search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "army soldiers"

    • பயங்கரவாதிகள் நம் எல்லைக்குள் ஊடுருவி மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று அண்டை நாடு நினைத்தால் அது தவறு.
    • அவர்கள் இந்த பாதையில் செல்ல விரும்பினால், பின்விளைவுகளுக்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமுற்றனர். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஜேகேஎன்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறும்போது,

    நாட்டின் மீது உலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க வேண்டும் என்பதே இப்போதைக்கு ஒரே வழி. இது அமைதிக்கான பாதை அல்ல. அழிவுக்கான பாதை. பயங்கரவாதம் யாருக்கும் உதவாது. பயங்கரவாதிகள் நம் எல்லைக்குள் ஊடுருவி மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று அண்டை நாடு நினைத்தால் அது தவறு. அவர்கள் தோல்வி அடைவார்கள்.

    இதற்கு பிறகு கோபம் அதிகமாகி ஆக்கிரமிப்பு மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பயப்படுகிறேன். அவர்கள் ஏற்கனவே தங்கள் நாட்டை அழித்துவிட்டார்கள். இப்போது ஒரு போர் அதை மேலும் அழிக்கும். இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?

    உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் துக்கம் அனுசரித்து, பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவர்கள் இந்த பாதையில் செல்ல விரும்பினால், பின்விளைவுகளுக்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் கைகோர்த்து செல்ல முடியாது.

    அவர்கள் நல்ல உறவுகளை விரும்பினால், அவர்கள் அந்த பாதையில் நடக்க வேண்டும், பயங்கரவாதம் அந்த பாதையில் இல்லை. எனவே பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்.
    • எங்கள் வீரர்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமுற்றனர். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில்,

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் பத்னோட்டாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்.

    அவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மேலும் எங்கள் வீரர்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

    இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


    • இந்து கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
    • மசூதி அமைந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின் பேரில் இங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

    இந்திய தொல்லியல்துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கையில் மசூதி அமைந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் ஒரு வாரத்திற்குள் இந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஞானவாபியில் நேற்று நள்ளிரவு பூஜை தொடங்கி ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது. ஞானவாபி வளாக கணக்கெடுப்பின் போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. மேலும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    இதையொட்டி அப்பகுதியில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடந்த விமான தாக்குதலில் 2 கேரள வீரர்கள் முக்கிய பங்காற்றினர். #IAFStrike
    திருவனந்தபுரம்:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது.

    ராணுவத்தின் விமானப்படை வீரர்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தனர். சில மணி நேரங்களில் நடந்த இந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடந்த துல்லிய தாக்குதலுக்கு கேரளாவைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கனூரை அடுத்த பாண்டநாடு கிராமத்தைச் சேர்ந்த ஏர்மார்‌ஷல் ஹரிகுமார், கண்ணூர் மாவட்டம் கடச்சிராவைச் சேர்ந்த ஏர்மார்‌ஷல் ரகுநாத் நம்பியார் இருவரும் இந்திய ராணுவத்தின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லை பகுதிகளின் கண்காணிப்பை மேற்கொண்டு வந்தனர்.

    பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்க உத்தரவு கிடைத்ததும், அதனை மிகவும் சாமர்த்தியமாக நடத்திக்காட்டி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

    ஏர்மார்‌ஷல் ஹரிகுமார், 1979-ம் ஆண்டிலிருந்து விமானப்படையில் பணியாற்றி வருகிறார். பரம் விஷிஸ்டு சேவா மெடல், அதி விஷிஸ்டு சேவா மெடல், வாயுசேனா மெடல், விஷிஸ்டு சேவா மெடல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    ரகுநாத் நம்பியார், 1981-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நே‌ஷனல் டிபென்ஸ் அகாடமியில் படித்து ராணுவத்தில் இணைந்தவர் ஆவார். #IAFStrike 


    ×