search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்
    X

    இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்

    • மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்
    • அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வாலாஜா அருகே உள்ள இலங்கை தமிழர் முகாம் பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களை நேரில் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி உள்ள இலங்கை தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு ,வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் விருப்பப்பட்டு இங்கேயே தங்கி உள்ளனர்.

    மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பமில்லாத தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கட்சத்தீவு ஒப்பந்தத்தின் மூலம் மீனவர்களின் உரிமை பாதிக்கப்படுவதால், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போல கட்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்து அதை இந்தியாவுடன் இணைத்து மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

    இவர் அவர் கூறினர்.

    பின்னர் அவர் வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய படத்தில் நடைபெற்ற சிறப்பு சண்டியாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் மோகன், கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×