search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி
    X

    புதுக்கோட்டையில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி

    • புதுக்கோட்டையில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லுரி யில் சிறுபாண்மையினர் ஆணையத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.பின்னர் அமைச்சர் பேசும் போது,தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபா ண்மையினர் நலன் காப்பதற்காக மாநில சிறுபாண்மை நல ஆணை யத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.

    பேச்சுக் கலை என்பது எண்ணங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்றவர்கள் முன்பாக நல்ல வாதமாக எடுத்துவைப்பதற்கு சமமாகும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆற்றல் கொண்டிருப்பா ர்கள். எழுத்தாற்றல், பேச்சாற்றல், இசை, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு ஆற்றல்களில் ஏதேனும் ஒரு ஆற்றலில் சிறந்தவர்களாக மாணவர்கள் இருப்பார்கள். தங்களிடம் உள்ள ஆற்றலை வளர்த்து கொண்டு எதிர் காலத்தில் சிறந்தவர்களாக, வல்லவர் களாக இந்த நாட்டிற்கு பயன்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, பிற்படுத்தப்பட்டோர மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி சிறுபாண்மையினர் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட் அந்தோணிராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





    .




    Next Story
    ×