என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "stolen"
- இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
- இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர்.
காக்காபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை மார்க்கமாக தினமும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்றபடியே பரபரப்பாக காணப்படும்.
இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதும், வாகனங்கள் செல்லாதவாறு ரோட்டில் நின்று கொண்டு அடிக்கடி சண்டை போடுவதும் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் (கடை எண். 7165) யின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 15 குவாட்டர் பாட்டில், 10 பீர் பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். வழக்கம்போல் இன்று காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட் டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு சந்து கடை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
- பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
மேலும் ஆடி 18 திருவிழா வெகு விமரிசையாக இந்த கோவிலில் நடைபெறும். ஆடி 18 திருவிழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு பூசாரி வந்து பார்க்கும்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.
- டால்மியா போர்டு நல்லி தோட்டம் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி நடைபெற்றது.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி உமா நந்தினி கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துக் கொண்டனர்.
சேலம்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள டால்மியா போர்டு நல்லி தோட்டம் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி உமா நந்தினி(29) கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உமா நந்தினி கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துக் கொண்டனர்.
இதேபோல் அயோத்தியாப்பட்டணம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மாதேஸ்வரன் (57) என்பவர் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து 2 பேரும் கொடுத்த புகாரின் பேரின் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்ணன் தனக்கு சொந்தமான லாரியில் எலக்ட்ரிக் பொருட்களை லோடு ஏற்றிக் கொண்டு கடலூரில் இருந்து கேளரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்கள் மாயமானதாக சூரமங்கலம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார்.
சேலம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசப்பாக்கம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (40). இவர் தனக்கு சொந்தமான லாரியில் எலக்ட்ரிக் பொருட்களை லோடு ஏற்றிக் கொண்டு கடலூரில் இருந்து கேளரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று சேலம் சூரமங்கலம் அருகே மற்றொரு லாரிக்கு லோடை மாற்றி உள்ளார். அப்போது லாரியில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்கள் மாயமானதாக சூரமங்கலம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்பத்துடன் சினிமாவுக்கு சென்று திரும்பிய போது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- சரவணம்பட்டியிலும் சித்ரா என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை
கோவை,
கோவை அடுத்த தொப்பம்பட்டி டி.ஜி.கே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 34), ஐடி நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சினிமாவுக்கு சென்றார். அப்போது யாரோ மர்மநபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நெக்லஸ், ஆரம், கைச்செயின் உள்பட 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீதர் வீடு திரும்பியபோது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. ஸ்ரீதர் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகைகளை திருடி சென்று உள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீதர், துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.
கோவை கணபதி, காந்திமாநகரை சேர்ந்த தங்கவேல் மனைவி சித்ரா (51). இவர் சங்கனூரில் உள்ள பாட்டில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சித்ரா சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.
பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பியபோது முன்கதவு உடைந்து கிடப்பதும், பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மாயமானதும் தெரிய வந்தது. சித்ரா வேலைக்கு சென்றபிறகு யாரோ மர்மநபர் வீடு புகுந்து திருடி சென்றது தெரிய வந்தது.
சரவணம்பட்டி போலீசில் சித்ரா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து தங்கநகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
- பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தினமும் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் வேலை நிமித்தமாக இங்கு வந்து செல்வது வழக்கம். இதனால் இந்த வணிக வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்லை சேர்ந்த தனியார் டிரான்ஸ்போர்ட் ஊழியர் வினோத்குமார் என்பவர் வேலை நிமித்தமாக மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மோட்டார்சைக்கிளை வணிக வளாகம் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் இது பற்றி நாமக்கல் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இைதயடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அதில் பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது
47) என்பவர் மோட்டார்
சைக்கிளை திருடியது தெரிய
வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
- அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.
சேலம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் அடுத்த காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரபாலன். இவரது மகன் ராஜதுரை (25).
இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
செல்போன் பறிப்பு
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ராஜதுரை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் அரிசிபாளையம் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் லோகேஷ் (18), பள்ளப்பட்டி நாராயணசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்து.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (36) இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரமேஷ் உடன் இருந்து கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.இதைக் கண்ட ரமேஷ் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34) என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- சம்பவத்தன்று முகமது ஜாபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
- தவுலத் நிஷா கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் முகமது ஜாபர். கயிறு வியாபாரி. இவரது மனைவி தவுலத் நிஷா(வயது 55).
கடந்த 3-ந் தேதி இவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
அங்கு முகமது ஜாபர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தவுலத் நிஷா கணவருடன் இருந்து அவரை கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
கணவருக்கு உடைகள் எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தவுலத் நிஷா கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட னர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிகிச்சைக்கு சென்ற கயிறு வியாபாரி வீட்டில் 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
- சுகுணா வீட்டுக்குள் மர்மநபர்கள் 3 பேர் அத்துமீறி நுழைந்தனர்.
- போலீசார் நாகேந்திரனை கைது செய்தனர்.
கோவை,
கோவை இருகூரை சேர்ந்தவர் செல்வன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுகுணா (வயது 39).
சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் மர்மநபர்கள் 3 பேர் அத்துமீறி நுழைந்தனர்.
அவர்கள் சுகுணாவிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறல் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணிடம் நகை பறித்தது வேதாரண்யத்தை சேர்ந்த நாகேந்திரன்(39) மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நாகேந்திரனை கைது செய்தனர். தலைமறைவான மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.