search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPEECH COMPETITION"

    • நேரு பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

    கரூர்

    கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் 6-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் 6-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்படுகிறது.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

    மகாத்மா காந்தி பேச்சுப்போட்டிக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளிலும்,

    ஜவகர்லால் நேரு பேச்சுப்போட்டிக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவு கொள்கை ஆகிய தலைப்புகளிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணைஇயக்குனர் வழியாக இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டரால் பரிசுகள் வழங்கப்படும்.

    • சிவகங்கை அருகே குழந்தைகள் தினவிழா பேச்சு போட்டி நடந்தது.
    • 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. 'பெண் குழந்தைகளை காப்போம்', பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல் பரிசு 5 பேரும், 2-ம் பரிசு 5 பேருக்கும், 3-ம் பரிசு 7 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 1-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் வகுப்பு ஆசிரியர் நீலகேசி பரிசுகள் வழங்கினார். அதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் காந்தி பிறந்த நாளையொட்டி

    வருகிற 31-ந்தேதியும், நேரு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் 3-ந்தேதியும் காலை 9.30 மணிக்கு நெல்லை அரசு மேல்நிலைப் பள்ளியில் (டவுன்) நடக்கிறது.

    காந்தி பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் பள்ளி மாணவர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள்,வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள் என்ற தலைப்பிலும், கல்லூரிகளுக்கு காந்தியடி கள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறு கிறது.

    நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளிகளுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், கல்லூரிகளுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீலக் கொள்கை, நேரு வின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்பு களில் போட்டி நடைபெறும்.

    நெல்லை மாவட்ட அளவில் நடக்கும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றித ழும் வழங்கப்படும்.

    போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    நெல்லை மாவட்ட அளவில் நடக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

    மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவல கத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண்: 0462 2502521) தொடர்பு கொள்ளலாம்.

    நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை ஏற்பாடு
    • போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் வருகிற 27-ந் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப அறிவுறுத்தல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா, பெரியார் பிறந்தநாளை யொட்டி வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட உள்ளது.

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் காலை 10 மணிக்கு இந்த போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புடன் திறமையை வெளிப்ப டுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து, 2 பேருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடை பெறும் நேரத்தில் மாண வர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப் பெறுவர்.

    எனவே தரப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

    மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் பரிந்து ரையுடன் ஒப்பமும் பெற்று வருகிற 27-ந் தேதிக்கு ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

    இந்த போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இப்போட்டியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
    • மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறும் மாணவருக்கு பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழா தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு குறுக்குச்சாலையில் உள்ள கீதாஜீவன் கலை, அறிவியல் கல்லூரியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற இருக்கிறது.

    இப்போட்டியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் கலந்து கொள்ளலாம். தொழில்நுட்ப கல்விக்கு தோள்கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழினத்தலைவர், திராவிட மாடலும், திறன் மிக்க கல்வியும், தெற்குச் சூரியன், கலைஞரும், தமிழும் ஆகிய 5 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.

    மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசும், கேடயமும் வழங்கப்படும்.

    மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியிலும், மண்டல அளவில் வெற்றிபெறும் மாணவர்கள் மாநில அளவிலும் நடைபெறும் பேச்சுப் போட்டியிலும் பங்கு பெறலாம். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறும் மாணவருக்கு பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

    இந்நிகழ்ச்சியானது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் மாவட்ட, மாநகர பொறியாளரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. மாநகர பொறியாளரணி அமைப்பாளர் ரூபன் நன்றி கூறுகிறார்.

    போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் (நான்) பரிசுகள் வழங்க உள்ளார்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பொறியாளரணி துணை செயலாளர் பிரதீப் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

    எனவே இந்நிகழ்ச்சியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள் போட்டியில் பங்கு கொள்ள அழைக்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    • தந்தை பெரியார் என்ற தலைப்பில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டி கடந்த 10-ந்தேதி நடந்தது.
    • இப்போட்டியில் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி பாலமுகனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் பெற்றார்.

    செங்கோட்டை:

    தென்காசி ஐ.சி.ஐ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ் வளா்ச்சித்துறை சார்பில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டி கடந்த 10-ந்தேதி நடந்தது. இப்போட்டியில் நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி பாலமுகனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் பெற்றார்.

    இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியா் சுதாநந்தினி பள்ளியின் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். வெற்றி பெற்ற மாணவியையும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியா் பிரபாகரன், அதற்கு உறுதுணையாக இருந்த லதா ஆகியோரை பள்ளி நிர்வாகி கணேஷ்ராம், பள்ளிச்செயலா் தம்புசாமி, பள்ளிக்குழு உறுப்பினா் மணிகண்டன், ஆசிரியா்-ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

    • சேது பாஸ்கரா மேல்நிலைப்பள்ளி பேச்சுபோட்டி நடந்தது.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கண்டரமாணிக்கம் கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட டாக்டர் சேது குமணன். இவர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறு வனங்களையும், கல்லூரிகளையும், வோளாண்மை ஆராய்ச்சி மையங்களை நிறுவி ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக சென்னை அம்பத்தூர் பகுதியில் கடந்த 32 வருடங்களுக்கு முன்பு 8 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்விக்கூடம் நாளடைவில் நிறை நிலை மேல்நிலைப் பள்ளியாக மாறியுள்ளது. இன்று 8 ஆயிரம் மாணவர்களை கொண்ட பெரும் கல்வி குழுமமாக செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளி நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாக பெண்மணி வேலு நாச்சியார் குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எழுமின் உலக அமைப்பு நிறுவனர் ஜெகத் காஸ்பர் ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

    தொடர்ந்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பள்ளி தேர்வுகளை எப்படி கையாளுவது குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 11-ந் தேதி பள்ளி, கல்லூரியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
    • ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி விருது நகரில் வருகிற 11-ந் தேதி பள்ளி கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப் படும்.

    போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பான பேச்சு திறனை வெளிப்படுத்தும் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2ஆயிரம் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

    ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மாணவ-மாணவி களிடையே பேச்சுப் போட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 15ந் தேதி காலை 1 0 மணி முதல் நடை பெறவுள்ளது.
    • போட்டிக்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட ப்பட்டது.

    இவ்வறிவிப்பின்படி நிகழாண்டில் (2023-2024) அண்ணா பிறந்தநாளை யொட்டி கல்லூரி களில் பயிலும் மாணவ-மாணவி களிடையே பேச்சுப் போட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 15ந் தேதி காலை 1 0 மணி முதல் நடை பெறவுள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.

    அண்ணாவும் மேடைப் பேச்சும், கடமை, கண்ணியம், கட்டு பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெ ல்லும், ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் மாணவ ர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். மேலும், பேச்சு ப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து போட்டி க்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்பு டைய போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மா வட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
    • பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறை யின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகின்ற 4-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் 11- ந் தேதி கலைஞர் பிறந்த நாளை யொட்டி தியாக துருகம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கானப் பேச்சுப் போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற வுள்ளது.

    மேலும் பேச்சுப்பேட்டி யில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த தலா ஒரு மாணவருக்கு சிறப்புப் பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள் ளார்.

    • வனத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.
    • ஜோசப் ஸ்டாலின் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மேட்டுப்பாளையம்,

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ந்தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்லார் புதூர் உண்டு,உறை விடப்பள்ளியில் வனத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.

    மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முன்னதாக ஜோசப் ஸ்டாலின் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வனவர் முனியாண்டி, பள்ளி நிர்வாகி ஷ்யாம் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.
    • குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட ப்பெற்றுள்ளது.

    அவ்வறிப்பின்படி 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் அம்பேத்கர் பிறந்தநாள்விழா தொடர்பில் கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 20-ந் தேதி கடலூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள்2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கபடவும் உள்ளன. பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவ ர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சு ப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் நேரில் ,அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 19.07.2023-இக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அம்பேத்கர் பிறந்தநாள்விழா பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் பின்வருமாறு:

    பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் அம்பேத்கரின் இளமை பருவம், பூனா உடன்படிக்கை, அய ல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி, பவுத்தத்தை நோக்கி, அம்பேத்கரும் காந்தியடிகளும், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் பங்கு, இந்திய அரசிலமைப்புச் சட்டம், சமூக நீதி என்றால் என்ன, அரசியலமைப்பின் தந்தை, சட்ட மேதை அம்பேத்கர் கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய், பூனா உடன்படிக்கை, புத்தரும் அவரின் தம்மமும், கூட்டாட்சி கோட்பாடும்,பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கர் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பவுத்தமும் பள்ளிப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும்தொடங்கும். இப்போட்டிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×