search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் மார்க்கெட்டில்  கடன் கொடுக்காததால்  துணி கடைக்கு தீ வைப்பு
    X

    மார்த்தாண்டம் மார்க்கெட்டில் கடன் கொடுக்காததால் துணி கடைக்கு தீ வைப்பு

    • அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார்.

    குழித்துறை, அக்.27-

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் புளியங்விளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 67). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் துணிக்கடை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென எரிவதை பார்த்ததும் மார்க்கெட்டில் இருந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனால் கடையின் முன் பகுதியில் கட்டப்பட்டு இருந்த பெட்ஷீட் மற்றும் துண்டுகள் எரிந்து நாசமானது. இதையடுத்து ஸ்ரீகுமார் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×