என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் கொள்ளை"

    • வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
    • வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் வேணி (வயது 41). இவருடன் அவரது வயதான தாயாரும் தங்கியுள்ளார். இந்தநிலையில் இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு மதுரை சென்றிருந்தார். அங்கு உறவினர்கள் சார்பில் பாண்டி கோவிலில் நடை பெற்ற கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று நள்ளிரவில் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேணி, அச்சத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறைகளில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பூட்டியிருந்த வீட்டில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சாவித்திரி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் குளித்தலை பகுதியில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் தாளாளராகவும் உள்ளார். தற்போது இவர்கள் தங்களது வீட்டை புதுப்பித்து கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கருணநிதி குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். பின்னர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு வந்தனர். பின்னர் நள்ளிரவில் அனைவரும் தூங்கச் சென்றனர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் இவர்களது வீட்டின் பின்பகுதி வழியாக மர்ம 3 நபர்கள் நுழைந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு சென்றனர்.

    சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அவரது இளைய மகள் பல் மருத்துவர் அபர்ணா விழித்து பார்த்தார். அப்போது 3 பேர் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். உடனே மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். சத்தம் கேட்டு கருணநிதி, சாவித்திரி ஆகியோர் அங்கு வந்தனர். உடனே கொள்ளையர்கள் அபர்ணாவை அரிவாளால் தாக்கினர். உடனே தாய் சாவித்திரி தடுத்தார். இதில் அபர்ணா, சாவித்திரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    பின்னர் கொள்ளையர் கத்தி, அரிவாள் முனையில் அங்கு இருந்த ரூ. 9 லட்சம் மற்றும் 31 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இது குறித்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என்பதற்காக அவர்கள் 3 பேரின் செல்போன்களையும் பறித்தனர். பின்னர் கொள்ளையர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி கருணாநிதி அக்கம்பக்கத்தினர் மூலமாக குளித்தலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர் தாக்கியதில் காயம் அடைந்தசாவ்த்திரி, அபர்ணாவை போலீசார் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா விரந்து வந்து விசாரணை நடத்தி னார். கொள்ளையர்கள் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட் வரை மோப்பம் பிடித்தபடி சென்று நின்று விட்டது.

    குளித்தலை நகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள மையப் பகுதியில் அதிகாலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

    • பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை பகுதியைச் சேர்ந்தவர் தங்க நகை வியாபாரி விஜயராஜா (வயது40). இவர் மதுரையில் இருந்து தங்க நகைகளை வாங்கிக்கொண்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தங்க நகை வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.

    சம்பவத்தன்று விஜய ராஜா 1.5 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு காரைக்குடிக்கு புறப்பட்டார். இதற்காக மதுரையில் இருந்து அரசு பஸ்சில் பயணம் செய்த அவர் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து நகை பையுடன் கோவிலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது விஜய ராஜாவை மர்மநபர்கள் காரில் பின் தொடர்ந்து வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது காரை அவர் முன் நிறுத்தி இறங்கிய மர்மநபர்கள் விஜயராஜா கையில் வைத்திருந்த 1.5 நகை கொண்ட பையை பறித்துக் கொண்டனர். விஜயராஜா முயன்றும் நகையை தக்க வைத்துக்கொள்ளவில்லை.

    மர்மநபர்கள் அவரை தாக்கிவிட்டு பணப்பையுடன் அங்கிருந்து தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி போலீஸ் ஏ.எஸ்.பி.யாக புதிதாக பொறுப்பேற்றிருந்த ஆஷிஷ் புனியா, தேவகோட்டை டி.எஸ்.பி. கவுதம், சிவகங்கை ஏ.டி.எஸ்.பி. பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    நகை வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். விஜயராஜா நகையுடன் காரைக்குடிக்கு வருவதை முன்கூட்டியே அறிந்த மர்ம நபர்கள் தான் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கலாம்என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன.
    • வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாநகரில் பாசில் நகரை சோ்ந்தவர் முருகேசன் (வயது 68). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். பாசில்நகர் வீட்டில் முருகேசன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி தனது சொந்த ஊரான திருமயம் அருகே ராங்கியத்திற்கு முருகேசன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். அங்கு இரவு தங்கி விட்டு நேற்று காலை புதுக்கோட்டை பாசில் நகருக்கு முருகேசன் தம்பதியினர் திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன் உள்பக்க கதவும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன. மேலும் 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள், பணம் எல்லாம் காணாமல் போய் இருந்தது. மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், முருகேசனின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். தனது வீட்டில் இருந்த நகைகள் எல்லாவற்றையும் மர்மநபர்கள் அள்ளிச்சென்று விட்டதாக கூறி ராணி கண்ணீர் விட்டு கதறி அழுதார். வீட்டில் 160 பவுன் நகைகளும், ரூ.3 லட்சமும் கொள்ளை போனதாக போலீசாரிடம் முருகேசன் தெரிவித்தார். வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர். அதில் வீட்டில் தனது மனைவி மற்றும் மருமகள்கள் நகைகள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிவிட்டு தப்பிச்சென்று உள்ளனர். வீட்டின் எதிர்பகுதியில் உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் முருகேசனின் வீட்டிற்குள் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சி எதுவும் பதிவாகியுள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் 160 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
    • நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைவீதியில் ராஜஸ்தானை சேர்ந்த சங்கர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 28-ந் தேதி இரவு 7 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சங்கர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சங்கர் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்து வரும் தில்கேஷ், அஜித் ஆகியோர் கடையை திறக்க வந்தனர்.

    அப்போது கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பின்பக்க சுவற்றை மர்ம நபர்கள் துளையிட்டு லாக்கரில் வைத்திருந்த 209 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார்.
    • பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர்.

    இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாலச்சந்திரன் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இவரது மகன் முகுந்த் சந்திரா (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டை பூட்டி விட்டு தந்தையை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின் , கைசெயின் தங்க மணி உள்பட 26½ பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ரொக்க பணம், 2 போட்டோ காமராக்கள், கார் சாவி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் வீட்டிற்கு திரும்பிய முகுந்த் சந்திரா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து ராமநாதபுரம் போலீசார் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    பீளமேடு அருகே உள்ள பாரதி காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 50). இவர் கத்தார் நாட்டில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கடத்த ஜூன் மாதம் தனது வீட்டிற்கு வந்தார்.

    அப்போது அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவைக்கு வந்தார். அப்போது லாக்கரை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

    • அகஸ்டின் பீரோவில் வைத்து இருந்த நகைகளை சரி பார்த்தார்.
    • போலீசார் சமையல் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, கோடம்பாக்கம் அசோகா அவின்யூ பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் பாபு. தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். இவரது மனைவி எலிசபெத். இவர் சென்னை மாநகராட்சியின் 112-வது வார்டு கவுன்சிலர் ஆவார். அகஸ்டின் பீரோவில் வைத்து இருந்த நகைகளை சரி பார்த்தார். அப்போது ரூ.6 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் வைர நகை திடீரென மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அகஸ்டின் பாபு வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பட்டணம் சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). வேன் டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் அந்த பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவர் தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். சம்பவத்தன்று அனைவரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை துணி துவைக்கும் எந்திரத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றனர்.

    இதனை நோட்ட மிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மாலையில் வீட்டிற்கு திரும்பிய சக்திவேல் பீேராவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சீனிவாசன் கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றார்.
    • 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). ரியஸ் எஸ்டேட் புரோக்கர்.

    கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அப்போது சீனிவாசன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    வீட்டிற்கு திரும்பிய சீனிவாசன் கதவு உடைக்க ப்பட்ட திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.இது குறித்து அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த மர்மநபர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • பாக்கியலட்சுமி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சுண்டபாளையம் ஹரிஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் அன்பு சிவா. பேராசிரியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 42). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து கம்மல், செயின், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாக்கியலட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி திருடு போனது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது57), இவர் துணி வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 2-ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி மற்றும் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை விஷ்வேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் கிருஷ்ணன். ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பெற்றோரை பார்ப்பதற்காக செங்கல்பட்டுக்கு சென்றார்.

    அப்போது அரவிந்த் கிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வைர டாலர், மோதிரம், கம்மல் உள்பட 13½ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பி அரவிந்த் கிருஷ்ணன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. ஊழியர் வீட்டில் 13½ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். 

    ×