search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "board of trustees"

    • சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு கோட்டு ராஜா உள்ளிட்டோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு செந்தில்குமார் உள்ளிட்டோர் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலான சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக அறங்காவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டு ராஜா, கந்தசாமி மற்றும் ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி ஆகியோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் மந்திரமூர்த்தி, ஜெயபால், முருகேஸ்வரி, பாலசங்கர் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், சிவன்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் அர்ச்சகர்கள் சண்முகசுந்தரம், சங்கர், தி.மு.க. வட்டப்பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மாரிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
    • கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.

    பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.

    கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

    ×