என் மலர்

    நீங்கள் தேடியது "Tamil development"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவையில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
    • மக்கள் நலன் கருதி பல்வேறு புதியத்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவை சங்க தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். புதுவையில் அரசு தமிழ்ச்சிறகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை ஏற்க இயலாது. புதுவை மாநிலத்தில் கடந்த பல வருடங்களாக தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கப்பட வேண்டும் எனத் தமிழறிஞர்கள் போராடிவருகின்றனர்.

    புதுவையில் சமூக நலத்துறை உட்பட பல துறைகள், மக்கள் நலன் கருதி பல்வேறு புதியத்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதுபோல கலை பண்பாட்டுத்துறையிலிருந்து புதியதாக தமிழ்வளர்ச்சித்துறை உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி புதுவை சிந்தனையாளர்கள் பேரவை மற்ற அமைப்புகளுடன் இணைந்து, முதல்-அமைச்சரிடம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனு அளித்தோம்.

    முதல்-அமைச்சர் இதனை மறுபரிசீலனை செய்து புதுவை அரசின் தமிழ்வளர்ச்சித்துறையை உடனே அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம், குஸ்தி, சுருள் வாள் உள்ளிட்ட சிலப்பக்கலைகளை சுற்றி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
    • மூவரின் சிலைகளு–க்கு செய்யப்ப ட்டிருந்த சிறப்பு அலங்கா ரத்தினை பார்வையிட்டு வணங்கினார்.

    சீர்காழி:

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை கடந்த 23-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி 28-ம் தேதி மதுரையில் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 4-வது நாளான வெள்ளிக்கிழமை டாக்டர் ராமதாஸ்க்கு மாவட்ட ஆரம்ப எல்லையான கொள்ளிடத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களால் சிறப்பு வரவேற்பு
    அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்திற்கு வருகை புரிந்து டாக்டர்.ராமதாஸ் வாகனத்திலிருந்தவாறே, முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை உள்ளிட்டமூவரின் சிலைகளுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரத்தினை பார்வையிட்டு வணங்கினார்.

    மூவர் மணிமண்டபம் எதிரே கூடியிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் லண்டன்.ரெ.அன்பழகன், சின்னையன், நகர்மன்ற உறுப்பினர் வேல்முருகன், ஜி.வி.முருகவேல், பாலதண்டாயுதம், தேனூர்.ரவி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். முன்னதாக சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம், குஸ்தி, சுருள் வாள் உள்ளிட்ட சிலப்பக்கலைகளை சுற்றி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நூலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை
    • தமிழ் மொழியை வளர்க்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், மதுரையில் உள்ள உலக தமிழ் சங்க கட்டிடத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் கூடிய பிறமொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.

    இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், தேவையான நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும் நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.
    • ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட பள்ளி
    மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.

    இதில் வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஜெ.தர்ஷினி, மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.

    பரிசு பெற்ற மாணவியை பள்ளியின் புரவலர் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    இந்நிகழ்வில் பள்ளியில் நிர்வாக குழு தலைவர் ராஜேஷ், செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், முதல்வர் ஜெகதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×