விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்

ரூ.85 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்கலெக்டர் தகவல்
விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக் டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு வேளாண் மைப்பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி 2021-22 திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங் களில் பவர் டில்லர் (விசை உழுவை எந்திரம்) மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

சிறு, குறு, மகளிர், ஆதிதிரா விடர், பழங்குடியினர் விவசா யிகளுக்கு 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானிய தொகை ஒதுக்கீடு பெற்று அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

மேற்படி மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், திருப்பத்தூர் சிவ சக்தி நகரில் புதுப்பேட்டை சாலையில் உள்ள வேளாண் மைப் பொறியியல் துறை அலு வலகத்தை அணுகி விண்ணப்பத்துடன் சிட்டா அடங்கல் சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆவ ணங்களை இணைத்து சமர்ப் பிக்க வேண்டும். மேற்படி மானியம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com