search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி
    X

    பேச்சுப்போட்டி நடைபெற்ற காட்சி.

    திருப்பூரில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி

    • எண்ணறிவு பயிற்றுவிக்க18 ஆயிரத்து 142 கற்போர் கண்டறியப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
    • 'வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி' எனும் தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பேச்சுப் போட்டி கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவருக்கு, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க, மாவட்டத்தில் 18 ஆயிரத்து 142 கற்போர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி' எனும் தலைப்பில் பேச்சு போட்டி நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அண்ணாதுரை போட்டிகளை துவக்கி வைத்தார். வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, பயிற்றுநர்கள் பங்கேற்று, தங்கள் பேச்சுத்திறனைக் காட்டினர்.

    Next Story
    ×