என் மலர்
இந்தியா

பட்டை தீட்டும் ஆலையில் இருந்து ரூ.25 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கொள்ளை
- லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.25 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கொள்ளை போனது தெரிந்தது.
- போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள ஒரு பிரபல பட்டை தீட்டும் ஆலை தொடர் விடுமுறை காரணமாக மூடப்பட்டது.
இந்தநிலையில் நேற்று விடுமுறை முடிந்து அந்த ஆலையை திறந்தபோது அங்குள்ள லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.25 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கொள்ளை போனது தெரிந்தது.
இதுகுறித்து உரிமையாளர்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கு வலைவீசி உள்ளனர்.
Next Story






