மோமோஸ் விற்பனை செய்யும் நபர் மீது பெவிகுவிக் பசை வீசி தாக்குதல்

மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிக்விக் வீசி சென்றுள்ளனர். பெவிகுவிக் தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிக்விக் ஒட்டியது.
மோமோஸ் விற்பனை செய்யும் நபர் மீது பெவிகுவிக் பசை வீசி தாக்குதல்
Published on

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் மோமோஸ் விற்பனை செய்யும் நபர் மீது பெவிகுவிக் வீசி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவாலியர் நகரில் சோஹைல் ஷா (21) என்ற இளைஞர் தனது மனைவியுடன் சேர்ந்து சாலை ஓரமாக மோமோஸ் கடை ஒன்றை நடத்து வருகிறார்.

இந்நிலையில், நவம்பர் 15 அன்று இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிகுவிக் வீசி சென்றுள்ளனர். இந்த தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிகுவிக் ஒட்டியது.

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சோஹைலின் மனைவியின் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com