search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala police"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேஸ்புக் கணக்கு ஹேக் செய்திருந்தால், அந்த படங்களை சைபர் கிரைம் போலீசாரால் நீக்க முடியவில்லை.
    • படங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேஸ்புக் நடத்தும் நிறுவனத்துக்கு கேரள போலீசார் நோட்டீசு அனுப்பினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர்.

    இதுகுறித்து அந்த பெண் மருத்துவர், போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் கேரள சைபர் கிரைம் போலீசார், பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை அழிக்க முயன்றனர். ஆனால் அவரது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்திருந்ததால், அந்த படங்களை சைபர் கிரைம் போலீசாரால் நீக்க முடியவில்லை.

    ஆகவே பெண்டாக்டரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்திருந்த நபரை கண்டு பிடித்து, படங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேஸ்புக் நடத்தும் நிறுவனத்துக்கு கேரள போலீசார் நோட்டீசு அனுப்பினர். அவ்வாறு நோட்டீசு அனுப்பும் பட்சத்தில், 36 மணி நேரதிற்குள் படங்களை நீக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது.

    ஆனால் ஒரு வாரமாகியும் பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை நீக்கவில்லை. மேலும் போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு சரியான பதிலையும் பேஸ்புக் நிறுவனம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேஸ்புக் மீது கேரள போலீசார், குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கணவர் தப்பி சென்ற ஆத்திரத்தில் அவரது மனைவியை போலீசார் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லம் பாய்ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 27). இவரது மனைவி ஆதிரா (23).

    அனீசுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தன்னையும், தனது குழந்தையையும் அனீஸ் தாக்கியதாக திருவல்லா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறியதால் அனீசும், அவரது மனைவி ஆதிராவும் திருவல்லா போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    திருவல்லா போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்த போது அனீசை போலீசார் தாக்கி உள்ளனர். இதனால் பயந்து போன அனீஸ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் விரட்டிச் சென்றனர்.

    அவர்கள் பிடியில் ஆதிரா மட்டும் சிக்கிக்கொண்டார். அனீஸ் தப்பித்த ஆத்திரத்தை அவர் மீது காட்டும் விதத்தில் ஆதிராவை 2 போலீஸ்காரர்களும் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்கள். ஷு காலாலும் அவரை மிதித்தனர். பிறகு அவரை போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

    பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சிலர் தங்களது செல்போனில் போலீசார் பெண்ணை தாக்கும் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். மேலும் இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் சென்றது.

    நடுரோட்டில் ஆதிராவை போலீசார் கொடூரமாக தாக்கும் காட்சி.

    இதுபற்றி விசாரணை நடத்திய பத்தனம்திட்டா போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார், நடுரோட்டில் பெண்ணை தாக்கிய 2 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆதிரா தற்போது சிகிச்சைக்காக திருவல்லா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    25 ஆயிரம் கேரள போலீசாரின் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதாக புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. #LokSabhaElections2019

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடை பெற்றது.

    இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணிக்கும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

    தேர்தலின்போது கேரளாவில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இதில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது. மேலும் ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது வெப் கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்ட சில வீடியோ காட்சிகளும் வெளியானது.

    அந்த வீடியோ காட்சியில் பெண்கள் உள்பட சிலர் ஓட்டுப்போட்டவுடன் அடையாள மையை தலையில் தேய்த்து அழித்துவிட்டு மீண்டும் ஓட்டுப் போட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் நடத்திய விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பெண்கள் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 25 ஆயிரம் கேரள போலீசாரின் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதாக புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

    கேரளாவில் போலீசாருக்காக சங்கம் செயல்பட்டு வருகிறது. போலீசாரின் தபால் ஓட்டுகளை அந்தந்த போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர்தான் தபால் ஓட்டுகளை போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆனால் இந்த தபால் ஓட்டுகள் மொத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு சங்க தலைவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த ஓட்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் சில போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளை பெற்று அதையும் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.


     

    இந்த நிலையில் சமீபத்தில் போலீஸ் சங்கத்தை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் செல்போனில் மற்றொரு போலீஸ்காரருடன் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. அவர் தனது பேச்சில் போலீசாரின் தபால் ஓட்டுகளை மொத்தமாக பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அதை பதிவு செய்துவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த போலீஸ்காரர் பத்ம நாபபுரம் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருப்பதும் அவரது பேச்சின் மூலம் தெரியவந்தது.

    இதன் மூலம்போலீசாரின் தபால் ஓட்டுக்களில் தில்லு முல்லு நடந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு மேலும் வலுப்பெற்றது. இந்த ஆடியோ வேகமாக பரவியதால் இது போலீசார் மத்தியிலும், கேரள அரசியல் கட்சியினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கவனத்திற்கு சென்றது அவர் இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. வினோத் குமாருக்கு உத்தரவிட்டார். அவரும் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை டி.ஜி.பி.க்கு தாக்கல் செய்தார்.

    அந்த அறிக்கையில் ‘கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கி அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு போலீஸ் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அனுப்பி வைத்ததும் அந்த தபால் ஓட்டுகள் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதும் உண்மைதான்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கை டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மூலம் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கேரளா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். வருகிற 15-ந் தேதிக்குள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    போலீசாரின் தபால் ஓட்டுகளில் முறைகேடு நடந்தது தொடர்பான புகார் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கேரளாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் இதில் முக்கியபங்காற்றியது தெரியவந்துள்ளது. அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் 4 போலீசாருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது. அவர்கள் பற்றியும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் மாநில தலைமை தேர்தல் கமி‌ஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள போலீஸ்காரர், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆவார். அவர் பாதுகாப்பு பணியில் 5 மாதங்கள் பணியாற்றி உள்ளார்.

    இதற்கிடையில் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, போலீசாரின் 25 ஆயிரம் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளை போலீஸ் சங்க தலைவர்கள் கைப்பற்றி அந்த ஓட்டுகளை கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு அவர்கள் போட்டு உள்ளதாக போலீஸ் உளவுப்பிரிவு தலைவர் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. போலீசாரின் தபால் ஓட்டுகளை முழுமையாக திரும்ப பெற்று அவர்கள் மீண்டும் ஓட்டுப்போட வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த செயல் மாநில போலீஸ் துறைக்கே அவமானம் என்று கூறி உள்ளார். #LokSabhaElections2019

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சபரிமலைக்கு சென்றதால் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ள இரண்டு பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்படி கேரள காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Sabarimala #SabarimalaWomen #SupremeCourt
    புதுடெல்லி:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.



    பக்தர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அவர்கள் இருவருக்கும் 24 மணி நேரமும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டனர். #Sabarimala #SabarimalaWomen #SupremeCourt
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாக கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பக்தர்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் இளம்பெண்கள் பலரும் அணி, அணியாய் சபரிமலைக்கு சென்றனர்.

    இதனால் சபரிமலையில் பதட்டமான நிலை உருவானது. சன்னிதானம் வரை சென்ற பெண்கள் 18-ம்படி ஏறாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கேரள போலீசார் சபரிமலை செல்ல விரும்பிய பெண்களை ரகசியமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சபரிமலை சென்று 18-ம்படி ஏறாமல் பின்பக்க வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முதன்முதலாக இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்ததாகவும் கூறப்பட்டது.



    பிந்து, கனகதுர்காவை தொடர்ந்து நேற்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா என்பவரும் ஐயப்பனை தரிசித்ததாக தகவல் வெளியானது. இவர், 18-ம் படி ஏறி சென்றதாகவும் கூறப்பட்டது.

    இது உண்மைதான் என்று போலீசார் கூறினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தந்திரிகள் தெரிவித்தனர். இந்த குழப்பத்தை போக்க சன்னிதானத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் இருமுடி கட்டுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த பெண் சசிகலாதானா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

    இதற்கிடையே இலங்கை பெண் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த தகவலை முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகம் உறுதி செய்தது. இந்த தகவல் வெளியானதும் போலீசார் இன்னொரு தகவலை வெளியிட்டனர்.

    சசிகலா, சாமி தரிசனம் செய்ததை உடனடியாக தெரிவித்தால் அவரது பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் என்பதாலேயே அவரை பத்திரமாக விமான நிலையத்தில் இறக்கிவிட்ட பின்பு இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவித்தனர்.

    கேரள போலீசார் மேலும் இதுபற்றி கூறும்போது, சபரிமலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் சபரிமலை வந்ததாகவும், அதிலும் 3 இளம்பெண்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

    இந்த இளம்பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக கூறினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 10 இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாகவும் கூறினர்.

    இளம்பெண்கள் பலரும் அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர தயாராக இருக்கும் தகவலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கு வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த இளம்பெண்கள் குறித்த விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

    அந்த அறிக்கையில் எத்தனை இளம்பெண்கள் இதுவரை தரிசித்துள்ளனர் மற்றும் அவர்கள் யார்? யார்? என்ற விவரமும் வெளியாகலாம் என்று தெரிகிறது. #SabarimalaTemple

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும் கிகி சேலஞ்ச்சின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், இப்போது மிகவும் ஆபத்தான நில்லு நில்லு என்ற புதிய சேலஞ்ச் கேரளாவில் பரவி வருகிறது. #NilluNilluChallenge
    திருவனந்தபுரம்:

    வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் அதை பதிவேற்றம் செய்யும் செயல் தற்போது அதிகரித்து வருகிறது. இவற்றில் சில வீடியோக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால் பல வீடியோக்கள் விபரீதமாக இருப்பதுதான் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.

    அதிலும் வீடியோ பதிவு மூலம் மற்றவர்களுக்கு சவால் விடுவது தற்போது அதிகரித்து வருகிறது. பக்கெட்டில் உள்ள ஐஸ் கட்டிகளை தன்மீது ஊற்றிக் கொண்டு அதை வீடியோ எடுத்து மற்றவர்களையும் அதேபோல செய்யச் சொல்லி பதிவான ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ முதலில் சமூக வலைதளங்களில் அதிகளவு பரவியது.

    அதைத்தொடர்ந்து ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும் ‘கிகி சேலஞ்ச்’ பிரபலமானது. சாதாரணமானவர்கள் முதல் நடிகர், நடிகைகள் வரை ‘கிகி’ நடன சேலஞ்சில் பங்கேற்றதால் இதை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும்போது அவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளதால் இதை கைவிடும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்ட பிறகும் அது தொடர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது கேரளாவில் ‘நில்லு நில்லு சவால்’ என்ற புதிய நடனம் வேகமாக பரவி வருகிறது. சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து அதன் முன்பு ‘நில்லு நில்லு’ என்று பாட்டுப்பாடி வாலிபர்கள் நடனம் ஆடுகிறார்கள். அதன்பிறகு அதை தங்கள் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு மற்றவர்களையும் இந்த சவாலுக்கு அழைக்கிறார்கள்.

    இருசக்கர வாகனம் முன்பு நடனம் ஆடியவர்கள் தற்போது பஸ், கார், வேன் என்று அனைத்து வாகனங்களையும் வழிமறித்து விபரீத நடனம் ஆடுகிறார்கள். இதன் உச்சகட்டமாக போலீஸ் வாகனங்களையே சிலர் மறித்து நடனம் ஆடும் அளவுக்கு சென்றுவிட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு ‘ரெயின் ரெயின் கம் அகைன்’ என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் பாடகர் ஜேசிகிப்ட் என்பவர் பாடிய ‘நில்லு நில்லு என்ட நீலக்குயிலே...’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இந்த பாடல் அப்போது இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற பாடலாக திகழ்ந்தது.

    காலப் போக்கில் மறந்துபோன இந்த பாடல் தற்போது மீண்டும் பிரபலமானதற்கு காரணம் மலையாள நடிகர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன்தான். இவர் தனது புதிய மலையாள படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ‘நில்லு நில்லு என்ட நீலக்குயிலே...’ என்ற பாடலை பாடி தனது நண்பருடன் நடனம் ஆடி சமீபத்தில் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.


    இதைத்தொடர்ந்தே இந்த பாடல் ‘நில்லு நில்லு சவால்’ என்ற பெயரில் தற்போது ஆபத்தான நடனமாக பரவி வருகிறது. வாகனத்தை மறித்து நடனம் ஆடும் வாலிபர்கள் சிலர் தங்கள் கைகளில் கம்பு மற்றும் இலை தழைகளை வைத்துக் கொண்டு வாகனங்களை வழிமறித்து ஆடுகிறார்கள்.

    திடீரென்று இவர்கள் வாகனங்களை மறிப்பதால் அதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுகிறார்கள். நடனம் ஆடுபவர்கள் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் நிலவுகிறது. சில வாலிபர்கள் உச்சகட்டமாக ரெயில் தண்டவாளத்தில் ரெயில் வரும்போது இந்த நடனத்தை அரங்கேற்றுகிறார்கள். ரெயில் அருகில் வந்ததும் தண்டவாளத்தில் இருந்து குதிக்கிறார்கள். இதுவும் வீடியோவாக பரவி வருகிறது.

    இதுபற்றி கேரள சைபர் கிரைம் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது. போலீசார் ‘நில்லு நில்லு சவால்’ நடனம் ஆடும் வாலிபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்த நடனம் ஆடும் சிலர் தங்களை மற்றவர்கள் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க ஹெல்மெட்டும் அணிந்து கொண்டு ஆடுகிறார்கள். வீடியோ பதிவு மூலம் இதுபோன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். #NilluNilluChallenge
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வகையில், 1000க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. போராட்டத்தை ஒடுக்க மாநில காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இந்நிலையில், சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களின் பெயர் மற்றும் அவர்களின் பின்னணி உள்ளிட்ட விவரங்களை கேரள காவல்துறை திரட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1000க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை கண்காணித்து வருகிறது.

    இது தொடர்பாக மாநில ஹைடெக் சைபர் செல், மாவட்ட சைபர் செல் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சுமார் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவதற்கும், போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கும் பலர் சமூக வலைத்தளங்களை கருவியாக பயன்படுத்தினர். இவற்றில் பல பேஸ்புக் கணக்குகள் வெளிநாட்டில் இருந்து செயல்பட்டதாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    சைபர் செல் மூலம் பெறப்பட்ட தகவல்களை பேஸ்புக் அதிகாரிகளிடம ஒப்படைத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர், அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். #SabarimalaVerdict #SabarimalaProtest #KeralaPolice #FacebookAccounts
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலையில் அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கேரள அரசு பஸ்சை சிறை பிடித்தனர். #Sabarimala #BJP

    கூடலூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அவரை காரில் செல்ல விடாமல் அவமதிப்பு செய்தார். மேலும் ஊர் திரும்பும் போதும் மத்திய மந்திரியின் காரை மறித்து போலீசார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பா.ஜ.க.வினர் அதிருப்தியடைந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் கேரள போலீசை கண்டித்து பா.ஜ.க.வினர் தேனி மாவட்டம் கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக கம்பத்துக்கு வந்த கேரள அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்ததால் பதட்டம் ஏற்பட்டது. மேலும் கேரள போலீசாருக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். சம்பவம் குறித்து அறிந்ததும் உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷாஜகான், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் செய்தவர்களை கலைந்து போக எச்சரித்தனர்.

    மேலும் இது தொடர்பாக கூடலூர் நகர பா.ஜனதா தலைவர் ஜெயக்குமார் நிர்வாகிகள் விஜயகுமார், பாண்டியன், ஜெயராம் முருகன், ரமேஷ்குமார், ராஜா, பெரியமருது ஆகியோரை கைது செய்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #Sabarimala #BJP

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சபரிமலை சென்ற பொன். ராதாகிருஷ்ணன் கேரள போலீசாரால் போகும் போதும், திரும்பும்போதும் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கேரள பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். #Sabarimala #PonRadhakrishnan #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளம்பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலையில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி, பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசு பஸ்சில்தான் பம்பை செல்ல வேண்டும்.

    சன்னிதானத்தில் சரண கோ‌ஷம் எழுப்பக்கூடாது. இரவு நடை அடைத்த பின்பு தங்கக்கூடாது என பக்தர்கள் வலியுறுத்தப்பட்டனர். மேலும் அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இதனை கண்காணிக்க நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சபரிமலை வரும் முக்கிய பிரமுகர்களை சன்னிதானம் அழைத்துச் சென்று திருப்பி அனுப்பினர்.

    அதன்படி, நேற்று காலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அவருடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் சென்றனர். இவர்களின் கார், நிலக்கல்லை அடைந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. யதீஸ்சந்திரா, மத்திய மந்திரியுடன் வந்தவர்கள் காரை தடுத்து நிறுத்தினார்.

    மந்திரியின் காரை தவிர மற்றவர்களின் வாகனங்கள் நிலக்கல் தாண்டி அனுமதிக்கப்படாது என்று கண்டிப்பாக கூறினார். இதனால் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கும், எஸ்.பி. யதீஸ்சந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

    அதன் பின்னரும் பாரதிய ஜனதா நிர்வாகிகளின் கார்களை அனுமதிக்காததால் பொன். ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில் இருந்து அரசு பஸ்சில் பம்பை சென்றார்.

    சபரிமலையில் கண் கலங்கியபடி தரிசனம் செய்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்.

    பம்பையில் இருந்து சன்னிதானம் சென்ற பொன். ராதாகிருஷ்ணன் அங்கு அய்யப்பனை தரிசித்தார். அப்போது அவரது கண்கள் கலங்கின. அய்யப்பனை பார்த்து அவர், குலுங்கி அழுதார். கோவில் நடை அடைக்கும் வரை சன்னிதானத்தில் இருந்தார். பின்பு ஆதரவாளர்களுடன் பம்பை திரும்பினார். அங்கிருந்து தனியார் காரில் கோவை புறப்பட்டார்.

    பொன். ராதாகிருஷ்ணனுடன் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலர் 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அதிகாலை 1 மணியளவில் பொன். ராதாகிருஷ்ணனுடன் சென்றவர்களின் கார்களை எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    தகவல் அறிந்ததும் பொன். ராதாகிருஷ்ணன் அங்கு விரைந்து வந்தார். ஆதரவாளர்களின் காரை தடுத்து நிறுத்தியது ஏன்? என்று எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டார். அதற்கு எஸ்.பி. ஹரிசங்கர், சபரிமலை பகுதியில் அதிகாலை நேரத்தில் நடைபெறும் வழக்கமான வாகன பரிசோதனை. மத்திய மந்திரியுடன் வந்த கார் என எங்களுக்கு தெரியாது. போராட்டக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா? என்பதை கண்டறியவே வாகனத்தை நிறுத்தினோம். நீங்கள் செல்லலாம், என்றார்.

    எஸ்.பி. ஹரிசங்கரின் விளக்கத்தை ஏற்க மறுத்த பொன். ராதாகிருஷ்ணன், அதனை கடிதமாக எழுதித் தரும்படி கூறினார். இதையடுத்து எஸ்.பி. ஹரிசங்கர், சம்பவம் குறித்து விளக்கம் அளித்து கடிதம் கொடுத்தார்.

    விளக்க கடிதம் எழுதும் போலீசார்.

    சபரிமலை சென்ற பொன். ராதாகிருஷ்ணன் கேரள போலீசாரால் போகும் போதும், திரும்பும்போதும் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கேரள பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.பி.க்கள் மீது போலீஸ் டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடத்தினர்.  #Sabarimala #PonRadhakrishnan #BJP
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo