search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக்கருவிகள்
    X

    கோப்புபடம்.

    விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக்கருவிகள்

    • வேளாண்மை பண்ணை கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • 6 பொருட்கள் கொண்ட தொகுப்பாக 50 சதவிகித மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது.

    உடுமலை :

    உடுமலை வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக்கருவிகள் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    உடுமலை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை பண்ணை கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த தொகுப்பில் 1 கடப்பாரை, 1 இரும்பு சட்டி ,1 களைக்கொத்து,1 மண்வெட்டி,2 கதிர் அருவாள் என மொத்தம் 6 பொருட்கள் கொண்ட தொகுப்பாக 50 சதவிகித மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் சின்ன குமாரபாளையம்,குருவப்ப நாயக்கனூர்,மொடக்குப்பட்டி,தீபாலப்பட்டி,கணக்கம்பாளையம்,கண்ணமநாயக்கனூர்,சின்னவீரன்பட்டி,ஆலாம்பாளையம்,ஜிலோபநாயக்கன்பாளையம்,தின்னப்பட்டி,குறுஞ்சேரி,வடபூதனம் ஆகிய 12 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு 300 தொகுப்புகளும்,மற்ற ஊராட்சிகளுக்கு 30 தொகுப்புகளும் ஆக மொத்தம் 330 தொகுப்புகள் 4.95 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

    Next Story
    ×