search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார்"

    • ராணுவ அதிகாரி நேற்று அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்.
    • மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினரால் ராணுவ அதிகாரி மீட்கப்பட்டார்.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் இனக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் பயங்கரவாதிகளை எளிதில் அடையாளம் காண மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, கோன்சம் கேடா சிங் என்ற ராணுவ அதிகாரி நேற்று அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்.

    ஒடிசா மாநிலத்தில் தற்போது பணிபுரித்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊரான மணிப்பூருக்கு வந்துள்ளார். இவரது கடத்தல் தொடர்பாக கோன்சமின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

    இந்நிலையில், கொன்சம் கேடா சிங் நேற்று மாலை பத்திரமாக மீட்கப்பட்டார். மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் அவர் மீட்கப்பட்டார். கடத்தல் சம்பவம் குறித்து மணிப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் ராணுவ வீரர்கள், காவல் அதிகாரிகள் அல்லது அவர்களது உறவினர்கள் என யாரேனும் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதற்கட்ட விசாரணையில், கவுரவ் சிங்கால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
    • தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தெற்கு டெல்லியில் உள்ள டெவ்லி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கவுரவ் சிங்கால் (வயது29). உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் இருந்து திருமண ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கவுரவ் சிங்காலுக்கும் அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தந்தை, கூர்மையான ஆயுதத்தால் கவுரவ் சிங்காலுவை தாக்கி கொலை செய்தார். இதையடுத்து அவரது தந்தையை போலீசார் கைது செய்தார்.

    முதற்கட்ட விசாரணையில், கவுரவ் சிங்கால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அவர் வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதை குடும்பத்தினர் ஏற்கவில்லை. இது தொடர்பாக தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்பிரச்சினையில் கவுரவ் சிங்கால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    • சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.
    • உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டி மாவட்டம், ராஜம்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    வேலைக்குச் சென்ற சந்தோஷ் மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    போதி ரெட்டி பள்ளி சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை சந்தோஷ் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    சந்தோஷ் தங்களை வீடியோ எடுப்பதை கண்ட போலீசார் அவரது செல்போனை பறித்தனர். சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்று பாட்டிலில் பெட்ரோலை பிடித்துக் கொண்டு வந்தார்.

    போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

    உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

    அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சந்தோஷ் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    இதனைக் கண்டு பதறிய போலீசார் சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சந்தோஷ் உடல் 50 சதவீதம் கருகி உள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வாலிபர் உடலில் தீயுடன் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

    • காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.
    • பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து சாலை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). இவர் அங்குள்ள பழைய பஸ் நிலையத்தில் பிரியாணி கடை திறந்தார். இதற்கான திறப்பு விழா துண்டு பிரசுரத்தில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும். இது காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து காலை 11 மணிக்கு கடையை திறந்தபோது பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பிரியாணி வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த ஆத்தூர் டவுன் போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் அதிகமாகவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.

    இதனை தொடர்ந்து உரிமையாளர், 10 ரூபாய் பிரியாணி தீர்ந்துவிட்டது என அறிவிப்பு பலகை வைத்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.
    • போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் நேற்று மணவாளக்குறிச்சி மற்றும் மண்டைக்காடு பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.

    மேலும் கடைகளில் போதைப்பொருட்கள் விற்கக்கூடாது. போதைப்பொருள் கேட்டுவரும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் பற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துபவர் பற்றி அறிந்தால் அதுபற்றி தகவலை தெரிவிக்க வேண்டும், தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும் கடைகளில் போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் அருகே இரவு நேரங்களில் சில கும்பல் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் பிரதான சாலையாக நதிப் பாலம்-பனைக்குளம் சாலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிப்பறி கொள்ளையர்கள் மறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளை தாக்கி பொருட்களை கொள்ளை யடித்துச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக பொது மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

    கடந்த காலங்களில் இந்த சாலையில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போலீசாரிடம் புகார் அளித்தும் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நதிப்பாலம்-பனைக்குளம் சாலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

    மேலும் இந்த சாலையில் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றால் மட்டுமே வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    பனைக்குளம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ராமநாத புரம் நகர் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்ந நிலையில் வேலைக்குச் செல்பவர்கள் இரவு நேரத்தில் ஊர் திரும்ப வேண்டியுள்ளது. அப்படி வரும் தொழிலாளர்கள், பயணிகளை குறி வைத்து இருசக்கர வாகனங்கள், கார்களை வழிமறித்து வாகன ஓட்டிகள், பயணிகளை தாக்கி வழிப்பறிகளில் ஈடுபடுகின்றனர்.

    இது தொடர்பாக ஏராளமான புகார்கள் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அந்த குற்றவாளிகள் யார்? என கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பகவதி அம்மனை தரிசிக்கும் அவலம்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொ டங்கிய நிலையில் ஏராள மான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். பஸ், கார் மற்றும் வேன்களில் வரும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் சிலுவை நகர் வழியாக காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு காமராஜர் மண்டபம் வழியாக முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    ஆனால் தற்போது சிலுவை நகரில் இருந்து சன்செட் பாயிண்ட் பகு திக்கு அய்யப்ப பக்தர் களின் வாகனங்களை போலீசார் அனுப்புவதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் மட்டுமே கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் சென்றடைய முடியும். ஏற்கனவே சபரிமலையில் தரிசனம் செய்து களைப்பில் வரும் அய்யப்ப பக்தர்கள், வயதான, ஊனமுற்ற பக்தர்கள் பலர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.ஏற்கனவே நுழைவு கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் கட்டிவிட்டு வரும் அய்யப்ப பக்தர்கள் கூடுதலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது. இதற்காக ஒரு நபர் சுமார் ரூ.100 கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.

    இதுவரை காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை என்றால் மட்டும் பயன்படுத்தி வந்த சிலுவை நகர் பார்க்கிங்கில் அனைத்து வாகனங்களையும் அனுப்பும் நடைமுறை அய்யப்ப பக்தர்களை வேண்டும் என்றே அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்கள் சூட்கேஸ், கைப்பை கொண்டு செல்ல தடை
    • மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுத லாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.  சபரிமலை சீசன் தொடங்கிய நேற்று முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

    இதனால் பகவதி அம்மன் கோவில் வெளி பிரகா ரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ" வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணு மாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக படகு துறையில் அய்யயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இது தவிர கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை உள்பட அனைத்து இடங்களி லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பா டும் செய்யப்பட்டுள்ளது. சிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • வருகிற 21-ந்தேதி நடக்கிறது
    • லம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 42 வாகனங்கள் ஏலம் 21-ந்தேதி காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்று காலை 8 மணிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். ஒரு வாகனத்தை ஏலம் எடுத்த பிறகு மற்றொரு வாகனத்தை ஏலம் எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

    நுழைவு கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்துக்கு ஏல தொகையுடன் சேர்த்து 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ஒரு வாரத்துக்குள் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம். ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தியவர்கள் வாகனத்தை ஏலம் எடுக்கவில்லை என்றால் முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை (நாகர்கோவில்) 04652-220377, தக்கலை-04651-271198, துணை போலீஸ் சூப்பிரண்டை 04651-224833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தலைமறைவான வாலிபரை பிடிக்க கேரளா விரைந்த போலீசார்
    • 2 வாலிபர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதை பார்த்தனர்.

    :குழித்துறை 

    மார்த்தாண்டம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், தலைமை காவலர் சகீர் மற்றும் போலீசார், தீபாவளியன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நட்டாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது, 2 வாலிபர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதை பார்த்தனர்.

    அவர்களை, சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கண்டித்தனர். அப்போது போதையில் இருந்த 2 பேரும் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 24), அனீஷ் ஆகியோர் தான் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அஜித் கைது செய்யப்பட்டார். அனீஷ் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனீஷை பிடிக்க போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    • தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏராளமான பொதுமக்கள் குவிவார்கள்.
    • கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்தி நாமக்கல் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

    நாமக்கல்:

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏராளமான பொதுமக்கள் குவிவார்கள். இதனால் கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்தி நாமக்கல் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

    சி.சி.டி.வி கேமிரா

    அதில் கடைகளின் உள்ளே அதிகமாக பணம் ஏதும் வைத்திருக்க கூடாது. நகராட்சி விதிப்படி சி.சி.டி.வி. கேமிராக்களை கடைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வைத்திருக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமரா இல்லை என்றால் தற்காலிகமாக பாதுகாவலர்களை போட வேண்டும்.

    கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை நகை, பணம், செல்போன் மற்றும் அவரது உடைமைகளை கவனமாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். சந்தேகப்படும் படியாக வரும் நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். முடிந்தால் அவர்களை செல்போனில் படம் எடுத்து போலீஸ் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    கடைகளை பூட்டும் போது ஷட்டர் நடுவிலும் பூட்ட வேண்டும். அவ்வாறு பூட்டாமல் விட்டால் திருடர்கள் உள்ளே புகுந்து திருட வாய்ப்புள்ளது. எனவே கட்டாயமாக ஷட்டர் நடுவிலும் பூட்ட வேண்டும்.

    திருடர்கள் கடை உரிமையாளர்களையோ வாடிக்கையாளர்களையோ திசை திருப்பி திருட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து பணியா ளர்களுக்கும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் காவல் அறிவுறுத்தலை தெரிவிக்க வேண்டும்.

    போக்குவரத்து நெரிசல்

    மேலும் போக்குவ ரத்திற்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த விழிப்புணர்வு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், பள்ளிபாளையம், குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    ஆய்வு

    இதன்படி இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், பாரதிமோகன், தீபா, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட குழு திருச்செங்கோடு நகர எல்லைக்குட்பட்ட 61 பேர், ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 12 பேர், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 30 பேர், குமாரபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட 23 பேர் என 164 பேர் வீடுகளில் ஒரே நாளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    திருந்தி வாழ அறிவுரை

    அப்போது பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் வீடுகளிலும் இருந்தவர்களிடம் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும், திருந்தி வாழ அறிவுறுத்துங்கள் எனவும் குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர்.

    ஆயுதங்கள் பறிமுதல்

    இந்த 164 பேரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர்கள் வேறு ஏதாவது நடவ டிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பெயரில் நேற்று ஒரே நாளில் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொட்டப்பட்டது.

    அதில் சில இடங்களில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றப்பின்னணி உள்ள வர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து குற்றப் பின்னணி கொண்டவர்களையும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ×