search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl student"

    கல்லிடைக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கல்லிடைக்குறிச்சி:

     கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி நடுத்தெரு சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இந்திராணி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில்  3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று வழங்கம் போல  கல்லூரி சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு  ெநல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

     இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இந்திராணி கல்லூரி படிப்பு முடித்ததும் மேல்படிப்பு படிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    ஆனால் தற்போது குடும்ப பொருளாதார சூழ்நிலையில் முடியாது என பெற்றோர் கூறிஉள்ளனர். இதில் மனமுடைந்த இந்திராணி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என  போலீசார் கருதுகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×