search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Lock"

    • அங்காளம்மன்கோவிலுக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வந்தார்.
    • பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு சிகிச்சை க்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் காட்டுகூடலூர் சாலையில் வார சந்தை உள்ளது. இந்த வார சந்தைக்கு அருகில் அங்காளம்மன்கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலுக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்று கருவறையின் பூட்டை உடைத்தார். அப்போது பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்த ெபாதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது அங்கு கோவில் கருவறையின் பூட்டை உடைத்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு சிகிச்சை க்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் கோவிலின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது. உடனே ேபாலீசார் வழக்குபதிவு செய்து மணியை கைது செய்தனர்.

    • அழகப்பபுரத்தில் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக பூசாரி சுந்தரமூர்த்தி வந்தார்
    • அப்போது கோவில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கோவில் நடை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    திசையன்விளை:

    திசையன்வினை அருகே உள்ள அழகப்பபுரத்தில் வட பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சுந்தரமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கோவில் நடை திறந்துகிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க பொட்டு செயின், தங்ககாசு, தங்ககம்மல், வெள்ளி கிரிடம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா முத்துசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ×