search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Science"

    • அறிவியல் ஆசிரியை பிரபாவதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டது

    புதுச்சேரி:

    பாகூர் அரசு நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் துரைசாமி முன்னிலை வகித்தார். அறிவியல் ஆசிரியை பிரபாவதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டது. இதனை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வை யிட்டனர்.

    முன்னதாக மாணவர்க ளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உடல்கல்வி ஆசிரியர் வசந்த ராஜா, ஆசிரியர்கள் தம்பி ராஜலட்சுமி, கார்த்திகேயன், மஞ்சு, ரம்யா, சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • அறிவியல் செயல்திட்டம், சிறுதானிய பயன்பாடு குறித்து கண்காட்சி வைத்திருந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் சி க .சு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதாரண்யம் ஒன்றிய அளவிலான வானவில் மன்றம்அறிவியல் கண்காட்சி நடைபெற்றது அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

    வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள பன்னாள் ஆயக்காரன்புலம்பஞ்சநதிக்குளம் தகட்டூர் புஷ்பவனம் கோடியக்காடுஉள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி சேர்ந்தநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சி அறிவியல் நாடகம் அறிவியல் செயல் திட்டம் சிறுதானிய பயன்பாடு குறித்துகண்காட்சி வைத்திருந்தனர் நிகழ்ச்சியின் நடுவர்களாக அறிவியல் ஆசிரியர் சிவகுமார் செந்தில்குமார் ராஜ்குமார் ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் படைப்புகளை தேர்வு செய்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்படக்கூடியது அறிவியல் மன்றம் ஆகும்.
    • அமிலத்தன்மை நீக்கும் சோதனையை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித மற்றும் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, ஆடின் மெடோனா, உமா மகேஸ்வ ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவி மோனிகா அனை வரையும் வரவேற்றார்.

    மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியர் விமலா கலந்து கொண்டு பேசுகையில்:-

    கணித மன்றத்தின் மூலம் கணித புதிர்கள் மற்றும் கணித விளையாட்டுகள் வேதகால கணிதம் மற்றும் மின்னல் வேக கணிதம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடுகள், போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஏதுவாக எளிய முறையில் கணித பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவை கணித மன்றத்தின் செயல்பாடுகள் ஆகும். மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்படும் அறிவியல் சார்ந்த பல செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்பட க்கூடியது அறிவியல் மன்றம் ஆகும் என்றார்.

    பின்னர், திரவ அடர்த்தி வேறுபாடு சோதனையை சந்தோஷ், அமிலத்தன்மை நீக்கும் சோதனையை புஷ்பா ஆகியோர் செய்து காண்பித்தனர். முடிவில் மாணவி அகத்தியர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவி ஷாலினி தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள் பாஸ்கரன், சக்கரபாணி, நடராஜன், முகமது ரஃபீக், பாலசுப்பி ரமணியன் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் விஜயகுமார் செய்திருந்தனர்.

    • அறிவியல் அற்புதம் கலந்துரையாடல் நடந்தது.
    • வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கல்வித்துறையின் சார்பில் அறிவியல் அற்புதம் என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.

    தேர்த்தங்கல் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் "தொலை நோக்கி பார்வை" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. முதன்மை கருத்தாளராக தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் மண்டல ஒருங்கிணைப்பாளார் சொக்கநாதன், திருச்சி அண்ணா கோளரங்க உயர் தொழில்நுட்ப அலுவலர் ஜெயபால் கலந்து கொண்டனர்.

    தொலைநோக்கியின் வரலாறு, அதன் வகைகள், பயன்பாடு, பள்ளிகளில் வானவியல் மன்றம் தொடங்குதல், தொலை நோக்கி, பைனாகுலர், வானியல் கருவிகள், வானியல் அறிஞர்களின் பிறந்த நாட்களை கொண்டாடுதல், சூரிய- சந்திர கிரகண நாட்கள், நிழல் இல்லா நாள், நீண்ட பகல், இரவு நாட்கள், சம இரவு-பகல் நாட்கள், வானியல் மேற்படிப்பு அதில் உள்ள வேலை வாய்ப்புகள், இஸ்ரோவின் வரலாறு, செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சி, அதில் உள்ள படிப்புகள், வேலை வாய்ப்புகள், டெலஸ்கோப் செய்முறை பயிற்சி, ஆசிரியர்கள்- மாணவர்களுக்கான ஆஸ்ட்ரானமி பயிலரங்கு, ஆஸ்ட்ரோ போட்டோ கிராபி, போஸ்டர் தயாரிப்பு போட்டிகள், ஆஸ்ட்ரானமி இளைஞர் மாநாடு நடத்துதல், கோடை கால பயிற்சிகள், அறிவியல் பாடல்கள், ஆஸ்ட்ரோ ஒலிம்பியார்ட், ஆஸ்ட்ரானமி மென்பொருட்கள் ஆகிய தலைப்புகளில் கலந்துரை யாடப்பட்டது.

    நிகழ்ச்சியை நயினார் கோவில் வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மாணவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இல்லம் தேடிக்கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி நன்றி கூறினார்.

    • தலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங் கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • அதன்படி இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் திறக்கப்பட்டு, 2023-2024- ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ உள்ளிட்ட பல்வேறு இளநிலை பட்டப் படிப்புக்கான முதலா மாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப் பப் பதிவு சமீபத்தில் தொடங்கி முடிவடைந்தது. இக்கல்லூரிகளில் 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–க–ளுக்கு நடப்பாண்டு 2 லட்–சத்து 46 ஆயி–ரத்து 295 பேர் விண்–ணப்பித்தனர்.

    விண்–ணப்–பித்–த–வர்–க–ளுக்–கான தர–வ–ரிசை பட்–டி–யல் கடந்த மே மாதம் 25-ந் தேதி வெளி–யி–டப்–பட்–டது. அதன் பிறகு கலந்–தாய்வு நடை பெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவிக ளுக்கு அட்மிஷன் ஆணை வழங்கப்பட்டது.

    இதனால் சேலம் பெரி யார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் செயல்படுடும் 22 அரசு கல்லூரிகளில் இடங்கள் நிரம்பின.

    இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங் கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் திறக்கப்பட்டு, 2023-2024- ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.

    முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் இன்று கல்லூரி முதல் நாள் என்பதால் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர்.

    பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர். அவர்களை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

    மேலும் வகுப்பு பேராசி யர்கள், பேராசிரியைகளும், மாணவ- மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்திருந்தனர்.

    இன்று கல்லூரி முதல் நாளையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப் பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது.

    • கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.

    பள்ளிபாளையம்:

    கோடை விடுமுறையை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டாட ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.

    இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் கண்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) புவனேஸ்வரி, பாதரை பள்ளி தலைமை ஆசிரியர், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், பள்ளிபாளையம் ஒன்றிய வானவில் மன்றம் கருத்தாளர் குணசேகர் மற்றும் கண்டிப்புதூர் பள்ளியில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள கலந்து கொண்டனர்.

    இதில் எளிய அறிவியல் பரிசோதனைகள், கற்பனையும் கைத்திறனும், சமையலறையில் அறிவியல் மற்றும் புதிர் கணக்குகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் அளிக்க ப்பட்டது.

    • திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
    • முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழாவில் சேவை செய்த மாணவர்களுக்கும், முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார். உதவித் தலைமை ஆசிரியை சத்யவதி , சாரண ஆசிரியர் திருவருள்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.

    • மாணவர்களால் உருவாக்கப்பட்ட உயர்திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • தொலைநோக்கியின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும், விளக்கங்களையும் மாணவர்களுக்கு விளக்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியில் சாராபாய் விண்வெளி கழகத்தின் சார்பில் அதிநவீன தொலைநோக்கி மூலம் சிறப்பு விண்வெளி காணொளி காட்சி பள்ளியில் இரண்டாவது முறையாக நடைபெற்றது.

    இந்த பள்ளி மாணவ- மாணவிகளால் உருவாக்கப்பட்ட உயர் திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இதன் மூலம் இரவில் அனைவரும் முழு சந்திரனையும் விண்வெளி கோள்கள் மற்றும் கிரகங்களையும் கண்டு வியப்புற்றனர். சங்கத்தின் முதல் கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சங்கத்தின் வழிகாட்டியும் இஸ்ரோ விஞ்ஞானியுமான இங்கர்சால், தமிழ்நாடு அறிவியல் பேரவை தலைவர் விழிநாதன் மற்றும் ராஜேந்திரன் கலந்து கொண்டு விண்வெளியில் அதிசயங்களையும் தொலைநோக்கின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும் அதற்கான விளக்கங்களையும் மாணவ -மாணவியர்களுக்கு விளக்கி அவர்களின் சந்தேகங்களை அறிவியல் பூர்வமாக தெளிவுபடுத்தினர்.

    இது போன்ற விண்வெ ளியை, தொலைநோக்கி மூலம் பார்க்கும் நிகழ்வுகள் மாதம் ஒருமுறை விண்வெளியை காணும் உகந்த நேரங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளியின் தாளாளர் சுதீஷ் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வித்யா, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி அன்பழகன் கலந்து கொண்னர்.

    சுபம் வித்யா மந்திர் பள்ளி சாராபாய் விண்வெளி சங்கத்தின் தலைவர் மாணவர் விஷ்வந்த், 9-ம் வகுப்பு மற்றும் மாணவர் மணிகண்டன் ஆகியோர் முதுகலை ஆசிரியர் ரியாஸ் மற்றும் முதுகலை ஆசிரியர் சுப்ரமணியம் ஆகியோரின் வழிகாட்டலில் கழக உறுப்பினர்களை கொண்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது
    • அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர். கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன், துணை முதல்வர் ஜெனி மற்றும் டேனியல் ஆகியோர் கண்காட்சியை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.

    • பொதுசேவை புரிந்தவர்கள் பத்மா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசாங்கம் பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.

    கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.
    • சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும், மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும், மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்ச்சி தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி வரை நடக்கி றது. இதனை தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நி லைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து புத்தகங்கள் வாசித்தார்.

    இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல், நேர்முக உதவியாளர்கள் பழனிவேல் (மேல்நிலை), மாதவன் (இடைநிலை) மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவர்கள் அறிவியல், வரலாறு, இலக்கி யம் சார்ந்த புத்தகங்கள் வாசித்தனர்.

    பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 729 பள்ளிகளில், சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர். ஒரு மணி நேரம் வாசித்தல் முடிந்த உடன் மாணவர்களுக்கு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தவும், வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இது அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×