search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்குடி"

    • காரைக்குடியில் நடந்த அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.வின் 52-ம் தொடக்க விழாவை முன் னிட்டு காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண் டனர்.

    இதில் காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கற்ப கம் இளங்கோ, தேவ கோட்டை நகர்மன்ற தலை வர் சுந்தரலிங்கம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் வெங்களூர் வீரப் பன், அம்மா பேரவை ஊர வயல் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், கோவிலூர் சுப்பிர மணியன், மாவட்ட மகளி ரணி துணை தலைவி சோபியா பிளாரன்ஸ்,

    நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், மகளிரணி நகர செயலாளர் சுலோச்சனா, நகர தலைவி ஆனந்தி, நகர்மன்ற உறுப்பி னர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா சண்முகம், ராதா, கனகவள்ளி, வட்ட கழக செயலாளர்கள் இலைக் கடை சரவணன், மகேஷ், பக்கீர் முகம்மது உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் பாண்டித்துரை.பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியான இவரை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில இலைஞரணி துணைத்தலைவராக அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் ஆசி பெற்று காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

    இதில் காரைக்குடி நகர தலைவர் பாண்டியன், சிவகங்கை மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், இளைஞரணி நகர தலைவர் முத்து பாண்டியராஜா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் ராஜாராமன், சுப்பையா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் பாண்டிய நாராயணன், ஒன்றிய மகளிரணி தலைவி சீத்தாலெட்சுமி, பொதுச் செயலாளர்கள் பழனிக்குமார், மணிக்குமார், ஒன்றிய பொருளாளர் ஆவுடையப்பன், கோட்டை யூர் பேரூராட்சி கவுன்சிலர் திவ்யா பாண்டித்துரை, கானாடுகாத்தான் கவுன்சிலர் குமார், கோட்டை யூர் சோலை, குமரேசன், ரவீந்திரன், நாகஜோதி, அமைப்பு சாரா அணி மணிகண்டன், காரைக்குடி ஆட்டோ பாலா உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேலங்குடி கார்த்திகேயன் நன்றி கூறி னார்.

    ×