என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியுரிமை பெறும் முன்னரே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர்: ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி
    X

    குடியுரிமை பெறும் முன்னரே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர்: ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி

    • இத்தாலியில் பிறந்த சோனியா பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது.
    • அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க. தற்போது சோனியா காந்தியின் ஓட்டுரிமை குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான அனுராக் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இத்தாலியில் பிறந்த சோனியாவின் பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார் என தெரிவித்தார்.

    அனுராக் தாகூரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் வலைதளத்தில் 1980-ம் ஆண்டு புதுடெல்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலின் நகலை பகிர்ந்துள்ளார்.

    மேலும், 1980-ம் ஆண்டு முதல் முறையாக சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார். அந்தச் சமயம் சப்தர்ஜங் சாலையில் உள்ள பிரதமர் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தனர். இந்திரா, ராஜிவ், சஞ்சய் மற்றும் மேனகா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 1980-ம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, வாக்குச்சாவடி 145ல் வரிசை எண் 388ல் சோனியாவின் பெயர் சேர்க்கப்பட்டது.

    இது முழுக்க முழுக்க தேர்தல் சட்ட விதிமீறலாகும். இந்திய குடிமகன்களால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியுண்டு. அதன்பிறகு 1982-ல் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டு, 1983-ம் ஆண்டு ஜனவரி மாதம் சோனியா பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. அவர் 1983-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மட்டுமே இந்திய குடியுரிமை பெற்றார். அதாவது, குடியுரிமை இல்லாத நிலையில், 4 மாதங்களுக்கு முன்பே மீண்டும் வாக்காளர் பட்டியலில் 2-வது முறையாக பெயர் சேர்க்கப்பட்டது.

    ராஜீவை திருமணம் செய்தபிறகு, இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஏன் ஆகியது? இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லையென்றால் வேறு என்ன? என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×