search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

    • அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா ( வயது 28). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மோகனப்பிரியா மணியம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பெருந்தொழுவு கரியாம்பாளையம் என்ற இடம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகவரி கேட்டு மோகனப்பிரியாவிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அவரை தள்ளி விட்டு சென்றனர். இதில் நிலைத்தடுமாறி விழுந்த மோகன பிரியாவுக்கும் குழந்தைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து மர்மநபர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×