என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "genetics"

    • 20-ஆம் நூற்றாண்டில் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் பின்பற்றிய Eugenics கோட்பாடு ஆகும்.
    • ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளைத் தனது தனித்தீவுக்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.

    அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில் Super Race மனித இனத்தை எப்ஸ்டீன் உருவாக்கத் திட்டமிட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்' மூலம் தெரியவந்துள்ளது.

    நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள தனது 10,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜோரோ ராஞ்ச் எஸ்டேட்டில், ஒரே நேரத்தில் 20 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தனது விந்தணு மூலம் கருத்தரிக்கச் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்.

    மரபணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கர்ப்பத்திலேயே அசாதாரண ஆற்றல்களையும் அறிவுத்திறனையும் வழங்கி தனது மரபணுக்களைக் கொண்ட ஒரு Super Race மனித இனத்தை உருவாக்க அவர் விரும்பினார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் தூய ஆரிய இன சந்ததியினரை உருவாக்கி, மனித இனத்தை மேம்படுத்த வேண்டும் என்ற விபரீத எண்ணம், 20-ஆம் நூற்றாண்டில் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் பின்பற்றிய Eugenics கோட்பாடு ஆகும்.

    ஹிட்லர் ஜெர்மனியில் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் சில கிராமங்களில் இது ரகசியமாக பரிசோதித்தும் பார்க்கப்பட்டது என கூறப்படுகிறது.

    இதே பாணியில் நவீன அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி எப்ஸ்டீன் தனது விருப்பத்தை மெய்ப்பிக்க முடியும் என்று நம்பியுள்ளார்.

    தனது இந்தத் திட்டங்களுக்கு ஒரு அறிவியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளைத் தனது தனித்தீவுக்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.

    மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களுக்குப் பல மில்லியன் டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

    தான் இறந்த பிறகு தனது உடல், குறிப்பாகத் தலை மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றை உறைநிலையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும், எதிர்காலத் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உயிர் பெற முடியும் என்றும் அவர் நம்பியுள்ளார் என்று தெரிய வருகிறது. 

    • இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம்.
    • நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.

    பொதுவாகவே இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம். ஏனென்றால் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களையே நாம் அதிகம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். முன்பெல்லாம் 40- 45 வயதுக்குப் பிறகு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதற்கான டெஸ்ட் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்போது 30 வயதை எட்டியதுமே சர்க்கரைநோய்க்கான டெஸ்ட் எடுக்கச் சொல்கிறோம்.

    ஒருகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி, அதில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அளவுக்கு அதிகமான அந்த உணவு கொழுப்பாக உடலில் சேரும். கொழுப்பாக சேரும் அந்த தன்மை இன்றளவும் நம் மரபணுக்களில் இருக்கிறது.

    நம்மில் பலரும் பசித்த பிறகு உணவு உண்ணும் பழக்கம் இல்லை. நேரத்துக்கு சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடுவதால் தேவைக்கு அதிகமான உணவானது கொழுப்பாக போய் சேர்ந்துவிடுகிறது. அதனால் நமக்கு சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால்தான் 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய சொல்கிறோம்.

    பெற்றோர் இருவரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த நோய் பாதிக்க 60 சதவிகிதம் வாய்ப்பு உண்டு. பெற்றோர் இருவருக்குமே சர்க்கரைநோய் இருந்தால் அந்த வாய்ப்பு 90 சதவிகிதமாக அதிகரிக்கும்.

    நம் வாழ்க்கைமுறையும் சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்களில் பிரதானமாக இருக்கிறது. உடலியக்கமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வது, இரவில் தாமதமாகவும் அதிகமாகவும் சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, இரவில் கண்விழித்திருப்பது என நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குப் பழகும்போது சர்க்கரைநோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை வரவிடாமல் தடுக்க முடியும். ஸ்ட்ரெஸ்சும் மிக முக்கிய காரணம்.

    ஏற்கெனவே நம் மரபணுக்களில் நீரிழிவுநோய்க்கான தன்மை இருக்கும்போது மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களும் சேரும்போது 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரைநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் 30 ப்ளஸ்சிலும், வாழ்வியல் மாற்றங்கள் இருப்பதாக உணர்பவர்கள் 40 ப்ளஸ்சிலும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்ப்பது அவசியம்.

    ×