search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி சிவன்- பெருமாள் கோவில்களுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம்
    X

    அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்ற புதிய அறங்காவலர் குழுவினர்.

    தூத்துக்குடி சிவன்- பெருமாள் கோவில்களுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம்

    • சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு கோட்டு ராஜா உள்ளிட்டோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு செந்தில்குமார் உள்ளிட்டோர் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலான சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக அறங்காவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டு ராஜா, கந்தசாமி மற்றும் ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி ஆகியோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் மந்திரமூர்த்தி, ஜெயபால், முருகேஸ்வரி, பாலசங்கர் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், சிவன்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் அர்ச்சகர்கள் சண்முகசுந்தரம், சங்கர், தி.மு.க. வட்டப்பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மாரிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×