என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Momos Shop"

    • ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார்.
    • அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், 14 வயது சிறுவன் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி மோமோஸ் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் மோமோஸ் மீது தீரா காதல் கொண்ட சிறுவனிடம் வீட்டில் உள்ள நகைகளை திருடி கொண்டுவந்து கொடுத்தால் மோமோஸ் வாங்கி தருவதாக மோமோஸ் கடைக்காரர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இதையடுத்து அந்த சிறுவன் மெல்ல மெல்ல தனது வீட்டில் உள்ள நகைகளை திருடி அவர்க்ளிடம் கொடுத்து மோமோஸ் சாப்பிட்டு வந்துள்ளான்.

    ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து சிறுவனின் தந்தை போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

    • அறிவிப்பு பற்றிய புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
    • ஒரு சில பயனர்கள், சில ஐ.டி. கம்பெனிகளில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட இது அதிகமாக இருப்பதாக பதிவிட்டனர்.

    வட மாநிலங்களில் தெருவோர உணவகங்களில் விற்பனை செய்யப்பட்ட மோமோஸ் தின்பண்டங்கள் தற்போது நாட்டின் பல நகரங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.

    இந்நிலையில் இணையத்தில் ஒரு மோமோஸ் கடை வைரலாகி வருகிறது. அந்த கடையில் உதவியாளர் பணிக்கு பணியாளர் தேவை என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் சம்பளம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்பட்டிருப்பது தான் அதற்கு முக்கிய காரணம் ஆகும்.

    இந்த அறிவிப்பு பற்றிய புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். அதில் ஒரு பயனர், நான் இப்போதே விண்ணப்பிக்கிறேன். தினமும் இலவசமாக மோமோஸ் சாப்பிடலாம் என பதிவிட்டார். மற்றொரு பயனர், இந்த கடை எங்கே அமைந்துள்ளது? என கேள்வி எழுப்பி இருந்தார்.

    ஒரு சில பயனர்கள், சில ஐ.டி. கம்பெனிகளில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட இது அதிகமாக இருப்பதாக பதிவிட்டனர். இதுபோன்று பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட, இந்த அறிவிப்பு பேசுபொருளாகி உள்ளது.

    • மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிக்விக் வீசி சென்றுள்ளனர்.
    • பெவிகுவிக் தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிக்விக் ஒட்டியது.

    மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் மோமோஸ் விற்பனை செய்யும் நபர் மீது பெவிகுவிக் வீசி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குவாலியர் நகரில் சோஹைல் ஷா (21) என்ற இளைஞர் தனது மனைவியுடன் சேர்ந்து சாலை ஓரமாக மோமோஸ் கடை ஒன்றை நடத்து வருகிறார்.

    இந்நிலையில், நவம்பர் 15 அன்று இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிகுவிக் வீசி சென்றுள்ளனர். இந்த தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிகுவிக் ஒட்டியது.

    இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆனால் இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சோஹைலின் மனைவியின் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×