search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி
    X

    மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் சான்றிதழ் வழங்கினார்.

    மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

    • மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
    • கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 250 கோரிக்கை மனுக்கள் பெற்றார். பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில் சிறந்த 3 விடுதிகளுக்கு கேடயமும், விடுதி களை நல்ல முறையில் நிர்வகிக்கும் காப்பாளருக்கு பரிசுத்தொ கையையும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா, மகாத்மா காந்தி ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    சென்னையில் நடந்த அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இணைப்பில்லம் -கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வைரவன்கோவில் - ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காந்திநகர்- மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கண் பரிசோதனை முகாமை கலெக்டர் தொடங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×