என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஜிஎஸ்"

    • 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.
    • புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ், பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.

    'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் 'ஏஜிஎஸ் 28'.

    குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்குகிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.

    அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.

    'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.

    முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய ட்ரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' என மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது. 

    • நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார்.
    • தளபதி 68வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்தது. இப்படத்தை முதலில் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்குவதாகவும், பிறகு அட்லீ இயக்குகிறார் எனவும் பல தகவல் வெளியாகி வந்தது. அதன்பின்னர் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டது.



    இந்நிலையில் தளபதி 68வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு மோஷன் போஸ்டர் வீடியோ வெளியிட்டு அறுவித்துள்ளது. அதன்படி தளபதி 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் ஏஜிஎஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளது. இதற்குமுன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தளபதி 68 படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோமாளி படத்தை இயக்கி பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார்
    • உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது

    2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை, 'வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் தயாரித்தது.

    "கோமாளி"யை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இது பிரதீப் ரங்கனாதனுக்கு ஹிட் படமாக அமைந்தது.

    அடுத்தடுத்து கொடுத்த வெற்றி படங்களின் மூலம், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்தது.

    அடுத்ததாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வீடியோவை ஏ.ஜி.எஸ் நிறுவனம் நேற்று யூ டியூபில் வெளியிட்டது.

    உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது. பிரதீப் ரங்கநாதன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்துவிற்கு ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடங்களுக்கு முன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்து எடுத்த குறும் படத்தில் பிரதீப் ரங்கனாதன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    'தி கோட்' படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு 5, 6 முறை எங்கள் வீட்டுக்கு வந்து விஜய் நடித்து வரும் படத்தில் விஜயகாந்த் தோற்றம் இடம்பெறுவது பற்றி என்னிடம் அனுமதி கேட்டார்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறி இருந்தார்.

    விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்து நான் யோசிக்க வேண்டும் அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்? செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும்.

    எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப் பெரிய பாசம் உண்டு. எனவே ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும் போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.

    விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொன்னேன். வெங்கட் பிரபுவிடம் உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று அந்த நேர் காணலில் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
    • சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    25 ஆண்டுகளாக இசைத்துறையில் சிறப்பான பணியை செய்து வருகிறார் யுவன். இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். படங்களுக்கு மாஸ் பி.ஜி.எம் வடிவமைப்பதில் யுவன் திறம் பெற்றவர். மெலடி மற்றும் காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் வல்லவர்.

    சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜயின் குரலில் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    எந்தளவு வரவேற்பு வந்ததோ அதே அளவு பாடலுக்கு எதிரான கமெண்ட்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. யுவன் ஷங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டு பேசி பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

    யுவன் இசையமைத்த இந்த பாடல் நன்றாக இல்லை என்றும் அவர் ஏன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்ரு பல கமெண்டுஸ்கள் வந்தது.

    இந்நிலையில் யுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இதற்கு எதிர்மறை கமெண்டுகள் காரணமா என குழம்பியுள்ள ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
    • இந்நிலையில் இன்று யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

    யுவன் இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். படங்களுக்கு மாஸ் பி.ஜி.எம் வடிவமைப்பதில் யுவன் திறம் பெற்றவர். மெலடி மற்றும் காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் வல்லவர்.

    சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜயின் குரலில் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    எந்தளவு வரவேற்பு வந்ததோ அதே அளவு பாடலுக்கு எதிரான கமெண்ட்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. யுவன் ஷங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டு பேசி பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

    இந்நிலையில் இன்று யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

    இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் யுவனிடம் மன்னிப்புக் கேட்டு பதிவுகளை பகிர்ந்தனர். அவர் ஏன் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் என்ற தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் யுவன் தற்பொழுது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் 'ஹலோ மக்களே உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி, நான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகவில்லை அது வெறும் டெக்னிக்கல் எரர், என்னுடைய குழு அதை சரி செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. நான் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு விரைவில் வருவேன். நன்றி " என பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
    • "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார்.

    2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை, 'வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் தயாரித்தது.

    "கோமாளி"யை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இது பிரதீப் ரங்கனாதனுக்கு ஹிட் படமாக அமைந்தது.

    அடுத்தடுத்து கொடுத்த வெற்றி படங்களின் மூலம், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்தது.

    அடுத்ததாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வீடியோவை ஏ.ஜி.எஸ் நிறுவனம் கடந்த மாதம் யூ டியூபில் வெளியிட்டது.

    பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து அவர்கள் கல்லூரி நாட்களில் நடந்ததை மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிடபட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதைத்தொடர்ந்து படத்தின் தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். படத்திற்கு டிராகன் என பெயரிட்டுள்ளனர்.

    இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது எக்ஸ் தளத்தில் " ஃபைரா டைட்டில் கேட்டா ஃபைர் ஓடவே டைட்டில் கொடுக்குறீங்களே" என்று பெருமையுடன் வழங்குகிறேன் என்று பதிவை பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் துவங்கப்படுகிறது. எம்மாதிரியான படமாக் இருக்குமென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×