search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளியில் வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை
    X

    வடவள்ளியில் வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

    • வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
    • பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி விட்டது.

    கண்ணன் கேரள மாநிலம் பாலக்காடு மாநிலத்தில் வருமான வரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை கண்ணன் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று விட்டார். இன்று காலை கண்ணனின் வீடு திறந்து கிடப்பதை அருகே வசித்து வருவர்கள் பார்த்தனர். சந்தேகம் அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான கண்ணன், சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்தததும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தன. இவர்கள் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதும் போலீசின் விசாரணையில் கண்டுபிடிக்க ப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. கொள்ளையன் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இதனை தூவி சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராவில் ஏதாவது காட்சிகள் பதிவாகி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கு அதற்கன சர்வரும் திருடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து, அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருக்கிறதா என்பதை பார்த்து வருகின்றனர்.

    மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் உள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×