search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மளிகை கடை உரிமையாளர் வீட்டில்13 பவுன் நகைகள் கொள்ளை
    X

    மளிகை கடை உரிமையாளர் வீட்டில்13 பவுன் நகைகள் கொள்ளை

    • டாலர் உள்பட 13 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.
    • கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி லட்சுமி (வயது 38). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று லட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கு வதற்காக திருப்பூரு க்கு சென்றார். அப்போது பட்டப்பகலில் இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த தங்க செயின், மாலை, கம்மல், மோதிரம், டாலர் உள்பட 13 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர். பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிய லட்சுமி முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சுல்தான் பேட்டை போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொ ள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் மளிகை கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×