புளியங்குடி முப்பெரும் தேவியர் கோவிலில் சிறப்பு பூஜை

21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
புளியங்குடி முப்பெரும் தேவியர் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி மாதாந்திர வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணியளிவில் நடை திறக்கப்பட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம். திருநீறு, நறுமண பொருட்கள் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் காலை 11 மணி முதல் 3 மணி வரை சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com