என் மலர்
இந்தியா

மறைந்த ராணுவ வீரரின் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி - ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
- பாகிஸ்தானின் தாக்குதலின் போது ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி உயிரிழந்தார்.
- பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஆந்திராவை சேரந்த முடவத் முரணி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்தவர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலின் போது உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக்கின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், முரளியின் குடும்பத்திற்கு பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.






