search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold jewelry"

    • பிளாட்டினம் அதிக அடர்த்தி கொண்ட உலோகமாகும்.
    • பிளாட்டினம் வைர கற்களுடன் கூடுதல் அழகு சேர்க்கும்.

    'வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் பிளாட்டினம் அதிக அடர்த்தி உலோகமாகும். வெள்ளியைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாட்டினம், வெள்ளியைவிட அதிக பளபளப்பு உடையது. மருத்துவத் துறையிலும், மின்னியல் துறையிலும் பிளாட்டினத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மென்மையான உலோகமான பிளாட்டினத்தைக் கொண்டு எளிதாக எந்த வடிவத்தையும் உருவாக்க முடியும்.

    பிளாட்டினம் ஆக்சிடைசிங் (ஆக்சிஜனேற்றம்) செயல்முறைக்கு உட்படாதது. எனவே இது கருக்காது. அமிலங்களால் பிளாட்டினத்துக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.

    பிளாட்டினம் தற்போது நகைகள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வைரங்கள், ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை பிளாட்டினத்தைக் கொண்டே வடிவமைக்கிறார்கள். பிளாட்டினத்தின் பளபளப்பு தன்மை வைரக் கற்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    பிளாட்டின நகைகளை திருமண நிச்சயதார்த்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிலும், பரிசாக அளிப்பதற்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

    பிளாட்டினம் நகைகளை வாங்குவதற்கு முன்பு அதில் ஹால்மார்க் முத்திரைகள் இருப்பதை கவனிக்க வேண்டும். நகையின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை சரிபார்த்த பின்பே பிளாட்டினம் நகைகளை வாங்க வேண்டும். வாரண்ட்டி, ரிட்டர்ன் பாலிசி போன்ற சேவைகளைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்வது முக்கியமாகும்.

    பழைய பிளாட்டினம் நகைகளை உருக்கி புதிய நகைகளாக உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவில் மாற்றிக்கொள்ள முடியும். நகையை உருக்கும்போது அதன் அளவில் சிறு இழப்புகள் ஏற்படக்கூடும். பிளாட்டினத்தை உருக்கி சுத்தம் செய்து புதிதாக வடிவமைக்க, பயிற்சி பெற்ற கலைஞர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.

    நிதி நெருக்கடி ஏற்படும் நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைப் போலவே பிளாட்டினம் நகைகளையும் அடகு வைத்து தேவையான பணத்தைப் பெற முடியும். நகையின் தூய்மை, எடை மற்றும் தற்போதைய சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிளாட்டினம் நகைகளை மதிப்பிடுவார்கள்.

    மற்ற உலோகங்களைக் காட்டிலும் பிளாட்டினம் அதிக மதிப்பு கொண்டது, அரிதானது. எனவே அதில் மற்ற உலோகங்களின் கலப்பு குறைவாகவே இருக்கும். அரிதாக தங்கத்துடன் சிறப்புக் கலவையாக பிளாட்டினம் கலக்கப்படுகிறது.

     வெள்ளியுடன் ஒப்பிடும்போது பிளாட்டினம் அதிக காலம் நீடிக்கும். விரைவாக அழுக்கு அடையாது. பிளாட்டினத்தை மற்ற பொருட்களால் அரிக்க முடியாது. பிளாட்டினத்தில் தேய்மானம் குறைவாகவே இருக்கும். எனவே விலை உயர்ந்த வைரக்கற்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பிளாட்டினத்தை உபயோகிக்கிறார்கள்.

    பிளாட்டினத்தின் இயற்கையான வெள்ளை நிறம் வைரங்களின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவை வைரத்தின் பளபளப்பையும், பிரகாசத்தையும் அதிகரிக்கும்.

    பிளாட்டினம் நகைகளை அணிவதன் மூலம் நேர்மறை ஆற்றலையும். அதிர்ஷ்டத்தையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. பிளாட்டினத்தின் நீடித்து இருக்கும் தன்மையும், வலிமையும் அதற்கு அதிக வரவேற்பை பெற்றுத் தருகின்றன. வைரங்கள் பதித்த பிளாட்டினம் நகைகள் இளைஞர்களின் விருப்பமாக இருக்கின்றன.

    • சபரி சங்கர் சேலம் சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, நாமக்கல் , திருச்செங்கோடு, கரூர், திருச்சி, கோவை உள்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார்.
    • 11 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் சபரி சங்கர். இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, நாமக்கல் , திருச்செங்கோடு, கரூர், திருச்சி, கோவை உள்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார்.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட ஏஜென்சி அலுவலகம் நடத்தி தங்க நகை சேமிப்பு திட்டம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு என்ற திட்டத்தில் பழைய தங்கத்துக்கு மாற்றாக புதிய தங்கம் என பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கை யாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்தார்.

    இதில் 11 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் அந்தந்த மாவட்டங்களில் புகார் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.

    தங்க நகை கடை உரிமையாளர் சபரி சங்கர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் . மேலும் அந்த கடையில் பணிபுரிந்த மேலாளர், மாவட்ட அளவிலான அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகளும் தலைமறைவாகியுள்ளனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த நகைக்கடையின் மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர் உள்பட 14 பேரை அந்த நிறுவனத்தின் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கோவை, தர்மபுரி மாவட்ட மார்க்கெட்டிங் ஏஜெண்டு களே பிடித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள போலீசாரிடம் இன்று ஒப்படைத்தனர்.

    இது பற்றி மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் கூறிய தாவது:-

    பொதுமக்களிடம் நாங்கள் எஸ்.வி.எஸ் தங்க நகை நிர்வனம் அறிவித்தபடி பழைய தங்கத்திற்கு மாற்றாக புதிய தங்கம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, தங்க நகை சேமிப்பு திட்டம் என பல்வேறு வழிகளில் பணத்தை வசூல் செய்து கடையில் கட்டினோம்.

    ஆனால் தற்போது இந்த நகைக்கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் தலைமறை வாகிவிட்டார் . மேல்மட்ட அதிகாரிகள் அந்த நகை கடையில் உள்ள தங்க கட்டிகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். அவர்களில் சிலரை பிடித்து சேலம் கலெக்டர் அலுவலக போலீ சிடம் ஒப்படைத்துள்ளோம்.

    நாங்கள் பொதுமக்களிடம் பணம் நேரடியாக வசூல் செய்ததால் எங்களை வீட்டில் இருக்க விடாமல் பொதுமக்கள் விரட்டுகின்றனர். இதனால் நாங்கள் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே மாவட்ட அளவிலான அதிகாரி களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினால் உரிமையாளர் சபரி சங்கர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவரும்.

    உடனடியாக அவரை பிடித்து பொதுமக்களின் பணம் மற்றும் நகையையும் மீட்டு தர வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் நாங்கள் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியாது. எனவே எங்களுக்கு அந்த பணத்தை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    அப்போது அவர்களுடன் வந்த பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்கள் கூறு கையில், ஒவ்வொருவரும் 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் கட்டியதாகவும் தற்போது பணத்தை இழந்து நடுத்தெருவில் இருப்பதா கவும் இதனால் திருமணம் போன்ற முக்கிய காரியங்கள் நடத்த முடியாமல் தவிப்பதாகவும் கூறினர்.

    தங்களது பணத்தை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் விட்டு கதறியபடி பெண்கள் புகார் கூறினார்.

    தொடர்ந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க நகை நிறுவனத்தின் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா ( வயது 28). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மோகனப்பிரியா மணியம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பெருந்தொழுவு கரியாம்பாளையம் என்ற இடம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகவரி கேட்டு மோகனப்பிரியாவிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அவரை தள்ளி விட்டு சென்றனர். இதில் நிலைத்தடுமாறி விழுந்த மோகன பிரியாவுக்கும் குழந்தைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து மர்மநபர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உள்ள பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த கோவையைச் சேர்ந்த கார்த்திகா(வயது 28) என்பவர் மணமகனது அறையில் அவரது கைப்பை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

    அதில் அவர் அணிந்திருந்த சுமார் 12 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ. 24 ஆயிரம் ஆகியவற்றை கைப்பையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தவர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது கை பையை காணவில்லை. இதுகுறித்து திருமண மண்டபத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். யாரும் எடுக்கவில்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது .இதையடுத்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்தில் நகை மற்றும் பணம் காணாமல் போனது திருமண வீட்டாருக்கு அதிர்ச்சி- சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

    • பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
    • கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.

    பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.

    கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

    • தங்கம்மாள் நேற்று முன்தினம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலுக்கு சென்றார்.
    • பூஜை முடிந்தபின்னர் தங்கம்மாள் வெளியே வந்து தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தங்கம்மாள்(வயது 70).

    இவர் நேற்று முன்தினம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த கோபூஜையில் பங்கேற்றபோது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. பூஜை முடிந்தபின்னர் தங்கம்மாள் வெளியே வந்து தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுதொடர்பாக அவர் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த வசந்தியிடம் பிரகாஷ் எலக்ட்ரீசியன் பொருட்கள் தேவைப்படுகிறது எனக்கூறி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார்.
    • பின்னர் மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சலிட பிரகாஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி தங்க நகைகளுடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

    பவானி, செப். 13-

    பவானி அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி வசந்தி (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    பில்டிங் காண்ட்ரா க்டரான வெங்கடேஷ் தனது கட்டிடங்களின் எலக்ட்ரீசியன் வேலை செய்ய மனைவி வசந்தியின் தங்கை மகனான சேலம் மாவட்டம் கொங்க ணாபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரை வீட்டில் தங்க வைத்து வேலைக்கு வைத்து இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த வசந்தியிடம் பிரகாஷ் எலக்ட்ரீசியன் பொருட்கள் தேவைப்படுகிறது எனக்கூறி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார்.

    அப்போது திடீரென பிரகாஷ் அருகில் இருந்த வயரை எடுத்து கழுத்தை நெரித்து வசந்தியை மயக்கம் அடைய செய்தார். இந்நிலை யில் அவர் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகளை பிரகாஷ் திருடி சென்றார்.

    பின்னர் மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சலிட பிரகாஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி தங்க நகைகளுடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

    இதனையடுத்து வெளியே சென்று வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் தனது மனைவி ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்ததை தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சித்தோடு போலீசாரிடம் புகார் அளித்தார்.

    சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து இச்ச சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தலைமறைவாக இருந்த பிரகாஷை சித்தோடு போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிரகாஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. அந்த கடனை அடைக்க சித்தி திருமணம் நிகழச்சிக்கு சென்று வந்த போது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வயரால் கழுத்தை நெரித்து மயக்க மடைய செய்து உள்ளார்.

    மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சல் இட்டதால் பின்னர் இரும்பு கம்பியால் தாக்கி சித்தியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகள் 19 பவுனை திருடி தப்பி ஓட்டம் பிடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் பிரகாசை கைது செய்து கோபி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...
    நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...

    தங்கத்தின் சுத்தம் கேரட் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. பொதுவாக 24 கேரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம் என்பதையும், நாம் வாங்கும் ஆபரணத் தங்கம் 91.6 சதவீதம் சுத்தமான தங்கம் என்பதையும் உணர வேண்டும்.

    அது மட்டும் இல்லாமல் 18 கேரட், 14 கேரட் தூய்மை அளவிலும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் வெள்ளி, தாமிரம், துத்தநாகம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கும்.

    24 கேரட் தங்கத்தால் ஆபரணங்கள் செய்ய முடியாது. பொதுவாக நகைக் கடைகளில் 22 கேரட் தங்க நகை ஆபரணங்கள்தான் விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் 14 மற்றும் 18 கேரட் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் விலை கூடுதல் என்பதைப் போல, அடமானம் வைக்கும்போது அல்லது விற்கும்போது அதிகம் பணம் கிடைக்கும். 14 அல்லது 18 கேரட் என்றால் அவற்றின் தரத்திற்கு ஏற்றார் போல் விலை குறையும்.

    ஆபரணத் தங்கம் வாங்கும்போது செய்கூலியும் அதன் விலையில் அடங்கும். அது பொதுவாக நிலையாக இருக்கும். சில நகைக் கடைக்காரர்கள் சலுகை என்ற பெயரில் செய்கூலி சதவீதத்தை கூட்டவும் குறைக்கவும் செய்வார்கள். எனவே தங்கம் வாங்கும்போது செய்கூலி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    தங்க நகை வாங்கும்போது அது கையால் செய்யப்பட்டது என்றால் செய்கூலி விலை அதிகமாக இருக்கும். அதுவே எந்திரத்தின் வடிவமைப்பு என்றால் செய்கூலி குறைவாக இருக்கும்.



    ஆபரணத் தங்கம் எடை அளவினால்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையில் வாங்கும்போது அதிகச் செலவாகும். சில நேரங்களில் வைரம், எமரால்டு போன்றவையும் தங்கத்தில் அலங்காரம் செய்யப்பட்டு விலையை உயர்த்தும்.

    பழைய நகையை மாற்றிப் புதிய நகை வாங்கப் பல நகைக் கடைகள் அனுமதி அளிக்கின்றன. நகையின் வடிவம் மற்றும் டிரெண்ட் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அதன் மதிப்பு ஒன்றுதான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    நம் நாட்டில் லட்சக்கணக்கான நகைக் கடைகள் உள்ளன. பெயர் தெரியாத சிறு கடைகளில் நகை வாங்கும்போது அதில் கலப்படங்கள் அதிகமாகித் தங்கத்தின் அளவு குறைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எனவே நம்பிக்கை வாய்ந்த, உள்ளூரில், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற கடைகளில் நகையை வாங்குவது நல்லது.

    இந்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஹால்மார்க் உள்ள நகைகளை மட்டுமே வாங்க வேண்டும். இந்த பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் சர்வதேச அளவில் செல்லும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    இவற்றை எல்லாம் மனதில் கொண்டு தங்க நகை வாங்கினால், அதன் சந்தோஷம் என்றும் நம் மனதில் தங்கும். 
    ×