என் மலர்
நீங்கள் தேடியது "indian citizenship"
- இத்தாலியில் பிறந்த சோனியா பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது.
- அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. தற்போது சோனியா காந்தியின் ஓட்டுரிமை குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான அனுராக் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இத்தாலியில் பிறந்த சோனியாவின் பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார் என தெரிவித்தார்.
அனுராக் தாகூரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் வலைதளத்தில் 1980-ம் ஆண்டு புதுடெல்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலின் நகலை பகிர்ந்துள்ளார்.
மேலும், 1980-ம் ஆண்டு முதல் முறையாக சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார். அந்தச் சமயம் சப்தர்ஜங் சாலையில் உள்ள பிரதமர் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தனர். இந்திரா, ராஜிவ், சஞ்சய் மற்றும் மேனகா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 1980-ம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, வாக்குச்சாவடி 145ல் வரிசை எண் 388ல் சோனியாவின் பெயர் சேர்க்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க தேர்தல் சட்ட விதிமீறலாகும். இந்திய குடிமகன்களால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியுண்டு. அதன்பிறகு 1982-ல் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டு, 1983-ம் ஆண்டு ஜனவரி மாதம் சோனியா பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. அவர் 1983-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மட்டுமே இந்திய குடியுரிமை பெற்றார். அதாவது, குடியுரிமை இல்லாத நிலையில், 4 மாதங்களுக்கு முன்பே மீண்டும் வாக்காளர் பட்டியலில் 2-வது முறையாக பெயர் சேர்க்கப்பட்டது.
ராஜீவை திருமணம் செய்தபிறகு, இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஏன் ஆகியது? இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லையென்றால் வேறு என்ன? என பதிவிட்டுள்ளார்.
- வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
- அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டினர்.
மகாராஷ்டிரா மாநிலம் பயனே நகரில் கார்கில் போர் வீரர் ஹக்கிமுதீன் ஷேக் (58) வீட்டுக்குள் 60 பேர் கொண்ட கும்பல் புகுந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்கில் போர் வீரர் வீட்டில் புகுந்த கும்பல், அவர்களை வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக ஹக்கிமுதீன் ஷேக் குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பதாக மனு.
- மக்களவை உறுப்பினர் பதவி செல்லாது என அறிவிக்கக்கோரி மனுத்தாக்கல்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்துள்ளார். இதற்கான ஆவணங்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் சில இ-மெயில்கள் தன்னிடம் உள்ளது. இதனால் இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் ராகுல் காந்தி, இந்திய தேர்தல்களில் போட்டியிட தகுதியானவர் அல்ல. மக்களவை உறுப்பினர் பதவியை வகிக்க இயலாது என விக்னேஷ் ஷிஷிர் உத்தர பிரதேச மாநில அலகாபாத் உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து அந்நாட்டு அரசாங்களத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது "மனுதாரரின் புகாரைத் தீர்ப்பதற்கு மத்திய அரசால் எந்த கால அவகாசத்தையும் வழங்க முடியாது, இந்த மனுவை நிலுவையில் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை" என தெரிவித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், மனுதாரர் பிற மாற்று சட்ட தீர்வுகளை ஆராய்வதற்கு அனுமதி அளித்ததுள்ளது.
- மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்
- அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வாலாஜா அருகே உள்ள இலங்கை தமிழர் முகாம் பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களை நேரில் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி உள்ள இலங்கை தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு ,வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் விருப்பப்பட்டு இங்கேயே தங்கி உள்ளனர்.
மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பமில்லாத தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்சத்தீவு ஒப்பந்தத்தின் மூலம் மீனவர்களின் உரிமை பாதிக்கப்படுவதால், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போல கட்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்து அதை இந்தியாவுடன் இணைத்து மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
இவர் அவர் கூறினர்.
பின்னர் அவர் வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய படத்தில் நடைபெற்ற சிறப்பு சண்டியாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் மோகன், கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
- நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ௨௦௧௯ ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, குடியுரிமை சட்டத்தில், மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.
இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. அனால் பாஜக இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயந்த இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த 14 புலம்பெயர்ந்வர்களிடம் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அவர்களுக்கான குடியுரிமை ஆவணங்களை வழங்கி அதன் நன்மைகள் குறித்து பேசினார்.இதில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







