search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farm Implements"

    • டிராக்டர், ரோட்டோவேட்டர், விசைத் தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
    • தார்பாலின், விசைத்தெளிப்பான் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

    திருப்பூர்:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டிராக்டர், ரோட்டோவேட்டர், விசைத் தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவை விவசாயிகளுக்கு பயன் தருகிறதா, திட்டத்தை வரும் ஆண்டுகளிலும் தொடரலாமா என்பது தொடர்பாக கள ஆய்வு மூலம் அறிந்து அறிக்கை சமர்பிக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தலைமையில், பொங்கலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொம்முராஜூ, வேளாண்மை அலுவலர் தனவேந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரஞ்சித்குமார், மஹேந்திர பிரியா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அவ்வகையில், பொங்கலூர் வட்டாரம், கேத்தனூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவருக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட சுழல் கலப்பை, வாலிபாளையம் மற்றும் வி.சுள்ளிபாளையம் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்கப்பட்ட தார்பாலின், விசைத்தெளிப்பான் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

    பண்ணை கருவிகள் பலனளிக்கிறது. வரும் ஆண்டுகளிலும் மானிய விலையில் பண்ணைக்கருவிகள் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர் என உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தெரிவித்தார். 

    • வேளாண்மை பண்ணை கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • 6 பொருட்கள் கொண்ட தொகுப்பாக 50 சதவிகித மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது.

    உடுமலை :

    உடுமலை வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக்கருவிகள் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    உடுமலை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை பண்ணை கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த தொகுப்பில் 1 கடப்பாரை, 1 இரும்பு சட்டி ,1 களைக்கொத்து,1 மண்வெட்டி,2 கதிர் அருவாள் என மொத்தம் 6 பொருட்கள் கொண்ட தொகுப்பாக 50 சதவிகித மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் சின்ன குமாரபாளையம்,குருவப்ப நாயக்கனூர்,மொடக்குப்பட்டி,தீபாலப்பட்டி,கணக்கம்பாளையம்,கண்ணமநாயக்கனூர்,சின்னவீரன்பட்டி,ஆலாம்பாளையம்,ஜிலோபநாயக்கன்பாளையம்,தின்னப்பட்டி,குறுஞ்சேரி,வடபூதனம் ஆகிய 12 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு 300 தொகுப்புகளும்,மற்ற ஊராட்சிகளுக்கு 30 தொகுப்புகளும் ஆக மொத்தம் 330 தொகுப்புகள் 4.95 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

    ×