மூலைக்கரைப்பட்டி அருகே ஆசிரியை பயிற்சி மாணவி மாயம்

கடந்த 15-ந் தேதி நிறுவனத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.இதையடுத்து மாணவியின் தாயார் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
மூலைக்கரைப்பட்டி அருகே ஆசிரியை பயிற்சி மாணவி மாயம்
Published on

களக்காடு:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி முனைஞ்சி பட்டியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 15-ந் தேதி நிறுவனத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com