.15 வீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    இதில் தேக்கு, மகாகனி,குமிழ் போன்ற மர வேலைக்கு தகுதியுடைய மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி உழவன் செயலில் பதிவு செய்து பண்ருட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்று பயனடைய பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

    • மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் மா ஒட்டுச்செடிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    முக்கனிகளில் முதலிடத்திலுள்ள மாம்பழம் உற்பத்தி 55 சதவீதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.மா சாகுபடிக்கு நல்ல வடிகாலுடன் கூடிய செம்மண் ஏற்றதாகும். ஜூலை முதல் டிசம்பர் வரை மா சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும்.தமிழகத்தில் நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரம், அல்போன்சா, ஹி மாயூதீன், மல்கோவா ஆகிய ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

    மா சாகுபடிக்கு முன் நிலத்தை நன்கு உழவு செய்து தலா ஒரு மீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் தோண்டி குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரம் மற்றும் மேல் மண் உரம் நன்கு கலந்து குழியின் முக்கால் பாகம் வரை மூடி ஒட்டுக்கட்டிய செடிகளை நட வேண்டும்.செடிக்கு செடி, 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை அடர் நடவு முறையில் அல்போன்சா, பங்கனபள்ளி மல்லிகா போன்ற ரகங்கள் நடலாம். மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.தழை, மணி சாம்பல் சத்து கொண்ட உரங்களை செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் இட வேண்டும். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும்.

    மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் மா செடிகள் வழங்கப்படுகிறது.

    சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787; நித்யராஜ் 63821 29721 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார். 

    • புதிய ரகமான விஜிடி 1 எனப்படும் வைகை டேம் 1 நெல் ரகமானது மிகுந்த சிறப்பு பெற்றது.
    • அரவைத் திறன் 66 சதவீதம் உள்ளதால் இந்த ரகம் நெல் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் பிரதான பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 7000 ஏக்கர் பரப்பில் நெல் அரிசிக்காகவும், விதைக்காகவும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நீண்ட காலங்களாக ஒரு போகம் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த நெல் கடந்த 3 வருடங்களாக குறுவை மற்றும் சம்பா உள்பட 3 பருவங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக நெல்லில் குறுகிய கால ரகங்கள் மற்றும் நடுத்தர வயது, நீண்ட கால வயதுடைய ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. புதிய ரகமான விஜிடி 1 எனப்படும் வைகை டேம் 1 நெல் ரகமானது மிகுந்த சிறப்பு பெற்றது. ஏடிடி43 மற்றும் பிரியாணி அரிசி என அழைக்கப்படும் சீரக சம்பா ரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த நெல் ரகமானது 2019-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நெல் ஆராய்ச்சி நிலையம் (வைகை டேம்) ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

    சுமார் 130 நாட்கள் வயதுடைய இந்த ரகமானது சம்பா மற்றும் பின் சம்பா பருவத்திற்கு மிகவும் ஏற்ற ரகமாகும். மகசூல் சராசரியாக ஏக்கருக்கு 2,350 கிலோ வரை கிடைக்கிறது. இந்த மகசூல் சீரக சம்பா ரகத்தை விட 33 சதவீதம் அதிகமாகும். அரவைத் திறன் 66 சதவீதம் உள்ளதால் இந்த ரகம் நெல் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ரகத்தின் அரிசி, பிரியாணி மற்றும் குஸ்கா செய்வதற்கு உகந்தது.

    அத்துடன் இந்த ரகமானது இலைச்சுருட்டுப் புழு, குலை நோய் மற்றும் செம்புள்ளி நோய் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. கடந்த குறுவை சாகுபடிக்காக சோழமாதேவி விவசாயிகள் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த விஜிடி 1 எனப்படும் இந்த ரக விதைகளைக் கொண்டு சாகுபடி செய்தனர். அந்த விவசாயிகள் இது சீரக சம்பா ரகத்திற்கு மாற்றாக இருப்பதாக தங்களது திருப்தியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

    மடத்துக்குளம் வட்டாரம் பாப்பான்குளத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் விஜிடி1 ரக வல்லுனர் விதையைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆதார நிலை 1 விதைகள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த விதைகளைப்பெற்று பயன்பெறுமாறு மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    • பயறு வகைகள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
    • நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதன் தலைமை வகித்தாா்.இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி வட்டாரச் செயலாளா் கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி சோளவிதைப்பு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் விதைப்புக்காக நிகழாண்டு தனியாா் விற்பனை நிலையங்களில் விதைசோளம் கிலோ ரூ.60 முதல் ரூ.85 வரையிலும், பயறு வகைகள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.தற்போது டீசல் விலை அதிகரித்துள்ளதால் டிராக்டா்களுக்கான வாடகை கட்டணமும் அதிகரித்து விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனா்.ஆகவே, மானாவாரி விதைப்புக்காக வேளாண் துறை மூலமாக விதைசோளம், பயறு வகைகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி பேரூராட்சி 7 -வது வாா்டு உறுப்பினா் கு.சரஸ்வதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -ஊத்துக்குளி டவுனில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக இரு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த இரு கடைகளும் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு சொந்தமான வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.ஆகவே நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுமாா் 4 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்களுக்கு ஒரு மடைவிட்டு ஒரு மடை தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

    அதிலும் திருப்பூா், பல்லடம், காங்கயம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீா் முறையாக வருவதில்லை. இது தொடா்பாக அப்பகுதி விவசாயிகள் ஏராளமான மனுக்களை கொடுத்தும் பலனளிக்கவில்லை.இந்நிலையில், பிஏபி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்துக்கு போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், வட்டாட்சியா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×