search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anniversary"

    • காரைக்குடியில் நடந்த அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.வின் 52-ம் தொடக்க விழாவை முன் னிட்டு காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண் டனர்.

    இதில் காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கற்ப கம் இளங்கோ, தேவ கோட்டை நகர்மன்ற தலை வர் சுந்தரலிங்கம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் வெங்களூர் வீரப் பன், அம்மா பேரவை ஊர வயல் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், கோவிலூர் சுப்பிர மணியன், மாவட்ட மகளி ரணி துணை தலைவி சோபியா பிளாரன்ஸ்,

    நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், மகளிரணி நகர செயலாளர் சுலோச்சனா, நகர தலைவி ஆனந்தி, நகர்மன்ற உறுப்பி னர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா சண்முகம், ராதா, கனகவள்ளி, வட்ட கழக செயலாளர்கள் இலைக் கடை சரவணன், மகேஷ், பக்கீர் முகம்மது உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
    • அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் அ.தி.மு.க. வின் 52-வது ஆண்டு விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், மதுரை கிழக்கு மாவட்ட செயலா ளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் 16 நாள் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் பாண்டுரங்கன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், இளைஞர் அணி வேல்ராஜ், வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர்.குமார், முத்து கிருஷ்ணன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருக்குறள் பேரவை 9-ம் ஆண்டு விழா நடந்தது.
    • சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை 9-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.

    பேரவையின் பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    செயலாளர் நல்லாசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.

    விழா தொடக்கத்தில் துறை சந்தானலெட்சுமி தமிழ் தாய் வாழ்த்தும், வழக்கறிஞர் கிருட்டிணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

    காரைக்கால் அரசு மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் வண்டார்குழலி தொடக்க உரையாற்றினார்.

    வஃக்பு வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யும்மான அப்துல் ரகுமான் மகிழ்உரையும், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பர் நிறைவு பேருரையாற்றினார்.

    அப்போது திருக்குறளை படித்து அதன்படி நடந்து கொண்டால் உலகத்தில் உள்ள அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

    திருக்குறளின் பெருமைகளை புகழ்ந்து பேசினர்.

    பின்னர் உலக திருக்குறள் இயக்கம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் சங்கத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ், பேரவை துணைத் தலைவர் செல்லத்துரை, தேசிய நல்லாசிரியர் மனோகரன், கொள்கை விளக்க செயலாளர்கள் குரளன்பன், ராமலிங்கம், உள்ளீட்ட ஏராளமான தமிழ் பற்றாளர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் முத்துக்கன்னியன் நன்றி கூறினார்.

    • உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த பையூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சாலை பணியாளர் சங்கத்தின் 24-ம் ஆண்டு விழா செய்யாறு கோட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சங்கத் தலைவர் மனோகரன் பங்கேற்று சாலை பணியாளர் சங்க கொடியை ஏற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

    மேலும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    இதில் அரசு ஊழியர்கள் வட்ட தலைவர் பாஸ்கரன்,வட்டக் கிளைச் செயலாளர் பரசுராமன்,ஓய்வூதிய சங்க தலைவர் அமர்தலிங்கம் மற்றும் கோட்டை நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    இறுதியில் சாலை பணியாளர் சங்க நிர்வாகி எழிலன் நன்றி கூறினார்.

    • பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம்.
    • ஒரு காலத்தில் இந்தியாவின் பேச்சை மற்ற நாடுகள் கவனிக்காது, ஆனால் இப்போது நமது பிரதமர் பேசும் போது உலகமே உற்றுப் பார்க்கிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தின் 50-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி அங்கு கட்டப்பட்டுள்ள பொன் விழா அரங்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மடத்தின் தலைவர் சுபுதேந்திர தீர்த்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் உருவானது. பாரதம் உருவான போதே சனாதன தர்மமும் உருவானது. அது வாழையடி வழையாக ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது. அதன் ஒளியும் தலைமுறைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே பாரதம் என்றுதான் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகுதான் ஆங்கிலம்தான் உயர்ந்தது என்றும், அவர்களுடைய கலாச்சாரம்தான் சிறந்தது என்றும் பரப்ப தொடங்கினார்கள்.

    நமது அரசியலமைப்பு வரை படத்தில் கூட குருகுல காட்சிகள்தான் இடம் பெற்று உள்ளன. ஆனால் ஆங்கிலேயர்கள்தான் பிரிவினைவாதங்களை தொடங்கி வைத்தார்கள். 1947-க்கு பிறகு தான் இந்தியாவே உருவானது போல சிலர் சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது.

    நமது இந்த புனிதமான மண்ணில் எத்தனையோ மகான்கள் பிறந்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்.

    ராமானுஜர், அரவிந்தர் அந்த வரிசையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த ராகவேந்திரரும் ஒருவர். அந்த மகான்கள் உலகம் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்று தான் பாடுபட்டார்கள். அதை தான் மக்களிடம் பரப்பினார்கள். பாரதமும், சனாதனதர்மமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதை பிரிக்க முடியாது.

    பாரதம் உயர்ந்தால் சனாதன தர்மமும் உயரும். தாழ்ந்தாக சனாதன தர்மமும் தாழும். சனாதன தர்மம் என்பது எல்லோரும் சமம் என்பதுதான். இதில் வேற்றுமை கிடையாது.

    எல்லோரையும் ஒரே குடும்பமாகதான் சொல்கிறது. மனிதர்கள் நிறத்தில் மாறுபட்டாலும் மனிதர்கள் என்பதை போலத்தான் சனாதன தர்மமும்.

    பாரதம் வலிமையான நாடாக இருக்க வேண்டும். அதற்காகதான் தயாராகி கொண்டு இருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியாவின் பேச்சை மற்ற நாடுகள் கவனிக்காது, ஆனால் இப்போது நமது பிரதமர் பேசும் போது உலகமே உற்றுப் பார்க்கிறது.

    நமது பிரதமர் பாரதத்தின் நாடி துடிப்பை அறிந்து வைத்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது சுதந்திரம் கிடைத்து 100 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

    இதற்கு மடங்கள், மக்கள் எல்லோரது பங்களிப்பும் வேண்டும். ஆன்மீகத்துடன் சேர்ந்தே பாரதம் வளர வேண்டும்.

    தமிழகம் புனிதமான பூமி. சென்னையும் அழகான நகரம். இங்கு ஆங்காங்கே கழிவுநீர் ஓடுகிறது. ஓடைகள் திறந்து கிடக்கிறது. அவைகளையெல்லாம் சீர்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

    நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான சென்னை கிளை உறுப்பினர் சேகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி செயலாளர் திலீபன்ராஜா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தி னர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சபரிநாதன் கலந்து கொண்டார்.

    விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ரூ. ஆயிரம் ரொக்க பரிசை வழங்கினார். தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி சீதாலட்சுமிக்கு கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியர் முருகேசபாண்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. வணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கலாமணிக்கு கல்லூரியின் முன்னாள் நிர்வாகி ராஜசேகரன் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    ஆங்கில பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கவிஇந்திரா, கணிதப்பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி துர்காதேவி, வரலாற்று பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கனகராஜ், அறிவியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவி கள் தேவி, ஜனனி, மேனகா தேவி, கணிப்பொறி பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி காளீஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பின்பு கல்லூரி அளவில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் சந்துருவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி அட்சயாவுக்கும் மாணவன் கார்்த்திக்ராஜாவுக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

    கல்லூரியில் பணிபுரியும் நிர்வாக அலுவலர், முதல்வர் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி செயலாளர் நினைவுப்பரிசு வழங்கினார். முடிவில் பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் மாதேஸ்வரி, முத்துப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    • மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினர்.
    • ம்மாணவ, மாணவிகளுக்கு நாராயண கவி நூல்கள் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை, குட்டைத் திடலில் உள்ள நாராயண கவி நினைவு மணிமண்டபத்தில் நாராயண கவிராயரின் 42 வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பாவலேறு தேன்தமிழ்ப் பாசறை கொழுமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உடுமலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராசா, கனகு, ரங்கநாதன், இராமசாமி, சிவக்குமார்பணி நிறைவு நூலகர் கணேசன், நாராயணகவி மணிமண்டப நூலகர் ரவீந்திரன் மற்றும் முற்போக்கு அமைப்பினர் கலந்து கொண்டு மாலை அணிவித்துமரியாதை அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மணிமண்டப நூலகத்தில் போட்டித் தேர்விற்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு நாராயண கவி நூல்கள் வழங்கப்பட்டது. நிறைவாக கொழுமம் ஆதி நன்றி கூறினார்.

    • சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இரா.சுரேஷ்குமார் விழாவில் கலந்து கொண்டு சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார்.
    • தலா 3 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    பிரபல எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் நடத்தி வரும் கவிதை உறவு அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த நூல்கள் எழுதிய எழுத்தாளர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கி வருகிறது.

    கவிதைகள், மனித நேயம், வாழ்வியல், சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகள், பொது கட்டுரைகள், குழந்தை இலக்கியம், கல்வி, இளைஞர் நலம், ஆளுமை மேம்பாடு, ஆன்மீகம், மத நல்லிணக்கம் உள்பட 10 தலைப்புகளில் சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து இந்த பரிசு வழங்கப்படுகிறது. இந்த பிரிவுகளில் தலா 3 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் கொடுக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 51-வது ஆண்டாக கவிதை உறவு அமைப்பின் ஆண்டுவிழா வருகிற 18-ந்தேதி (வியாழக் கிழமை) தி.நகர் வாணி மகாலில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு தமிழியக்க தலைவர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இரா.சுரேஷ்குமார் விழாவில் கலந்து கொண்டு சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார். முன்னதாக விழா மலரை தொழில் அதிபர் நல்லிகுப்புசாமி வெளியிட தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொள்கிறார்.

    'யாவரும் கேளிர்' என்ற நூலை டாக்டர் ஜெயராஜ மூர்த்தி வெளியிட எவர்வின் பள்ளிகள் நிறுவன தலைவர் புருஷோத்தமன் பெற்றுக் கொள்கிறார். வண்ணமில்லாமல் என்ன வானவில் என்ற நூலை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள் வெளியிட சாந்தகுமாரி சிவகடாட்சம் பெற்றுக் கொள்கிறார்.

    விழாவில் சிறந்த நூல்கள் எழுதிய 29 எழுத் தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.பூரணலிங்கம், புலவர் த.ராமலிங்கம், சோம.வள்ளியப்பன், ரேவதி, தாமரை செந்தூர் பாண்டியன் ஆகியோர் இந்த ஆண்டு பரிசுகள் பெறுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    ஆரூர் தமிழ்நாடன், எஸ்.விஜயகிருஷ்ணன், சு.மதியழகன், தங்கம் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கவிஞர் ஏர்வாடி ராதா கிருஷ்ணன் ஏற்புரை வழங்குகிறார். இறுதியில் வானதி ராமநாதன் நன்றியுரை கூறுகிறார்.

    • ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ம.தி.மு.க. ஒன்றியம் சார்பில் கட்சியின் 30-வது ஆண்டு தொடக்க நடந்தது. பஸ் நிலையம் முன்பு பொங்கல் வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    தெற்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் நாகபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் பொன்ராஜ், திம்மநாதபுரம் வெயில்முத்து, மாயக் கண்ணன், நகரச் செயலாளர்முத்துப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் புதுக்குளம் போஸ், வழிவிட்டான், தேனிச்சாமி, சாந்தி நாகராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்கள் முருகன், பெருமாள், கிருஷ்ணன், கிளைச் செயலாளர்கள் சின்ன முனியாண்டி மோகன் குமார், ராமமூர்த்தி ஜெகன், அய்யரப்பன், கிளாமரம் கிருஷ்ணன், சேதுராஜபுரம் மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அரசு கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. முதல்வர் மணிமேகலா தேவி தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின் பங்கேற்று கலை நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் இணை பேராசிரியர்கள் கணேசுவரி, அந்தோணி செல்வராஜ், மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அறந்தாங்கி நகராட்சி பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது
    • இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ரேணுகா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

    இறுதியில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணை தலைவர் முத்து, வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன், அன்பழகன், நிஸார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் விஸ்வமூர்த்தி, மங்கையர்கரசி, அசாருதீன், இடைநிலை ஆசிரியர் நிர்மல்சகில்தா உள்ளிட்ட ஆசிரியர்கள் அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


    • சோழவந்தானில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    சோழவந்தான

    சோழவந்தான்-வாடிப்பட்டி ரோட்டில் உள்ள எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன் தலைமையில் நடந்தது. எம்.வி.எம் குழும சேர்மன் மணி முத்தையா முன்னிலை வகித்தார்.

    பள்ளி நிர்வாகி எம்.வி. எம்.வள்ளிமயில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் செல்வம் வரவேற்றார். ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கலை நிகழ்ச்சிகள், கராத்தே, சிலம்பம், யோகா நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×