search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.10 crores"

    • திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கட்டுமான பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட பொதுப்பணி த்துறையின் சார்பில் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ10.03கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்பு அவர் கூறியதாவது:-

    திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ3.71கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டுமான பணிகளின் நிலை குறித்தும், காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ1.98கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமான பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    அதேபோன்று காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ4.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ரமணன், உதவி பொறி யாளர் சந்தோஷ் குமார், வட்டாட்சி யர்கள் வெங்க டேசன் (திருப்ப த்தூர்), தங்கமணி (காரை க்குடி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×