search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pooja"

    • மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார்.
    • நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    தனக்கென கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். அவர் நடிப்பில் ஜனவரி மாதம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர்-1 படம் வெளியாகியது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து அருண் விஜய் அடுத்த படம் நடிக்கவிருக்கிறார். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

     

    படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய இயக்குனர் திருக்குமரன் " எப்படி சிவகார்த்திகேயனுக்கு மான் கராத்தே ஒரு திருப்பு முனை படமாக அமைந்ததோ , அதேப் போல் அருண் விஜய் - க்கும் ஒரு முக்கியமான படமாக அமையும். இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக அமையும்" எனக் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
    • இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் புகழ் பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகு திகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்ப ணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.

    இந்த நிலையில் தற்போது அக்னி தீர்த்தகடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் 400 வரை வசூலிக்கப்படும் எனவும். அதில் இருந்து ரூ.80, 160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னோர்களுக்காக திதி கொடுக்க கட்ட ணம் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேசுவரம் அக்னி தீர்த்தத்ததில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்ட பூஜை செய்யக்கூட கோவில் நிர்வாகத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

    நம் முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற தி.மு.க. அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இந்த முறையற்ற உத்தரவை உடனடியாக திரும்பப்பெற்று இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களை தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் எனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் அதற்கான விலையை தி.மு.க. அரசு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சட்ட விதிகளின்படி கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயிக்கலாம். ஆனால் கடற்கரையில் தனிமனித பூஜைக்கு எப்படி கட்டணம் வசூலிக்க முடியும். இது பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் அதிக கட்டண வசூலிக்கும் வழிவகுக்கும். எனவே அரசின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.

    • வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

    வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருள, உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தராக அருள்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்தில் காமீக ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவன் சந்நதிக்கு மேலே உள்ள இந்திர விமானம், நடுவில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்தில் இருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

     இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர்.

    இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பிறகுதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சந்நதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார்.

    ஞாயிற்றுக்கி ழமை, உத்தராயண, தட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கின்றன.

    ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச்சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள்.

    இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற கோப அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை.

    தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார்.

    அவருக்குக் காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்தருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், `ரவீஸ்வரர்' (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.

    முற்காலத்தில் இங்கு சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார்.

    அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன் பின்பு, இங்கு அம்பிகைக்கு சந்நதி எழுப்பப்பட்டது. இவ்விழாவின் பத்தாம் நாளில் மகிஷன் வதம் வைபவம் நடக்கும்.

    அப்போது அம்பாள் சந்நதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக் கட்டிவிட்டு, அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர்.

    இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். சிவன் சந்நதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

    • இந்து கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
    • மசூதி அமைந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின் பேரில் இங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

    இந்திய தொல்லியல்துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கையில் மசூதி அமைந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் ஒரு வாரத்திற்குள் இந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஞானவாபியில் நேற்று நள்ளிரவு பூஜை தொடங்கி ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது. ஞானவாபி வளாக கணக்கெடுப்பின் போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. மேலும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    இதையொட்டி அப்பகுதியில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • கணபதியை வணங்கி விட்டு சண்டிகேஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் வணங்கவும்.
    • பிரசித்திப் பெற்ற கோவில் ஸ்தலங்களில் பொதுவாக சிவன் ஸ்தலங்களில் தீர்த்த குளம் இருக்கும்.

    பிரசித்திப் பெற்ற கோவில் ஸ்தலங்களில் பொதுவாக சிவன் ஸ்தலங்களில் தீர்த்த குளம் இருக்கும்.

    கோவில் உள்ளே செல்லும் முன்பு தீர்த்த குளத்தில் கை கால்களை சுத்தம் செய்து கொண்டு அந்த தீர்த்தத்தை தலையிலும் தெளித்துக் கொள்ளவும், பிறகு கோபுரத்தை பார்த்து வணங்கவும்.

    கோபுரம் தரிசனம் முடித்துக் கொண்டு கணபதியை வணங்கவும், கணபதியை வணங்கி விட்டு சண்டிகேஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் வணங்கவும்.

    சிவாலயத்தில் பலி பீடத்தருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.

    3, 4, 7, 9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம்.

    வடபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக்கூடாது.

    ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.

    கிழக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.

    தெற்கு, மேற்கு நோக்கிய சன்னிதிகளில் பலி பீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.

    வடக்கு நோக்கிய சன்னிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.

    சூரிய கிரகணத்தின்போதும், சங்கராந்தி காலத்திலும் மேற்கே கால் நீட்டி நமஸ்கரிக்கலாகாது.

    அஷ்டாங்க நமஸ்காரத்தில் முதலில் தலையை வைத்து, மார்பு பூமியில் படும்படி வலக்கையை முன்னும், இடக்கையைப் பின்னும் நேரே நீட்டி, பின்னர் அம்முறையே மடக்கி, வலத்தோளும், இடத்தோளும் தரையில் பொருந்தும்படி கைகளை இடுப்பை நோக்கி நீட்டி, வலக் காதை முதலிலும், இடக்காதைப் பிறகும் பூமியில் படும்படி செய்ய வேண்டும்.

    • தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • வினீத் என்ற நபரையும் அறிமுகப்படுத்தினார்.

    தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் இவர் நடித்த மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார். இவர் தமிழில் சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் இவர், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருந்தார். மேலும் தனது காதலன் இவர் தான் வினீத் என்ற நபரையும் அறிமுகப்படுத்தினார்.

     


    இந்த நிலையில், இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    தென்காசி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

    கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் ஆகியவை நடக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் சிறிய மலை குன்றின் மீது ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாதம் இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் ராமர் சீதையை தேடி செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் அருந்தியாக நம்பப்பட்டு வரும் சுனை ஒன்றும் உள்ளது. சுனையில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருப்பதால் காட்டுப்பாதையில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் தேவையை அந்த சுனை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்த சுனையில் இன்று பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் தலைமையிலான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    பின்னர் சுனைநீரிலும் சிறப்பு பூஜைகள் செய்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுனை நீரை பருகி ராமபிரானை வழிபட்டனர்.

    • ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார்.
    • பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் வாழும் ராம பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமரின் புகழை பஜனைகள் பாடியும், கீர்த்தனைகளாக ஒலித்தும், வழிபாடுகள் நடத்தியும் வருகிறார்கள்.

    அந்த வகையில் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் உள்ள தெய்வீக உணர்வை எழுப்பும் விதமாக விதிகளின் படியும், வேதங்களின் படியும் கடந்த 12-ந்தேதி முதல் 11 நாட்கள் விரதத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.

    இதையடுத்து ராமாயணம் மற்றும் ராமருடன் தொடர்புடைய ஸ்தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் லெபாக்ஷியில் உள்ள வீர பத்திரர் கோவிலில் தொடங்கிய இந்த பயணம் தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரம் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் நிறைவு செய்கிறார்.

    இதற்காக இரண்டு நாள் பயணமாக ராமேசுரத்திற்கு இன்று மாலை வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் இரவு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அருகில் மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடம் எனப்படும் ராம கிருஷ்ண தபோவனத்தில் தங்குகிறார்.

    இந்த மடத்தில் வழக்கமான வழிபாடுகள், பஜனைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை ராம்நாம சங்கீர்த்தனம், சமய சொற்பொழிவுகள், கலாச்சாரம் தொடர்பான போட்டிகள் நடத்தப்படுகிறது. எளிமையுடன் கூடிய ஆன்மீகத்தை நாடுவோர் இங்கு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    அதன்படி ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார். அப்போது தரையில் படுத்து உறங்குகிறார். முன்னதாக அந்த மடத்தில் தங்கியிருக்கும் துறவிகளையும், சன்னியாசிகளையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ண தலங்களில் திருமகள் ருக்மிணி எனும் பெயரில் அவருடன் வீற்றிருக்கிறாள்.
    • எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்தில் ரேவதி என்னும் பெயரில் லட்சுமி மகிழ்ந்திருந்தாள்.

    திருமால் அன்பர்களை காத்து அருள்புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதாரங்கள் ஆகும்.

    இவ்விரு அவதாரங்களிலும் மகாலட்சுமியை தேவியாகச் சொல்லவில்லை.

    திருமால் ஆமை அவதாரம் எடுத்து மலையைத் தாங்கியதாலேயே தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந்தது. அப்போது பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினாள்.

    திருமால் ஆமை வடிவை நீக்கி அழகிய கோலத்துடள் சென்று அவளை மணந்து கொண்டார்.

    மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த திருமகளின் மறுகூறான பூமிதேவியை மேற்கொண்டு வந்து உலகைப் படைத்தார்.

    அவரைப் பூவராகம் என்று போற்றுகின்றனர்.

    அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகில வல்லி என்று அழைக்கப்படுகிறாள்.

    சில ஆலயங்களில் திருமகளை மடிமீது கொண்டுள்ள லட்சுமி வராகரையும், சில தலங்களில் புவிமகளை மடிமீது கொண்டுள்ள வராகரையும் காண்கிறோம்.

    ஆதிவராக ஷேத்திரமான ஸ்ரீமுஷ்ணத்தில் வராகமூர்த்தி இரு பெரும் தேவியருடன் காட்சியளிக்கின்றார்.

    நரசிம்ம அவதாரத்தில் அவர் இரண்யனின் குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தும், ரத்தத்தைக் குடித்தும், ஆர்ப்பரித்தார்.

    அவருடைய கோபக் கனல் எல்லாரையும் வருத்தியது. தேவர்கள் அவருடைய உக்கிரமயமான கோபத்தை எளிதில் தணிக்கும் ஆற்றல் மகாலட்சுமிக்கே உண்டு என்பதால் அவளைப் பணிந்து சாந்தப்படுத்துமாறு வேண்டினர்.

    மகாலட்சுமி நரசிம்மரை அணுகிக் கோபத்தை மாற்றினாள்.

    பிறகு திருமால் அவளைத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு லட்சுமி நரசிம்மனாக அனைவருக்கும் அருள்புரிந்தார்.

    இதையொட்டி நரசிம்மர் 'மாலோலன்' என்று அழைக்கப்படுகிறார்.

    ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் மகாலட்சுமி ஜனக புத்ரியாக சீதையாக தோன்றி, ராமபிரானை மணந்தாள்.

    அப்போது அவளுக்குச் சீதா, ஜானகி, மைதிலி, வைதேகி, ராகவி முதலான பெயர்கள் வந்தன.

    எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்தில் ரேவதி என்னும் பெயரில் லட்சுமி மகிழ்ந்திருந்தாள்.

    ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மகாலட்சுமி வைஷ்க மன்னனின் மகளாகத் தோன்றி ருக்மணி எனும் பெயரில் வளர்ந்து கிருஷ்ணனை மணந்தாள்.

    சிவனால் எரிக்கப்பட்டுப் பார்வதியால் உருவமில்லாதவனாக உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் அவளுக்குப் புத்யும்னன் எனும் பெயரில் மகனாகத் தோன்றினான்.

    கிருஷ்ண தலங்களில் திருமகள் ருக்மிணி எனும் பெயரில் அவருடன் வீற்றிருக்கிறாள்.

    திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி ஆலயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தசாரதி கோலத்தில் நிற்க, அவருக்கு வலப்புறம் பெரிய வடிவில் ருக்மணியைக் காணலாம்.

    • மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள்.
    • கருணை வேண்டும்போது காருண்ய லட்சுமியாக அருள்கிறாள்.

    விஷ்ணு ஆலயங்களில் மகாலட்சுமியை "தாயார்" என்று வணங்குகிறோம். முதலில் தாயாரை வழிப்பட்ட பிறகு பெருமாளை சேவிக்க வேண்டும்.

    மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள்.

    மகாலட்சுமி வரமளிக்கும் நாளில் வரலட்சுமி ஆகிறாள்.

    செல்வம் வேண்டும்போது தனலட்சுமி

    கல்வி வேண்டும்போது வித்யாலட்சுமி

    தைரியம் வேண்டும்போது வீரலட்சுமி

    வெற்றியை வேண்டும்போது விஜயலட்சுமி

    புகழ் வேண்டும்போது கீர்த்திலட்சுமிணீ

    சாந்தம் வேண்டும்போது சாந்த லட்சுமி

    கருணை வேண்டும்போது காருண்ய லட்சுமி

    உடல்நலம் வேண்டும்போது ஆரோக்கிய லட்சுமி

    ஞானத்தை வேண்டும்போது ஞானலட்சுமி

    மோட்சத்தை வேண்டும்போது மோட்ச லட்சுமி

    சந்தோஷம் வேண்டும்போது ஆனந்த லட்சுமி

    திருமணம் வேண்டும்போது வைபவ லட்சுமி

    நிலம், வீடு, ஆபரணம் வேண்டும்போது ஐஸ்வர்ய லட்சுமி

    விவசாயம் செய்யும் விவசாயிகள் வேண்டும்போது தானிய லட்சுமி

    அழகை வேண்டும்போது சவுந்தர்ய லட்சுமி

    மகப்பேறு வேண்டும்போது சந்தான லட்சுமி

    நோயிலிருந்து மீளவேண்டும்போது சக்தி லட்சுமி

    சாமர்த்தியம் வேண்டும்போது பக்தி லட்சுமி

    • முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும்.
    • கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

    துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என யாரும் பூஜை செய்யாமல் இருந்து விட வேண்டாம்.

    முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும். அதை சொல்லியே பின் கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

    1. சகல சித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!

    2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!

    3. ராஜமரியாதை தரும்கஜலட்சுமியே போற்றி!

    4. செல்வச் செழிப்பைத் தரும்தனலட்சுமியே போற்றி!

    5. தான்ய விருத்தியளிக்கும் தான்ய லட்சுமியே போற்றி!

    6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும் விஜயலட்சுமியே போற்றி!

    7. சவுபாக்கியங்கள் தரும் மகாலட்சுமியே போற்றி!

    8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும் வீரலட்சுமியே போற்றி!

    9. அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!.

    • கார்த்திகை மாதப் பஞ்சமியை ‘ஸ்ரீபஞ்சமி’ என்று அழைத்து அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.
    • சுக்ரவார விரதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை தியானித்து வழிபட செல்வ வளம் பெருகும்.

    ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமியும் லட்சுமி விரதத்திற் குரிய காலமாகும். ஆவணி வளர்பிறைப் பஞ்சமிக்கு 'மகாலட்சுமி பஞ்சமி' என்று பெயர்.

    அன்று தொடங்கி அஷ்டமி வரை நான்கு நாட்கள் வழிபடுவது மகாலட்சுமி விரதம் ஆகும்.

    கார்த்திகை மாதப் பஞ்சமியை 'ஸ்ரீபஞ்சமி' என்று அழைத்து அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

    அன்று அஷ்ட லட்சுமிகளுக்குப் பால் நிவேதனம் செய்து, வருபவர்களுக்கு வழங்கினால் தோஷங்கள் நீங்கும்.

    ஐப்பசி மாதப் பவுர்ணமியில் மகாலட்சுமியை வழிபடச் செல்வம் பெருகும்.

    ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளிக்கு அடுத்த நாள்) மகாலட்சுமி பூஜை செய்யப்பட வேண்டும்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது சோடச லட்சுமி விரதமாகும். இதனால் 16 செல்வங்களையும் நிறைவாக பெற்று வாழலாம்.

    இந்நாட்களில் ஒரு வேளை பகலில் மித உணவு உண்டு, மாலையில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அஷ்ட லட்சுமிகளை வணங்கி, நிவேதனம் செய்த பால் பழம் உண்டு விரதம் முடிப்பது பழக்கம் ஆகும்.

    சுக்ரவார விரதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை தியானித்து வழிபட செல்வ வளம் பெருகும்.

    நவராத்திரி லட்சுமி விரதம் சாரதா நவராத்திரியில் 4, 5, 6ம் நாட்களில் லட்சுமிவரும் நாளாகக் கருதி விரதம் செய்யலாம்.

    பைரவ லட்சுமி விரதம் புளிப்புப் பண்டங்கள் சேர்க்காத படையல்களை வைத்து வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்து வரும் 8 வெள்ளிக்கிழமைகள் செய்து முடிக்க வேண்டும்.

    எப்படி அழைத்தாலும் வரக்காத்திருக்கும் வரலட்சுமி விரத நாளில் நமது வீட்டில் உள்ள பூஜைப் பொருட்களை பயன்படுத்தி எளிமையாகவும், பூஜை செய்யலாம்.

    ×