என் மலர்
நீங்கள் தேடியது "தங்கநகைகள்"
- பிளாட்டினம் அதிக அடர்த்தி கொண்ட உலோகமாகும்.
- பிளாட்டினம் வைர கற்களுடன் கூடுதல் அழகு சேர்க்கும்.
'வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் பிளாட்டினம் அதிக அடர்த்தி உலோகமாகும். வெள்ளியைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாட்டினம், வெள்ளியைவிட அதிக பளபளப்பு உடையது. மருத்துவத் துறையிலும், மின்னியல் துறையிலும் பிளாட்டினத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மென்மையான உலோகமான பிளாட்டினத்தைக் கொண்டு எளிதாக எந்த வடிவத்தையும் உருவாக்க முடியும்.
பிளாட்டினம் ஆக்சிடைசிங் (ஆக்சிஜனேற்றம்) செயல்முறைக்கு உட்படாதது. எனவே இது கருக்காது. அமிலங்களால் பிளாட்டினத்துக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.
பிளாட்டினம் தற்போது நகைகள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வைரங்கள், ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை பிளாட்டினத்தைக் கொண்டே வடிவமைக்கிறார்கள். பிளாட்டினத்தின் பளபளப்பு தன்மை வைரக் கற்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
பிளாட்டின நகைகளை திருமண நிச்சயதார்த்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிலும், பரிசாக அளிப்பதற்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
பிளாட்டினம் நகைகளை வாங்குவதற்கு முன்பு அதில் ஹால்மார்க் முத்திரைகள் இருப்பதை கவனிக்க வேண்டும். நகையின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை சரிபார்த்த பின்பே பிளாட்டினம் நகைகளை வாங்க வேண்டும். வாரண்ட்டி, ரிட்டர்ன் பாலிசி போன்ற சேவைகளைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்வது முக்கியமாகும்.
பழைய பிளாட்டினம் நகைகளை உருக்கி புதிய நகைகளாக உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவில் மாற்றிக்கொள்ள முடியும். நகையை உருக்கும்போது அதன் அளவில் சிறு இழப்புகள் ஏற்படக்கூடும். பிளாட்டினத்தை உருக்கி சுத்தம் செய்து புதிதாக வடிவமைக்க, பயிற்சி பெற்ற கலைஞர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
நிதி நெருக்கடி ஏற்படும் நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைப் போலவே பிளாட்டினம் நகைகளையும் அடகு வைத்து தேவையான பணத்தைப் பெற முடியும். நகையின் தூய்மை, எடை மற்றும் தற்போதைய சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிளாட்டினம் நகைகளை மதிப்பிடுவார்கள்.
மற்ற உலோகங்களைக் காட்டிலும் பிளாட்டினம் அதிக மதிப்பு கொண்டது, அரிதானது. எனவே அதில் மற்ற உலோகங்களின் கலப்பு குறைவாகவே இருக்கும். அரிதாக தங்கத்துடன் சிறப்புக் கலவையாக பிளாட்டினம் கலக்கப்படுகிறது.

வெள்ளியுடன் ஒப்பிடும்போது பிளாட்டினம் அதிக காலம் நீடிக்கும். விரைவாக அழுக்கு அடையாது. பிளாட்டினத்தை மற்ற பொருட்களால் அரிக்க முடியாது. பிளாட்டினத்தில் தேய்மானம் குறைவாகவே இருக்கும். எனவே விலை உயர்ந்த வைரக்கற்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பிளாட்டினத்தை உபயோகிக்கிறார்கள்.
பிளாட்டினத்தின் இயற்கையான வெள்ளை நிறம் வைரங்களின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவை வைரத்தின் பளபளப்பையும், பிரகாசத்தையும் அதிகரிக்கும்.
பிளாட்டினம் நகைகளை அணிவதன் மூலம் நேர்மறை ஆற்றலையும். அதிர்ஷ்டத்தையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. பிளாட்டினத்தின் நீடித்து இருக்கும் தன்மையும், வலிமையும் அதற்கு அதிக வரவேற்பை பெற்றுத் தருகின்றன. வைரங்கள் பதித்த பிளாட்டினம் நகைகள் இளைஞர்களின் விருப்பமாக இருக்கின்றன.
- நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- பணம்- நகை யாருக்கு சொந்தமானது என தெரியவில்லை.
மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
3 மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது ஏராளமான நகைகள், முக்கிய ஆவணங்கள், மொபைல்போன்கள் கைப்பற்றப்பட்டது. சோதனை நடந்த நிறுவனங்களின் வங்கி லாக்கரை திறந்து சோதனை செய்த போது அதில் இருந்த ரூ. 5 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தலைநகர் போபால் அருகே மண்டோரா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு வாகனம் அனாதையாக நின்று கொண்டிருந்தது.
அந்த வாகனம் மீது சந்தேகம் அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் ரொக்கப்பணம், மற்றும் 52 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம்- நகை யாருக்கு சொந்தமானது என தெரியவில்லை. வருமான வரி சோதனைக்கு பயந்து அந்த ரூ. 10 கோடி பணம் மற்றும் 52 கிலோ நகைகளை வாகனத்தில் மறைத்து வைத்து அதிக நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நிறுத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், மத்தியப் பிரதேச போக்குவரத்துத் துறையின் முன்னாள் கான்ஸ்டபிளான சவுரப் சர்மா, அமலாக்க இயக்குநரகம் (ED), வருமான வரித் துறை (IT), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மற்றும் லோக்ஆயுக்தா காவல்துறையை உள்ளடக்கிய விசாரணையின் மையத்தில் உள்ளார்.
ஒரே ஒரு அதிகாரி மீது நடத்தப்பட்ட ஊழல் விசாரணையில், மத்தியப் பிரதேசம் முழுவதும் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் உள்ளட்டேரை அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விவாரத்தில் குழப்பத்தை அதிகரிக்கும் வகையில், நீதிமன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து லோக்ஆயுக்தாவின் அறிக்கையில் பெரும் முரண்பாடுகளை வெளிப்படுத்தின.
ஆரம்பத்தில் ரூ.7.98 கோடி ரொக்கம் மீட்கப்பட்டதாகக் கூறிய நிலையில், டிஎஸ்பி-நிலை அதிகாரி ஒருவர் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.55 லட்சம் மட்டுமே என்றும், அதனுடன் நகைகள் மற்றும் வெள்ளி என்றும் கூறினார்.
இருப்பினும், இந்த வழக்கை பல அமைப்புகள் விசாரித்த போதிலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகையை உரிமை கோர யாரும் முன்வரவில்லை. இந்த கார் சர்மாவின் நெருங்கிய கூட்டாளியான சேதன் சிங் கவுருக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் கவுர் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து, இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு ஓட்டுநருக்கு வாகனத்தை கடனாகக் கொடுத்ததாகக் கூறினார்.
சோதனைகள் நடந்த இரவில் சர்மாவின் வீட்டிற்கு அருகில் காரை சிசிடிவியில் பதிவாகியுள்ளன. சர்மாவின் நிதி பரிவர்த்தனைகள் துபாய், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான தொடர்புகளைக் குறிக்கின்றன.
ரூ.100 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் வெளிவந்துள்ளன, இதில் 52 மாவட்டங்களில் போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், "மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இப்போதைக்கு, சௌரப் சர்மா மற்றும் அவரது கூட்டாளிகளான சேதன் கவுர் மற்றும் ஷரத் ஜெய்ஸ்வால் ஆகியோர் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், தங்க நகைகள் யாருடையது என்கிற முக்கிய கேள்விகளுக்கு பதில் கிடைத்தபாடில்லை.






