search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்காணி அருகே பள்ளி மாணவி  தூக்குப்போட்டு தற்கொலை
    X

    முக்காணி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    • மாலையில் மாரிமுத்து வீட்டிற்கு வந்தபோது கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.
    • அதிர்ச்சியடைந்த அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மீனாட்சி தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்.

    ஆத்தூர்:

    முக்காணி அருகே உள்ள குருவிதுறையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மீனாட்சி (வயது15). இவர் முக்கானி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாரிமுத்து மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மீனாட்சி மட்டும் தனியாக இருந்தார். மாலையில் மாரிமுதது வீட்டிற்கு வந்தபோது கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மீனாட்சி தூக்கிட்ட நிலையில் காணப் பட்டார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது ெதாடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×