search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை மோசடி வழக்கு"

    • மாதா ஜெயக்குமார் வடகரை எடோடியில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.
    • மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த கேரள போலீசார் தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் ஆய்வு செய்தனர்.

    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதா ஜெயக்குமார் (வயது 34). இவர் கோழிக்கோடு மாவட்டம் வடகரை எடோடியில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.

    பின்னர் இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு உள்ள வங்கி கிளைக்கு மாற்றப்பட்ட நிலையில், வடகரை எடோடி கிளைக்கு புதிய மேலாளர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அங்கு தணிக்கை நடைபெற்றது.

    அதில் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26.8 கிலோ நகைகள் போலியாக வைத்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் வங்கி மேலாளராக இருந்த மாதா ஜெயக்குமார் எர்ணாகுளம் கிளையில் பொறுப்பேற்காமல் தலைமறைவானார்.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அந்த நகைகளில் சிலவற்றை தன் நண்பரான திருப்பூர் சந்திராபுரம் கேஎன்பி., காலனி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கார்த்திக் (29) என்பவரிடம் கொடுத்து அடமானம் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த கேரள போலீசார் தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் ஆய்வு செய்தனர். அங்கு 4.6 கிலோ நகையை மீட்டனர்.

    இந்தநிலையில் இன்று கேரளாவில் இருந்து வந்த சிறப்பு தனிப்படை போலீசார் வங்கியில் மீண்டும் சோதனை நடத்தினர். மாதா ஜெயக்குமார் லாக்கரில் வைத்துள்ள நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் கொண்ட கும்பல் முத்துராமலிங்கத்தை கட்டிப்போட்டு விட்டு ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள தெற்கு திட்டங்குளம் முத்துநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 48).

    இந்நிலையில் முத்துராமலிங்கம் ரூ. 8 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் என்ற கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போகவே குறுக்குச்சாலையில் உள்ள தனது நண்பர் ஜேக்கப் என்பவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக ஜேக்கப் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது முத்து ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து ஜேக்கப் ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் கழுத்து மற்றும் கை, கால்களில் துணியால் கட்டப்பட்ட நிலையில் முத்துராமலிங்கம் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், 3 பேர் கொண்ட கும்பல் முத்துராமலிங்கத்தை கட்டிப்போட்டு விட்டு ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எந்த ஊரை சோந்தவர்கள்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துராமலிங்கம் மீது கோவில்பட்டி, கயத்தார், ஓட்டப்பிடாரம், நாரைகினறு ஆகிய போலீஸ் நிலையங்களில் நகை மோசடி செய்ததாக வழக்கு உள்ளது. இவர் குண்டாசில் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார். தன்னிடம் நகைகளை கொடுத்த நபர்களுக்கு பணத்தை திருப்பி தருவதற்காக ரூ. 8 லட்சத்தை எடுத்து கொண்டு சென்ற போது தான் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×